வல்லினத்தின் விருது

கட்டுரைகள்

2.11.2014ல் வல்லினம் இலக்கியக்குழு முதன் முறையாக வல்லினம் விருது வழங்கும் நிகழ்வை நடத்துகிறது. விருது தொகையாக 5000 ரிங்கிட்டுடன் .ரெங்கசாமி அவர்களின் ஆவணப்படம் மற்றும் அவரது வாழ்வைச்சொல்லும் நூலும் இந்நிகழ்வில் வல்லினம் குழுவினர் மூலம் வெளியீடு காண்கிறது.

இதே நிகழ்வில் இயக்குனர் லீனா மணிமேகலையும் கலந்துகொண்டு தனது ஆவணப்படங்கள் குறித்த அறிமுகத்தைச் செய்வார். அவருடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடைப்பெறும். செங்கடல் மற்றும் வெள்ளை வான் கதைகள் என ஈழ மக்களின் துயரை பதிவு செய்துள்ள லீனா மணிமேகலையுடனான அனுபவத்தைப் பகிர நல்ல வாய்ப்பு.

வல்லினம் ஆறாவது ஆண்டாக நடத்தும் கலை இலக்கிய விழாவில் இந்த அங்கங்கள் இடம்பெறுகின்றன.

கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் மதியம் 2.00 முதல் மாலை 5.00 வரை நடைப்பெறும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.

அனைத்துத் தொடர்புக்கும் : .நவீன் 0163194522

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *