‘குழந்தைப் போராளி’ நூல் வெளியீட்டு நிகழ்வு

அறிவித்தல்கள்

குழந்தைப் போராளி’, ‘நான் ஒரு மனு விரோதன்’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு தேசம் சஞ்சிகையினால் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சைனா கெய்ரெற்ஸி என்பவரால் டொச் மொழயில் எழுதப்பட்ட இந்நூல் சுவிஸ் தேவா அவர்களினால் “குழந்தைப் போராளி” என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. ‘நான் ஒரு மனு விரோதன்’ என்ற மற்றைய நூல் ஆதவன் தீட்சன்யா வழங்கிய நேர்காணல்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது.

“குழந்தைப் போராளி” நூல் வெளியீட்டு அமர்விற்கு ராகவன் தலைமை தாங்ககுகிறார். அந்நூலை பௌசர், சந்தோஸ் ஆகியோர் ஆய்வு செய்கிறார்கள். ‘நான் ஒரு மனு விரோதன்’ நூல் வெளியீட்டு அமர்வு ஆர் புதியவன் தலைமையில் நடைபெறுகிறது. சபா நாவலன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோர் அந்நூலை ஆய்வு செய்கிறார்கள்.

குழந்தைப் போராளி

குழந்தைப் போராளி’

காலம் : 24 பெப்ரவரி 2008, மாலை 2:30

இடம் .  Quackers House Bush Road, Wanstead, London, E11 3AU(Nearest Tube: Leytonstone – Central Line (5 min walk)Buses : 257, W19, 145, 66 (Greenman Roundabout)

குழந்தைப் போராளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *