அன்னையரும் தலைவனும் -சுகன்

கட்டுரைகள்

அன்னையரும்  தலைவனும்

ங்காதேவி நான்காவது முறையாகவும்
கருத்தரித்தாள்.

மூன்று மாவீரர்களைப் பெற்ற தாயென்று
ஏற்கனவே அவள் அறியப்பட்டிருந்தாள்.

இம்முறை
பணிமனையிலிருந்து சேவகர்கள் வந்து
குழந்தை பிறந்தவுடன் வாங்கிப் போயினர்.

ஏனெனில்
கங்காதேவி தானே குழந்தையைக் கொண்டுவந்து
போராட்டத்திற்குத் தருவாள் என்று
அவர்கள் நம்பத் தயாரில்லை.

கங்கா தேவி ஐந்தாவது முறையாகவும்
கருத்தரித்தாள்.

சூரியப் புதல்வனே ! சூரியப் புதல்வனே !
என கங்கா தேவி ஓலமிட்டாள் .
இரணைக் குழந்தைகளைப் பெற்றாள் .

இம்முறை தலைவரே வந்து
கங்கா தேவியை மீண்டும் கன்னியாக்கிவிட்டு
குழந்தைகளைப் பெற்றுச் சென்றார்.

5 thoughts on “அன்னையரும் தலைவனும் -சுகன்

  1. Simply the best bro. Watch Ur back. Boss(Prabakaran) is very angry with U. Before he order for Ur assasination his bodyguards may atttempt to kill U. So beware. Exercise caution.
    Insurance for life is recommended.

  2. மூன்று மாவீரா;களைப்பெற்ற தாயென்ற ஏற்கனவே அறியயப்பட தாய் எப்படி தலைவரால் கன்னியாக்கப்பட்டாள்?

    சுகன் நீங்கள் சொல்ல விரும்புறதை குறைநினைக்காமல் சோபாசக்தியிட்ட சொல்லி விரிவா எழுதச்சொல்லுங்களேன்.
    எங்களுக்கும் விளங்கிக்கொள்ள ஆசையிருக்காதா என்ன?

    தந்தை செல்வா முணுமுணுக்கிறதை தளபதி அமிர் உரத்துச்சொல்ல கேட்டுப்பழகிபோன காதுகள்..
    தயவு செய்து அருள்கூருங்கள் …

  3. தந்தை செல்வா என்னத்தை சொன்னாரோ?… தளபதியார் சொன்னதை கேட்டோம். இப்ப சூரியதேவனிட்ட பிள்ளைகளை பறி(லி) கொடுக்கிறம். தேவனின் கைபட்டா கன்னி மட்டுமென்ன கடவுளாயும் மாறிவிடுவமெண்டுதானே கட்டின தாலியையும் கழற்றி போடுறாளவை எங்கட பத்தினிகள். பிளேனால குண்டு போட்ட செய்தியை ஐரோப்பிய நாடொன்றிலிருந்து முதன்முதல் எனக்கு தொலைபேசியில் சொன்ன என் நண்பர் சொன்னததை அப்படியே சொல்கிறேன்-“அந்த விழுவான்கள் என்ன புளுடா விடுறான்களோ தெரியாது மச்சான்… என்ர வேசை நாளைக்கு தாலிக்கொடியை கழற்றி போடபோறன் என்டெல்லோ ஊருக்கு பவுசு காட்ட போறாள்.”

  4. ரகு இல்லாத சத்திய கடதாசி சோபை இழந்து விட்டது.
    உண்மையில் அவருக்கு நகச்சுத்து தானா?
    அல்லது பாரிஸ் கைதுகள் அவரையும் வெருட்டிவிட்டதா?

  5. சுகன்
    இனியாவது கங்காதேவிகள் தங்களுடன் எப்போதும் ஆணுறைகளை வைத்திருக்கட்டும்.

Comments are closed.