.
Cannes 2010 திரைப்பட விழாவில் தேர்வாகித் திரையிடப்பட்ட பிரதீபன் ரவீந்திரனின் குறும்படம், மற்றும் Directors Fortnight பிரிவில் தேர்வாகிய ஆறு குறும்படங்களின் பிரத்தியோகக் காட்சி:
30.05.2010 ஞாயிறு, பி.ப: 2.30
Forum des images
Forum des Halles2, Rue du Cinema
Paris - 75004
மேற்கின் அகதி வாழ்வில் தங்களைத் தொலைத்துக்கொண்டவர்களின் விலகிப்போன நினைவுகளும் வரண்டு கிடக்கும் கனவுகளும்…
இயக்கம்: பிரதீபன் ரவீந்திரன்
ஒளிப்பதிவு: கிருஷ்ணா நாகன்பிள்ளை
படத்தொகுப்பு: முத்துலஷ்மி வரதன்
தயாரிப்பு: Exil image [...]
May 25th, 2010 | :
கட்டுரைகள் |
- ஷோபாசக்தி
மே 17 - 19ம் தேதிகளில் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு நடந்து முடிந்ததாக செய்திகள் வந்திருக்கின்றன. நாடு கடந்த அரசின் இடைக்கால நிறைவேற்று இயக்குனராக விசுவநாதன் உருத்திரகுமாரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இப்போது அவர்கள் தமிழீழ அரசுக்கான அரசியல் சாசனத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனக்கு என் தந்தையின் ஞாபகம் வருகிறது.
படித்துக்கொண்டிருந்த நான் நான் சொல்லாமல் கொள்ளாமல் இயக்கத்துக்குப் போனதால் என் அப்பாவுக்கு என்மீது கோபம் ஏற்பட்டிருந்தது நியாயமானதுதான். [...]
‘எதுவரை?’ மே - ஜுன் 2010 இதழில் வெளியாகிய ஷோபாசக்தியின் நேர்காணல். நேர்கண்டவர்: எம். பெளஸர். ‘எதுவரை?’ இதழைப் பெற்றுக்கொள்ள: eathuvarai@gmail.com - அழைக்க: 07912324334 (U.K) 0773112601 (இலங்கை) 9443066449 (இந்தியா).
என்னுடனான உரையாடலின் போது வாசிப்பு மீதான உங்களது தீராத ஆவலை வெளிப்படுத்தியதுடன் இலக்கியப் பிரதியை எழுதுவது என்பது உங்களுக்கு சலிப்பூட்டக் கூடிய வேலை என்றும் சொல்லியுள்ளீர்கள். ஆனால் சர்ச்சைக்குரிய பல்வேறு விவாதங்களில் மிக ஆர்வத்துடன் நீங்கள் இறங்குவதிலும் கருத்துப் போர்களை [...]
May 14th, 2010 | :
கட்டுரைகள் |
- G K Rao
If magic realism blends magical elements into a realistic atmosphere to get a deeper understanding of reality, perhaps the expression “nightmare surrealism” should be used to describe the living nightmare that has been northern Sri Lanka in the long night of the civil war. Shobasakthi’s Traitor begins quietly in the abortion centre [...]
May 13th, 2010 | :
கட்டுரைகள் |
- ஷோபாசக்தி
1977ம் வருடம் ஓகஸ்ட் மாதம் 16ம் தேதி இலங்கை முழுவதும் தமிழர்கள் மீதான இனப்படுகொலை திட்டமிட்டவகையில் இலங்கை அரசபடையினராலும் சிங்கள இனவெறியர்களாலும் தொடக்கப்பட்டபோது எனக்குப் பத்து வயது. எங்களது கிராமத்திலிருந்து பலர் கொழும்புக்கும் சிங்கள நாட்டுப் பக்கங்களுக்கும் சென்று அங்கே கூலித் தொழிலாளர்களாகவும் கடைச் சிப்பந்திகளாகவும் வேலை செய்துகொண்டிருந்தார்கள். எங்களது கிராமமே அப்போது இழவுக்கோலம் கொண்டிருந்தது. தங்களது கணவன்மார்களையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் நினைத்துப் பெண்கள் நாள் முழுவதும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள் வானொலியில் செய்திகளை விடாமல் கேட்டுக்கொண்டிருந்தார்கள். [...]