புலி ஆதரவாளர்கள் தம்மை சுய பரிசோதனை செய்ய வேண்டும்

-ஆளூர் ஷாநவாஸ் அ.மார்க்ஸ், தமது இலங்கைப் பயண அனுபவங்களைப் பற்றி பேசுகின்ற போது, அங்கே தாம் கண்ட அவலங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தி வருகின்றார்.தமிழர்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாத அரசின் பயங்கரவாத செயல்களை அவர் அதிகம் அதிகம் பதிவு செய்துள்ளார். மலையகத் தமிழர்களின் நிலையைப் பற்றி பேசி உள்ளார் . தமிழ் முஸ்லிம்களின் அவலங்களைப் பதிவு செய்துள்ளார். ஒரு வரலாற்று ஆய்வாளர் என்ற முறையிலும்,அரசியல் விமர்சகர் என்ற வகையிலும் அங்கே தான் கண்ட அனைத்தையும் தன் பார்வையில் எடுத்துரைக்கிறார்.தமிழர்களின் […]

Continue Reading

Sri Lanka’s civil war up close & personal

– Deepak Narayanan Shobasakthi’s second novel, Traitor, narrates the story of Nesakumaran, the only boy in the Tamil-dominated Palmyra Palm Island — off Sri Lanka’s northern coast — who’s studying to become a priest. He, however, ends up as a child soldier for the Liberation Tigers of Tamil Ealam (LTTE) instead. The story of Traitor […]

Continue Reading

ஆளில்லாத ஊரில் நரி நாட்டாமை

– ஷோபாசக்தி லீனா மணிமேகலை மீது ம.க.இ.கவினரின் வினவு இணையத்தளத்தில் எழுதப்பட்ட ஆபாச வசைகளையும் ஆணாதிக்க வக்கிரங்களையும் தொகுத்து நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகமே உருவாக்கலாம். அந்தப் புத்தகம் சாருநிவேதிதாவின் ‘ராசலீலா’ நாவலைவிட நிச்சயமாகக் கேவலமாயிருக்கும். அந்தக் கேடுகெட்ட வசைகளைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் வினவுவின் இணையத்தளத்தில் அவற்றைப் படித்தறிந்துகொள்ளுங்கள். வினவுவைப் போன்று நேரடியாக இல்லாமல் புனைவு என்ற போர்வைக்குள் மறைந்திருந்து நர்சிம் என்ற வலைப்பதிவாளர் சக பதிவரான சந்தனமுல்லையை அவதூறு செய்து மிகக் கேவலமான […]

Continue Reading

நாடு கடந்த தமிழீழ அரசு

மே 17 – 19ம் தேதிகளில் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு நடந்து முடிந்ததாக செய்திகள் வந்திருக்கின்றன. நாடு கடந்த அரசின் இடைக்கால நிறைவேற்று இயக்குனராக விசுவநாதன் உருத்திரகுமாரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இப்போது அவர்கள் தமிழீழ அரசுக்கான அரசியல் சாசனத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனக்கு என் தந்தையின் ஞாபகம் வருகிறது. படித்துக்கொண்டிருந்த நான் நான் சொல்லாமல் கொள்ளாமல் இயக்கத்துக்குப் போனதால் என் அப்பாவுக்கு என்மீது கோபம் ஏற்பட்டிருந்தது நியாயமானதுதான். […]

Continue Reading

இனப்படுகொலை ஆவணம்

– ஷோபாசக்தி 1977ம் வருடம் ஓகஸ்ட் மாதம் 16ம் தேதி இலங்கை முழுவதும் தமிழர்கள் மீதான இனப்படுகொலை திட்டமிட்டவகையில் இலங்கை அரசபடையினராலும் சிங்கள இனவெறியர்களாலும் தொடக்கப்பட்டபோது எனக்குப் பத்து வயது. எங்களது கிராமத்திலிருந்து பலர் கொழும்புக்கும் சிங்கள நாட்டுப் பக்கங்களுக்கும் சென்று அங்கே கூலித் தொழிலாளர்களாகவும் கடைச் சிப்பந்திகளாகவும்  வேலை செய்துகொண்டிருந்தார்கள். எங்களது கிராமமே அப்போது இழவுக்கோலம் கொண்டிருந்தது. தங்களது கணவன்மார்களையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் நினைத்துப் பெண்கள் நாள் முழுவதும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள் வானொலியில் செய்திகளை விடாமல் […]

Continue Reading