எனது நூல்களைப் பெற
B74, பப்பு மஸ்தான் தர்கா,
லாயிட்ஸ் சாலை
சென்னை - 600 005
பேச:00 91 94442 72500
மின்னஞ்சல்: karppu2004@rediffmail.com
குறிப்பு இத்தளத்தில் பதிவேறும் எனது பனுவல்களை அனுமதியின்றியே எவரும் பயன்படுத்தலாம், மறுபிரசுரம் செய்யலாம்.
|
July 24th, 2010 | : நேர்காணல்கள் |
கிளிநொச்சி, இரத்தினபுரத்தில் பிறந்த தீபச்செல்வன் கவிதை, பத்தி எழுத்து, ஆவணப்படம், திறனாய்வு, ஊடகவியல் எனப் பல்துறைகளில் இயங்கிக்கொண்டிருப்பவர். ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ (காலச்சுவடு 2008), ‘ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்’ (உயிர்மை 2009), ‘பாழ் நகரத்தின் பொழுது’ (காலச்சுவடு 2010) ஆகிய நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. போரைக் குறித்தும் போரின் வடுவைக் குறித்தும் அலைந்து திரியும் ஏதிலி வாழ்வு குறித்தும் தொடர்ச்சியாக எழுதிவரும் தீபச்செல்வன் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராகவும் செயற்பட்டவர். ‘தீபம்’ என்ற [...]
July 20th, 2010 | : நேர்காணல்கள் |
மலேசியத் தமிழ் இலக்கியப் பரப்பில் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் இளைஞர்களின் அடையாளம் ம. நவீன். கவிதை, சிறுகதை, நாவல், பத்தி எழுத்து என இடையறாது எழுதிக்கொண்டிருக்கும் நவீன் ‘வல்லினம்’ (vallinam.com.my) இணைய இதழின் ஆசிரியராகவும்
‘முகவரி’ எனும் மாதத்திற்கு இரு முறை வெளிவரும் இதழின் ஆசிரியராகவுமிருக்கிறார். ‘வல்லினம்’ பதிப்பகத்தின் மூலம் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த ஆண்டுத் தொடக்கத்தில் சிலாங்கூர் மாநில அரசால் வழங்கப்பட்ட தமிழ் மொழிக்கான ‘இளம் கவிஞர் விருது’ நவீனுக்குக் கிடைத்தது. ‘தாமான் [...]
June 11th, 2010 | : கட்டுரைகள் |
- Deepak Narayanan
Shobasakthi’s second novel, Traitor, narrates the story of Nesakumaran, the only boy in the Tamil-dominated Palmyra Palm Island — off Sri Lanka’s northern coast — who’s studying to become a priest. He, however, ends up as a child soldier for the Liberation Tigers of Tamil Ealam (LTTE) instead.
The story of Traitor is also [...]
June 7th, 2010 | : அறிவித்தல்கள் |
- ஷோபாசக்தி
நான் 1993 மார்ச் மாதம் பிரான்ஸுக்கு வந்து சேர்ந்தேன். நண்பர்கள் தங்கியிருந்த சிறிய அறையில் எனக்கும் படுத்துக்கொள்ள ஒரு மூலை கிடைத்தது. நண்பர்களும் விசா, வேலைப் பிரச்சினைகளில் திணறிக்கொண்டிருந்தார்கள். நான் அகதித் தஞ்சம்கோரி மனுத் தாக்கல் செய்திருந்தேன். அகதித் தஞ்சம் கிடைக்கும்வரை வேலை செய்ய அனுமதி கிடையாது. நண்பர்களின் உதவியால் ‘பேப்பர்’ போடும் வேலையொன்று கிடைத்தது. சட்டவிரோதமான வேலையென்பதால் மிகக் குறைந்தளவு ஊதியமே கிடைத்தது. அதையும் இழுத்தடித்துத்தான் தருவார்கள். அந்த வேலையில் கிடைத்த சொற்ப ஊதியம் [...]
‘எதுவரை?’ மே - ஜுன் 2010 இதழில் வெளியாகிய ஷோபாசக்தியின் நேர்காணல். நேர்கண்டவர்: எம். பெளஸர். ‘எதுவரை?’ இதழைப் பெற்றுக்கொள்ள: eathuvarai@gmail.com - அழைக்க: 07912324334 (U.K) 0773112601 (இலங்கை) 9443066449 (இந்தியா).
என்னுடனான உரையாடலின் போது வாசிப்பு மீதான உங்களது தீராத ஆவலை வெளிப்படுத்தியதுடன் இலக்கியப் பிரதியை எழுதுவது என்பது உங்களுக்கு சலிப்பூட்டக் கூடிய வேலை என்றும் சொல்லியுள்ளீர்கள். ஆனால் சர்ச்சைக்குரிய பல்வேறு விவாதங்களில் மிக ஆர்வத்துடன் நீங்கள் இறங்குவதிலும் கருத்துப் போர்களை [...]
May 25th, 2010 | : கட்டுரைகள் |
- ஷோபாசக்தி
மே 17 - 19ம் தேதிகளில் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு நடந்து முடிந்ததாக செய்திகள் வந்திருக்கின்றன. நாடு கடந்த அரசின் இடைக்கால நிறைவேற்று இயக்குனராக விசுவநாதன் உருத்திரகுமாரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இப்போது அவர்கள் தமிழீழ அரசுக்கான அரசியல் சாசனத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனக்கு என் தந்தையின் ஞாபகம் வருகிறது.
படித்துக்கொண்டிருந்த நான் நான் சொல்லாமல் கொள்ளாமல் இயக்கத்துக்குப் போனதால் என் அப்பாவுக்கு என்மீது கோபம் ஏற்பட்டிருந்தது நியாயமானதுதான். [...]
June 2nd, 2010 | : கட்டுரைகள் |
- ஷோபாசக்தி
லீனா மணிமேகலை மீது ம.க.இ.கவினரின் வினவு இணையத்தளத்தில் எழுதப்பட்ட ஆபாச வசைகளையும் ஆணாதிக்க வக்கிரங்களையும் தொகுத்து நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகமே உருவாக்கலாம். அந்தப் புத்தகம் சாருநிவேதிதாவின் ‘ராசலீலா’ நாவலைவிட நிச்சயமாகக் கேவலமாயிருக்கும். அந்தக் கேடுகெட்ட வசைகளைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் வினவுவின் இணையத்தளத்தில் அவற்றைப் படித்தறிந்துகொள்ளுங்கள்.
வினவுவைப் போன்று நேரடியாக இல்லாமல் புனைவு என்ற போர்வைக்குள் மறைந்திருந்து நர்சிம் என்ற வலைப்பதிவாளர் சக பதிவரான சந்தனமுல்லையை அவதூறு செய்து மிகக் கேவலமான பிரதியொன்றை [...]
|
|