கடந்தவை

எனது நூல்களைப் பெற

"

B74, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை சென்னை - 600 005 பேச:00 91 94442 72500 மின்னஞ்சல்: karppu2004@rediffmail.com

மின்நூல்கள்

குறிப்பு

இத்தளத்தில் பதிவேறும் எனது பனுவல்களை அனுமதியின்றியே எவரும் பயன்படுத்தலாம், மறுபிரசுரம் செய்யலாம்.


பா.செயப்பிரகாசத்துக்கு மறுப்பு

By ஷோபாசக்தி
1980களில் ஈழப்போராளிகள் தமிழகத்தை ‘பின்தளம்’ என்றே குறிப்பிடுவார்கள். ஈழப்போராட்டத்தில் தமிழக மக்களுடைய வகிபாகம் அளப்பெரிது. தமிழகத்துக் கட்சித் தலைவர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள்,

பா.செயப்பிரகாசத்துக்கு மறுப்பு

பரபாஸ்

நீங்கள் சந்தியாப்புலத்திற்குப் போயிருக்கமாட்டீர்கள்! இப்போது சந்தியாப்புலத்தில் கடற்படையினர் மட்டுமேயிருக்கிறார்கள். உருக்கெட்டுக் கிடக்கும் சந்தியோகுமையர் தேவாலய மண்டபத்தில்தான் படையினரின் தலைமையகம் இயங்குகின்றது.

பரபாஸ்

பரபாஸ்

By ஷோபாசக்தி
“பொந்தியோ பிலாத்து அவர்களை நோக்கி; எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாஸையோ? கிறிஸ்து எனப்படுகிற இயேசுவையோ என்று கேட்டான்”

Action
March 11th, 2010 | : கட்டுரைகள் |

ஹெலன் டெமூத்:மேலும் ஆதாரங்கள்

ப.வி.ஸ்ரீரங்கன்
ஷோபாசக்தியிடம் ஆதாரம் காட்ட முடியுமாவென வினவிக்கொள்வதால் உண்மைகளுக்கு மொட்டாக்குப் போடமுடியாது.ஹெலேனா டெமுத்துக்கும் மார்க்சுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நாம் புனிதக் காவற்கோட்டைக் காவலர்களாக முடியாது.
அதுபோலவேதாம்கிட்லர்-ஸ்ராலின்பஃக் ஒப்பந்தம்.போலந்தில் நிகழ்ந்த படுகொலைகளை புதைத்துவிட்டு மனித விடுதலை குறித்துப் பேசுவது வேடிக்கை.இவற்றை எந்த அரசியலினதும் பெயராலும் எவரும் நியாயப்படுத்தலாம். ஆனால்,அவை மனித வளர்ச்சிக்கு உதவாது.மார்ஸ் மீதோ அல்லது லெனின், மாவோ,ஸ்ராலின்மீதோ துதிக்கத்தக்க வழிபாடு அவசியமில்லை!அரசியல்ரீதியாகவும்,வியூக ரீதியாகவும் தவறுகளென்பது [...]

March 9th, 2010 | Tags: , , | : கட்டுரைகள் |

அன்புள்ள ஹெலன் டெமூத்

அன்னையே!
நான் உங்களைப் பற்றி எழுதிய ஒரு குறிப்பால் கடந்த சில நாட்களாக ‘தேசம்’ இணையத்தளத்திலும் நேற்றுமுதல் ‘தமிழ் அரங்கம்’ இணையத்தளத்திலும் நீங்கள் சந்திக்கும் அவமதிப்புகளையிட்டு மனம் பதைபதைத்து  இந்தக் கடித்தை உங்களுக்கு  எழுதுகிறேன்.
நான் பத்து வருடங்களிற்கு முன்புதான் முதன்முதலாக உங்களது பெயரை ஷீலா ரௌபாத்தம் எழுதிய ‘அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்’ என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து அறிந்துகொண்டேன். அந்த நூலின் 70வது பக்கத்தில் ஷீலா ரௌபாத்தம் இவ்வாறு உங்களைக் குறித்து எழுதியிருந்தார்:
“1845ல்  மார்க்ஸும் திருமதி மார்க்ஸும் புலம் [...]

March 8th, 2010 | : லீனா மணிமேகலை |

தேசம் நெட்டின் கோழைத்தனம்!

-லீனா மணிமேகலை
பழி நாணுவார் என்ற தோழர் ஷோபாசக்தியின் கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களில் என்னைப் பற்றிய அவதூறுகளுக்கான பதிலாக “அவதூறு என்பது பலவீனர்களின் முதலும் கடைசியுமான ஆயுதம்” என்ற என் கருத்தை, உங்களால் அவமரியாதை செய்யப்பட்டவர் என்ற வகையில் என் மறுப்புரையை, உங்கள் தளத்தில், பின்னூட்டமாக ஏன் வெளியிட மறுத்தீர்கள் ஜெயபாலன்?
மட்டறுப்பு என்பது முதுகெலும்பை கழற்றி வைப்பதற்கென்றால், ஜெயபாலன் அவர்களே, உங்களுக்கெல்லாம் எதற்கு ஒரு இணையதளம், செய்தி, கட்டுரை, விவாதம் மண்ணாங்கட்டியெல்லாம்?
ஒருவரைப் பற்றிய அவதூறுகளையும், வதந்திகளையும் எந்தவித தயக்கமும் [...]

March 7th, 2010 | : கட்டுரைகள் |

பாவம் ஜெயபாலன்

- ஷோபாசக்தி
எனது வலைத்தளத்தில் எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் மற்றும் ‘தேசம் நெற்’ உட்பட சில இணையத்தளங்களை நான் விமர்சித்துப் ‘பழி நாணுவார்’ என்ற கட்டுரையை வெளியிட்ட உடனேயே சூட்டோடு சூடாக அக்கட்டுரையை ‘தேசம் நெற்’றில் அதன் ஆசிரியர் த. ஜெயபாலன் மறுபிரசுரம் செய்தார். முன்னொருமுறை ‘தேசம் நெற்’றில் என் குறித்து யமுனா எழுதிய கலப்பிடமில்லாத அவதூறுக் கட்டுரையொன்றிற்கு நான் வரிவரியாக விரிவான மறுப்பை எழுதி என் வலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டு அதைத் தேசத்தில் மறுபிரசுரம் செய்யுமாறு அப்போதைய தேசம் [...]

March 6th, 2010 | : படித்ததில் பிடித்தது |

படித்ததில் பிடித்தது

ஆரம்பத்தில் ஹிப்பிதலையன் சாய்பாபாவுக்கு சொம்பு தூக்கிகொண்டு பதிவுகளில் பாபாவின் மகிமையோ மகிமை என்று எழுதி வந்ததும் இதே சாரு தான், பிறகு திருவண்ணாமலை சித்தர் புகழ் பாடியதும் இதே சாரு தான்! அந்த சித்தர் எனது நண்பர்களின் பணம் வாங்குகிறார் என்று பல்டி அடித்ததும் இதே சாரு தான்!
http://valpaiyan.blogspot.com/2010/03/charu.html

March 4th, 2010 | : கட்டுரைகள் |

பழி நாணுவார்

- ஷோபாசக்தி
இந்தக் கட்டுரை இரு பகுதிகளாலானது. கட்டுரையின் இரண்டாவது பகுதி, உருவாகிவரும் ‘செங்கடல்’ திரைப்படம் குறித்தும் நான் படப்பிடிப்பில் ஊதியம் கேட்ட தொழிலாளர்களைத் தாக்கினேன் என்றும் கடந்த இரண்டு மாதங்களாகப் பத்திரிகைகளிலும் இணையங்களிலும் வெளியான செய்திகளின் / விமர்சனங்களின் யோக்கியதையை ஆராய்வது. முதற்பகுதி, எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் இப்போது இணையத்தளங்களில் என்மீதும் எனது தோழர்கள் மீதும் படுதீவிரமாகச் செய்துவரும் சேறடிப்புகளிற்கான எதிர்வினை.
கட்டுரையின் முதற் பகுதியான யமுனா ராஜேந்திரன் மீதான எதிர்வினையைப் படிக்கும்போது “என்ன இவன் எப்போது பார்த்தாலும் [...]

February 11th, 2010 | : கட்டுரைகள் |

கொலைநிலம்

‘வடலி’ பதிப்பகத்தாரின் பதிப்புரையிலிருந்து:

துவக்குகளுக்கு அஞ்சி
கருத்துகளைச் சொல்ல முடியாது
மரணித்தவர்களுக்கும்
மௌனித்தவர்களுக்கும்
இந்நூல் காணிக்கை…
இலங்கைத் தீவில் ஒரு சிறிய இனத்தின் உரிமைச் சமரை உலகப் பேரினவாதங்கள் துவக்குகளின் முனையில் ஒடுக்கியிருக்கின்றன. ராஜபக்சே சிங்களத்தின் நவீன துட்டகைமுனுவாக உருவெடுத்திருக்கிறார். தீவின் தமிழ் பேசும் மக்களிற்கான அரசியல் பேரம் பேசும் சக்தி வெற்றிடமாக இருக்கும் நிலையில் எதிர்காலம் என்பது மிகுந்த கவலை அளிப்பதாய் உள்ளது.
புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகான இக்காலகட்டத்தில் பிரபாகரன், ராஜபக்சே என்ற இரண்டே சதுரங்களுக்குள் எல்லாமும் அடக்கப்படுகின்றன. அல்லது அந்தக் கட்டங்களுக்கு வெளியே வருவதை [...]

February 10th, 2010 | : தோழமைப் பிரதிகள், ராஜன் குறை |

தமிழ் நவீனத்துவ இலக்கியம், “தேசிய நீரோட்டம்”, திராவிட இயக்கம்

ராஜன் குறை
உயிர் எழுத்து ஆகஸ்ட்இதழில் வெளியான கண்ணனின் “உலக மொழிகளில் தமிழ்ப் படைப்புகள்” என்ற கட்டுரையை முன்னிட்டு சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். அவரது ஆதங்கங்களும், அக்கறைகளும் எனக்கு உடன்பாடானவையே. தமிழ் படைப்பிலக்கிய சாதனைகள் உலகில் அறியப்படவேண்டும் என்பதில் எனக்கும் ஆர்வமும், அதற்காக என்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உண்டு. மேலும் கண்ணன் படைப்பின் தரம், மொழிபெயர்ப்பின் தரம், பதிப்பின் தரம் என்ற அளவில் அல்லாமல் சமூக வரலாற்று பின்னணியில் ஏன் தமிழிலக்கியத்தை [...]

February 10th, 2010 | : தோழமைப் பிரதிகள், ராஜன் குறை |

இயங்கியல், அமைப்பியல் மற்றும் தேசம்

ராஜன் குறை

பேராசிரியர் தமிழவன் தீராநதி ஜனவரி 2010 இதழில் எனது “மொழியுணர்வும், தேசியமும்: அண்ணா, தமிழவன், ஆண்டர்சன்” என்ற நவம்பர் 2009 தீராநதி இதழ் கட்டுரை குறித்து பொறுமையாகவும், பெருந்தன்மையாகவும் சில கருத்துக்களை கூறியுள்ளார். அதையொட்டி, இந்த உரையாடலைக் கவனித்து வரும் வாசகர்களின் பொருட்டு என்னுடைய சில சிந்தனைகளை மீண்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன். முதலில் சுருக்கமாக எனக்கும் தமிழவனுக்கும் இருக்கும் கருத்து மாறுபாடுகளை விளக்கக்கூடிய சில தத்துவப் பின்னனிகளைக் காண வேண்டும்.
அமைப்பியல் என்பது ஒரு நல்ல [...]

November 19th, 2009 | : நேர்காணல்கள் |

என்னுடைய தேசிய இனம்: இலங்கை அகதி

நேர்காணல்: மீனா
ஈழத்தின் மரணப் போராட்டங்களை; சாதிய, இன, அதிகார வெறிகளால் மக்களுக்கு நேர்ந்த அவலங்களை, பிறந்த மண்ணைப் பிரிந்த அகதியின் மனநிலையை; அழுகுரலெடுக்கும் பெருஓலங்களாலோ, ரத்தக் கண்ணீர்களாலோ அல்லாமல் அசாதாரண எழுத்துகளால் உறைய வைத்து நமது நனவிலியைப் பிடித்தாட்டிய தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லி, ஷோபாசக்தி. நவீன இலக்கியத்தில் தனி முத்திரையைப் பதித்ததோடு இடதுசாரி அரசியல் வழிநின்று அரச பயங்கரவாதத்துடன் புலிகளின் பயங்கரவாதத்தையும் தொடர்ந்து கண்டித்து வருகிற வகையில், புலிகளைப் புனிதத் திருஉருக்களாக கட்டமைப்பவர்களால் உட்செரிக்க இயலாதவர். பதினைந்து [...]

September 3rd, 2009 | : நேர்காணல்கள் |

நான் எப்போது அடிமையாயிருந்தேன்!

நேர்காணல்: புஸ்பராணி
ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர் தோழியர் புஸ்பராணி. தலைமறைவுப் போராளிகளிற்குச் சோறிட்டு வீட்டிற்குள் தூங்கவைத்துவிட்டு, பட்டினியுடன் வீட்டு வாசலில் காவலிருந்த ஒரு போராளிக் குடும்பத்தின் மூத்த பெண்பிள்ளை. ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்” தந்த மறைந்த தோழர் சி.புஸ்பராஜாவின் மூத்த சகோதரி. அறுபது வயதை நெருங்கும் பராயத்திலும் அரசியற் கூட்டங்கள், இலக்கியச் சந்திப்புகள், பெண்கள் சந்திப்புகள், தலித் மாநாடுகள் என உற்சாகமாகத் தனது பங்களிப்பைச் செலுத்திக்கொண்டிருப்பவர். தனக்குச் சரியெனப்பட்டதை எந்தச் சபையிலும் சந்தர்ப்பத்திலும் எதற்கும் அஞ்சாமல் [...]

September 5th, 2009 | : அறிவித்தல்கள் |

திசநாயகத்தை விடுதலை செய்!

இலங்கை அரசே! தமிழர்கள் வாழ்வுரிமைக்காக பாடுபட்ட பத்திரிகையாளர் ஜே.எஸ். திசநாயகத்தை விடுதலை செய்!

பத்திரிகை சுதந்திர பாதுகாப்புக் கூட்டம்
நாள்: செப்டம்பர் 8, 2009, செவ்வாய் காலை 10 மணி
இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம்,
அரசினர் ஓமந்தூரார் தோட்டம், சென்னை - 2
பங்கேற்பு :
திரு. இரா.ஜவஹர், மூத்த பத்திரிகையாளர்
எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர், தமுஎகச
திரு. பாரதி தமிழன், சென்னை பத்திரிகையாளர் மன்றம்
திரு. ஆர். மோகன், சென்னை பத்திரிகையாளர் சங்கம்
உங்கள் வருகையின் மூலம் ஒருமைப்பாட்டை உறுதி செய்வீர்!

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் [...]

September 11th, 2009 | Tags: , | : கட்டுரைகள் |

எனக்கு நிறையக் கண்கள்

‘வல்லினம்’ இணைய இதழ் அறிமுகம்

-கவின் மலர்

இன்றைய நிலையில் தீவிர வாசிப்புக்குரிய அனைத்து தன்மைகளோடும் ஒரு பத்திரிகை நடத்துவது என்பது அத்தனை எளிதல்ல. எந்தவித கைமாறும் எதிர்பார்க்காமல் இருந்தாலொழிய அது சாத்தியமில்லை. சிரமப்பட்டு கையிலிருந்து பணம் செலவழித்து இதழ் நடத்தி ஒரு கட்டத்தில் முடியாமல் போக அதை நிறுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் ஏற்படும் வலி ‘வல்லினம்’ ஆசிரியர் குழுவுக்கும் ஏற்பட்டிருக்கும். அதன் வாசகர்களுக்கோ அதைவிட பெரிய வலி. இருதரப்பினரின் வலிநிவாரணியாக வந்திருக்கிறது http://www.vallinam.com.my/ இணைய இதழ். காலாண்டிதழாக வந்து [...]

September 23rd, 2009 | : அ.மார்க்ஸ், கட்டுரைகள் |

அரசு, இறையாண்மை, ஆயுதப் போராட்டங்கள்

அ. மார்க்ஸ்

ஈழப் போராட்டப் பின்னணியில் இறையாண்மை (sovereignty) குறித்த பேச்சுக்கள் இன்று தமிழ்ச் சூழலில் தலைகாட்டியுள்ளன. 1970களில், வங்கப் பிரச்சினையில் (முன்னாள் கிழக்கு பாகிஸ்தான்) இந்தியா தலையிட்டு ‘வங்கதேசம்’ உருவாவதற்கு வழி வகுத்ததுபோல புலிகளுக்கு எதிரான ராஜபக்சே அரசின் வெறித்தனமான தாக்குதலில் தலையிட்டு (புலிகளின் தலைமையில்) தனி ஈழம் பெற்றுத் தரவேண்டும் என்கிற கோரிக்கையை இங்கேயுள்ள புலி ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்தபோது அரசு தரப்பில் இறையாண்மை குறித்த கதையாடல் முன் வைக்கப்பட்டது. மற்றொரு நாட்டின் இறையாண்மையில் நாம் [...]

October 9th, 2009 | : அறிவித்தல்கள் |

வல்லினம்

எழுத்தாள/வாசக நண்பர்களுக்கு வணக்கம்.
‘வல்லினம்’ மலேசியாவிலிருந்து வெளிவரும் கலை, இலக்கிய மாத இணைய இதழாகும்.
http://www.vallinam.com.my என்ற அகப்பக்கத்தில் நீங்கள் வல்லினத்தை வலம் வரலாம். தற்போது அக்டோபர் 2009 (இதழ் 10) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் வல்லினம் இதழ் புதுப்பிக்கப்படும்போது மின்னஞ்சல் வழியாக தங்களுக்குத் தகவல் அனுப்பப்படும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வல்லினம் இதழ் மற்றும் வல்லினம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்கள் மட்டுமே மின்னஞ்சலாக தங்களுக்கு அனுப்பப்படும். தங்கள் படைப்புகள் மற்றும் கருத்துக்களை editor@vallinam.com.my / na_vin82@yahoo.com.sg [...]

November 11th, 2009 | : கட்டுரைகள், ராஜன் குறை |

மொழியுணர்வும் தேசியமும்: அண்ணா, தமிழவன், ஆண்டர்சன்

-ராஜன் குறை
தமிழ் மொழியிலிருந்தே தன் அணியலங்கார அல்லது சொல்லணி (rhetoric) நடையின் மூலம், தமிழ் என்ற வித்தியாசமான குறியை உருவாக்கி மொழியுணர்வை ஆரோக்கியமான ஜனநாயக அரசியலுக்கு அடிப்படையாக அண்ணா பயன்படுத்தினார் என்பது தமிழக வரலாற்றின் முக்கியமான திருப்பு முனை. உண்மையில் தமிழர்கள் உணர்வளவில் தேசமாகிவிட்டார்கள், தேசிய அரசைத்தான் தோற்றுவிக்கவில்லை என்று சொல்லலாம். மத்திய அமைச்சரவையில் பங்குபெறும் நிலையில் தமிழகத்தில் அது இனி பிரச்சினையில்லை. ஆனால், இலங்கையில் தமிழர்கள் வரலாற்றின் முரண்களில் சிக்கி பெரும் அழிவை சந்தித்துள்ளனர். இந்த [...]

Enter your email address:

Delivered by FeedBurner