சித்திரப்பேழை

கதைகள்

‘தமிழீழத்தை ஆதரிக்கும் மாவோயிஸ்டுக்கு மணமகள் தேவை’ என்று அமரேசன் செய்திருந்த விளம்பரத்தைப் பார்த்துத்தான், முப்பது வருடங்களுக்கு முன்னால் அவரை யசோதா பதிவுத் திருமணம் செய்துகொண்டார். அப்போது அமரேசனுக்கு முப்பத்து நான்கு வயது. யசோதாவுக்கு இருபத்தெட்டு வயது. சென்ற வருடத்தின் கொடுங்குளிர் காலத்தில், அமரேசன் புற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது தொண்டையில் துளையிட்டுப் புகுத்தப்பட்டிருந்த மெல்லிய குழாய் காரணமாக அவரால் பேச முடியவில்லை. அவர் பேசுவதற்கு முயற்சிக்கவே கூடாது என்றுதான் மருத்துவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தார்கள். அந்த நிலையிலும் அமரேசனின் […]

ஆறாங்குழி

கதைகள்

இரும்பு மனிதன் எனப் பொருள்படும் ‘யக்கடயா’ என்ற பெயரால் என்னை ஒருகாலத்தில் இராணுவத்தில் அழைத்தார்கள் என்பதைத் தவிர, என்னைக் குறித்த தனிநபர் தகவல்களை நான் உங்களிடம் சொல்லப் போவதில்லை. இலங்கை வரலாற்றிலேயே நெடுங்காலம் தலைமறைவாக வாழும் மனிதன் நான்தான். முப்பத்து மூன்று வருடங்கள் மறைந்து வாழ்கிறேன். இப்போது நான் வசிக்கும் நாடு இலங்கைக்குத் தெற்குத் திசையில் உள்ளது என்பதோடு என்னுடைய அறிமுகத்தை நிறுத்திக்கொள்கிறேன். நான் வசிக்கும் கடற்கரையோர சிறு நகரத்தில் வருடம் முழுவதுமே வெயில் உண்டு. மிகப் […]

காலப்புள்ளி

கட்டுரைகள்

‘கருப்புப் பிரதிகள்’ வெளியிட்டிருக்கும் ‘டானியல் அன்ரனி கதைகள் – அதிர்வுகள் – கவிதைகள்’ தொகுப்பு நூலுக்கு எழுதிய முன்னுரை: நமது கையிலிருக்கும் இந்தச் சிறிய பிரதி டானியல் அன்ரனி அவர்களுடைய மொத்த எழுத்துகளின் ஒரு பகுதியே. கண்டடைய முடியாதவாறு தொலைந்துபோயிருக்கும் கணிசமானளவு சிறுகதைகளையும், எழுதி முடித்தும் அச்சேறாத ‘இரட்டைப்பனை’, ‘செவ்வானம்’ நாவல்களையும் கொண்டது அவரது படைப்புத் தடம். அவர் ‘அமிர்த கங்கை’ இதழில் எழுதத் தொடங்கியிருந்த குறுநாவல் தொடருக்கு ‘தடம்’ எனப் பெயரிட்டிருந்தார். அது முழுமையடையாமல் ஓர் […]

கலா கலகக்காரர்

கட்டுரைகள்

என்னுடைய பதினான்காவது வயதில், நான் முதன்முறையாக மு.நித்தியானந்தன் என்ற பெயரைக் கேள்விப்பட்டேன். இலக்கியவாதியாக அல்லாமல், ஒரு விடுதலைச் செயற்பாட்டாளராகவே அவர் எனக்குப் பத்திரிகைகள் வாயிலாக அறிமுகமானார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான அவரது உறவாலும், புலிகள் இயக்கத்தின் ஆரம்ப காலங்களிலே அவர்களுக்கு உற்ற துணையாகவிருந்ததாலும் நித்தியானந்தன் இலங்கை அரச படையினரால் கைது செய்யப்பட்டு, கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானவர் என்பதை வாரத்திற்கு ஒருதடவையாவது பத்திரிகைகள் எழுதிக்கொண்டேயிருந்தன. வெலிகடைச் சிறையில் நடந்த படுகொலைகளின் போது, ஆயுதமேந்திய கொலையாளிகளை வெற்றுக் கரங்களால் எதிர்த்துத் […]

வேர்ச்சொல் – விடுதலை சிகப்பி – வெந்து தணிந்தது காடு

கட்டுரைகள்

சென்னையில், கடந்த மாத இறுதியில் ‘நீலம் பண்பாட்டு மையம்’ ஒருங்கிணைத்த வேர்ச்சொல்- தலித் இலக்கியக் கூடுகை நிகழ்வில் ‘ஈழத் தலித் இலக்கியம்’ குறித்த அமர்வில் தோழர்கள் மு.நித்தியானந்தன், தொ. பத்திநாதன் ஆகியோரோடு நானும் உரையாற்றினேன். நேரப் பற்றாக்குறை காரணமாக, என்னுடைய உரை முழுமையுறவில்லை என்றே உணர்கிறேன். எனினும் கிடைத்த நேரத்திற்குள், ஈழத்தில் கடந்த அய்ம்பது வருடங்களில் சாதியம் எவ்வாறு தந்திரமாக – விடுதலைப் போராட்ட காலத்தையும் கடந்து – இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை விளக்க முற்பட்டேன். ஏனெனில், ஈழ […]

கருங்குயில்

கதைகள்

தன்னுடைய வீட்டின் மதிற்சுவரில், ஏன் சுற்றுலாப் பயணிகளான வெள்ளைக்காரிகள் விழுந்து புரண்டு முத்தமிடுகிறார்கள் என்பது ரவிசங்கருக்குப் புரியவேயில்லை. மூன்று மாதங்களுக்கு முன்புதான் புதிதாக வெள்ளையடிக்கப்பட்டிருந்த அந்த மதிற்சுவரில், இப்போது எண்ணிப் பார்த்தால் குறைந்தது நூறு லிப்ஸ்டிக் அடையாளங்களாவது இருக்கும். ஒரே நிறத்தில் அந்த அடையாளங்கள் பதிந்திருந்தால் கூட ஒருவேளை அதுவொரு அழகாக இருந்திருக்கக் கூடும். ஆனால், சிவப்பு, ஊதா, பச்சை, கருப்பு என எல்லா வண்ணங்களிலும் அந்தச் சுவரில் உதட்டு அடையாளங்கள் பதிந்து, குரங்கு அம்மைநோய் வந்தவனின் […]

கதையின் மொழி இசை போன்றிருக்க வேண்டும்

நேர்காணல்கள்

இச்சா, BOX, கொரில்லா உள்ளிட்ட முக்கிய நாவல்களை எழுதிய எழுத்தாளர் ஷோபாசக்தியிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையத்தளத்திற்காக உரையாடினோம். அதிலிருந்து தொகுக்கப்பட்டது. உரையாடியவர்: வாசுகி ஜெயஶ்ரீ – இலங்கையில் உங்களது சொந்த ஊர் எது? இலங்கையின் வடதிசையில் ‘பாக்’ நீரிணையில் மிதக்கும் சின்னஞ்சிறிய தீவுகளில் ஒன்றான ‘லைடன்’ தீவில் அமைந்துள்ள ‘அல்லைப்பிட்டி’ கிராமம் ஒருகாலத்தில் என்னுடைய ஊராக இருந்தது. அங்கேதான் நான் பிறந்து வளர்ந்தேன். இப்போது என்னுடைய குடும்பத்தினர் யாரும் அங்கில்லை. எங்களுடைய குடிசை வீடும் இராணுவத்தால் […]

ONE WAY

கதைகள்

அய்ரோப்பாவில் வசிக்கும் ஓர் ஈழத் தமிழருக்கு இலங்கையிலிருந்து அதிகாலையில் தொலைபேசி அழைப்பு வந்தாலே, அது மரணச் செய்தியை மட்டுமே கொண்டுவரும் என்பது புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆழமான நம்பிக்கை. அதனாலேயே, நான் இரவில் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டுத்தான் தூங்குவேன். நம்முடைய அன்புக்குரியவர்களின் மரணங்களைத் தள்ளிப்போடுவதற்காக, நாம் கோயில்களில் அர்ச்சனை செய்வது போல, மாந்திரீகத்தின் மூலம் கழிப்புக் கழிப்பது போல, அலைபேசியை அணைத்து வைப்பதும் மரணத்தைத் தடுத்துவிடும் என்றொரு நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டுவிட்டது. ஒரு வருடத்திற்கு முன்பாக, ஒரேயொரு […]

வர்ணகலா

கதைகள்

இந்தச் சிறிய கதையின் முடிவு எப்படி அமையப்போகிறது என்பதைத் தேர்ந்த வாசகரான நீங்கள் இதற்கு அடுத்தடுத்த பத்திகளில் நிச்சயமாகவே ஊகித்துவிடுவீர்கள். அய்நூறுக்கும் அதிகமானவர்கள் உட்கார்ந்திருந்த அரங்கில், மிதுனா பாலப்பா இந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்ததுமே நானும் முடிவைச் சட்டென ஊகித்துவிட்டேன். ஆனால், அந்த முடிவை நோக்கி கதை எவ்வழியால் அசையப்போகிறது என்று எனக்குப் புரியவில்லை. எனவே நான் பொறுமையாக உட்கார்ந்திருந்து மிதுனா பாலப்பா சொன்ன கதையை முழுவதுமாகக் கேட்டேன். பாரிஸிலிருந்து முந்நூற்றைம்பது கிலோமீற்றர்கள் தொலைவிலிருந்த ‘ரென்’ பல்கலைக்கழக […]

யுத்தம் கதைகளை உருவாக்கி இரகசியமாக வைத்திருக்கிறது

நேர்காணல்கள்

படைப்பு தகவு பிப்ரவரி -2023 இதழில் சுருக்கப்பட்டு வெளியாகியுள்ள நேர்காணலின் முழுமையான வடிவம் இங்கே. நேர்கண்டவர் :அம்மு ராகவ் -சினிமா, இலக்கியம், போராளி இவற்றில் எந்தவொன்றில் ஷோபாசக்தி நிறைவு பெறுகிறார்? முதலில், நான் போராளி இல்லை என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். என்னுடைய பதின்ம வயதுகளில் நான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆயுதப் பயிற்சி பெற்ற உறுப்பினனாக இருந்தேன். ஆனால், சனநாயக மத்தியத்துவமற்ற, இறுக்கமான அந்த அமைப்பில் தலைமையின் எண்ணங்களையும் கட்டளைகளையும் நிறைவேற்றும் ஆயிரக்கணக்கானோரில் நானும் […]

மெய்யெழுத்து

கதைகள்

2009 -வது வருடம், வைகாசி மாதத்தின் இறுதி நாளில்; ஓர் இளநிலை இராணுவ அதிகாரி “நாங்கள் திலீபனின் உடல் எச்சங்களைக் கைப்பற்றிவிட்டோம்” என்றொரு செய்தியை வவுனியா இராணுவ மையத்திற்கு அறிவித்தான். அப்போது மருத்துவர் ராகுலன் மனநிலை சரிந்தவர் போன்று, மணலை அள்ளித் தனது தலையில் போட்டுக்கொண்டு, குழறி அழுதவாறிருந்தார். 1977 -வது வருட இன வன்செயல்களின் பின்பாக, ராகுலனின் குடும்பம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்திருந்தது. யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் பத்தாவது வகுப்பில் சேரும்போது ராகுலனுக்கு வயது […]

எழுதுவது சிலுவையைச் சுமப்பதுபோல…

நேர்காணல்கள்

இந்து தமிழ் இதழில் 21.01.2023 அன்று வெளியான நேர்காணல் சந்திப்பு:மண்குதிரை ஷோபா சக்தி, தமிழின் புகழ்பெற்ற நாவலாசிரியர். தன் கதைகளின் மொத்த சொற்களுக்கும் உயிர் கொடுக்கும் திருத்தமான கதை சொல்லி. ‘கொரில்லா’, ‘ம்’, ‘BOX: கதைப் புத்தகம், ‘இச்சா’ என எழுதிய நாவல்கள் ஒவ்வொன்றும் பேசப்பட்டவை. சிறுகதைகள், கட்டுரைகள் எனப் பல வடிவங்களில் இயங்கிவருகிறார். சர்வதேசப் புகழ்பெற்ற கான் திரைவிழாவில் தங்கப்பனை விருதை வென்ற ‘தீபன்’ பிரெஞ்சுப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இவரது படைப்புகளை கருப்புப் பிரதிகள் […]

பல்லிராஜா

கதைகள்

நமோ தஸ்ஸ பகவதோ அரஹதோ சம்மாசம்புத்தஸ்ஸ! நான், சாக்கியமுனியும் ததாகதருமான சம்புத்தர் அருளிய தம்மம் வணங்கி; இக்காலத்தில் இலங்கைத் தீவில் பெயர் பெற்றவரும், தன்னுடைய பத்தொன்பதாவது வயதிலேயே கொடிய சித்திரவதைக் கூடத்திற்குள் இரகசியமாக வீழ்த்தப்பட்டவரும், தற்போது அய்ம்பத்தியிரண்டு கனிந்த வயதுகள் நிரம்பப் பெற்றவருமான சீவலி பால தேரரின் கதையைக் கூறத் தொடங்குகிறேன்! ஒரு தெருநாயே இலகுவாக வாயில் கவ்வி இழுத்துச் செல்லக் கூடியளவுக்குத் தான் சீவலி தேரரின் உடலிலுள்ள மொத்த எலும்புகளும் மாமிசமும் இருக்கும். கடுமையான நீண்ட […]

போரின் மிச்சங்கள்

கட்டுரைகள்

அ.சி. விஜிதரன் தொகுத்து, இம்மாதம் ‘சிந்தன் புக்ஸ்’ வெளியிட்டிருக்கும் ‘நான் ஏன் சட்டவிரோதக் குடியேறி ஆனேன்?’ நூலுக்கு நான் எழுதியிருக்கும் முகவுரை: “நீங்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நிலத்தைக் காட்டிலும் சமுத்திரம் பாதுகாப்பானதாக இல்லாவிட்டால், யாரும் தன்னுடைய குழந்தையைப் படகில் வைக்கப்போவதில்லை.” -வார்ஸன் ஸியர் தமிழகம் முழுவதுமிருக்கும் ஈழ அகதிகள் மறுவாழ்வு முகாம்களிலிருந்து கவிதைகளையும், கதைகளையும், கட்டுரைகளையும், ஓவியங்களையும் சேகரித்துத் தொகுக்கப்பட்டிருக்கும் இந்நூலில் பெருமளவு பங்களிப்புச் செய்திருப்பவர்கள் குழந்தைகளும் இளையவர்களுமே. அவர்களில் ஒருவரான ரா. விஷ்ணு […]

அண்ணாமலை என்ன, அமித்ஷா இலங்கைக்கு வந்தாலும் பலிக்காது!

நேர்காணல்கள்

12.05.2022 அன்று ஆனந்த விகடனில் வெளியான நேர்காணல். நேர்கண்டவர்: சுகுணா திவாகர் 1997-ல் தன் முதல் சிறுகதையை எழுதிய ஷோபாசக்தி, எழுத்துலகில் கால்நூற்றாண்டுப் பயணத்தைக் கடந்திருக்கிறார். தன் புதிய நாவல் பணிக்காகத் தமிழகம் வந்தவரைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலை, இலக்கியம், சினிமா என்று பல தளங்களில் கேள்விகளை முன்வைத்தேன். “இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’ “இது ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான்.இலங்கையின் இடதுசாரி அறிஞர்கள் இதுகுறித்துத் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தார்கள். 1977-ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனே […]

ராணி மஹால்

கதைகள்

அப்போது நேரம் அதிகாலை அய்ந்து மணியாகிவிட்டது. வசந்தகாலம் பிறந்திருந்தது என்றாலும், ‘செய்ன்’ நதியிலிருந்து எழுந்துவந்த ஈரலிப்பான காற்றில் குளிரிருந்தது. நதிக்கரையோரமிருந்த ஒற்றையடிப் பாதையில் அன்னராணி நடந்துவந்தார். கடந்த முப்பத்தெட்டு வருடங்களாக ஒருநாள் தவறாமல், அவர் இந்தப் பாதையில் நடக்கிறார். அன்னராணி ஒற்றையடிப் பாதையின் முடிவிலிருந்த சிறிய தார் வீதியில் ஏறி, உயரமான முன் ‘கேட்’டைத் திறந்துகொண்டு சிறிய புல்வெளியைத் தாண்டி நடந்தார். புல்வெளியில் அலங்கார மின் விளக்குகள் பிரகாசித்துக்கொண்டிருந்தன. அவரின் எதிரே கம்பீரமாக ராணி மஹால் நின்றிருந்தது. […]

அரம்பை

கதைகள்

நான் மாலையில் வீடு திரும்பும்போது, என்னுடைய குதிரை வண்டிக்குக் குறுக்கே சென்ற குடிகாரர்கள் இருவரை வண்டிச் சாரதி சவுக்கால் அடித்துவிட்டான். “இறைவனால் கட்டப்பட்ட இலண்டன் நகரம் இப்போது குடிகாரர்களதும் போக்கிரிகளதும் சத்திரமாகிவிட்டது” எனச் சலிப்பாகச் சொல்லிக்கொண்டே, இரட்டைக் குதிரைகளை அவன் விரட்டினான். விடிந்தால் 26-ம் தேதி ஜூலை 1833. பிரிட்டிஷ் சாம்ராஜியத்தின் வரலாற்றில் மிக முக்கியமான நாள். எங்களது காலனிய நாடுகளில் அடிமை முறையை ஒழிப்பதற்கான மூன்றாவது சட்டவாக்க வரைவு நாடாளுமன்றக் கீழவையான பொதுச்சபையில் விவாதத்திற்கு வரயிருக்கிறது. […]

வம்பும் வரலாறும்

கட்டுரைகள்

க.கைலாசபதியைக் குறித்த ஒரு சாதிய வம்புச் செய்தி ஏறக்குறைய அய்ம்பது வருடங்களுக்கு மேலாகவும் தமிழ் இலக்கிய உலகில் சோர்வில்லாமல் சுற்றிவருகிறது. என்.கே. ரகுநாதன் எழுதிய ‘நிலவிலே பேசுவோம்’ சிறுகதையை ஒட்டியே இந்த வம்பு எழுந்தது. ‘நிலவிலே பேசுவோம்’ கதையின் மைய இழை இதுதான்: சிவப்பிரகாசம் என்ற ஆதிக்க சாதியைச் சேர்ந்த பிரமுகர் தீண்டாமை ஒழிப்புக் குறித்துப் பொதுவெளியில் ஆவேசமாக உரை நிகழ்த்துகிறார். ஆனால், தனது வீட்டுக்கு வரும் தாழ்த்தப்பட்டவர்களை வீட்டுக்குள்ளே அனுமதியாமல் “நிலவிலே பேசுவோம் வாருங்கள்” என […]

அம்மணப் பூங்கா

கதைகள்

தவபாலன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த மனிதரின் முகத்தைப் பார்த்தபோது, எனது கண்கள் தாமாகவே திடுமென இறுக மூடிக்கொண்டன. ஏதோவொரு கிரேக்கப் புராணக் கதையில் வரும் உருவமொன்றுதான் என் ஞாபகத்தில் மின்னலாயிற்று. நான் அச்சத்துடனோ அல்லது தயக்கத்துடனோ கண்களைத் திறந்தபோது, தவபாலன் முன்போலவே தனது தலையையும் முகத்தையும் மறைத்திருந்தார். அவரது விழிகள் மட்டும் தணல் போலத் தகித்துக்கொண்டிருந்தன. அப்போது அந்தப் பூங்காவின் மேற்குப் பகுதியிலிருந்த இடிந்த கோபுரத்திலிருந்து மூன்று தடவைகள் மணியொலித்தது. எனக்கு இந்த நகரம் முற்றிலும் […]

வாழ்தலுக்கான இச்சை

கட்டுரைகள்

-ஸ்ரீநேசன் ஷோபாசக்தியின் “இச்சா” நாவலை எடுத்து மூன்று நாட்களில் படித்து முடித்தேன். ஏற்கனவே அவரது கொரில்லா, ம் -நாவல்களின் வாசிப்பு அனுபவமே இந்நாவலை வாசிக்கத் தூண்டியது. நண்பர் சீனிவாசன் நாவலை அன்பாகத் தந்து ஓராண்டை நெருங்குகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின்பான ஓய்வில் வாசிக்கப் பல நூல்களைத் தேர்ந்து கொண்டேன். அவற்றுள் இந்நாவலும் இருந்தது. சிகிச்சைக்குப் பின்பான இந்த அரை ஆண்டுக்காலத்தில் பல முக்கியமான நூல்களை வாசித்து முடித்திருக்கிறேன். ஆயிரம் பக்கத்தை நெருங்கிய ‘அசடன்’ நாவல் உட்பட. நினைக்க […]

கற்பிதங்களின் கீழே

கட்டுரைகள்

முன்னுரை: சுருக்கப்பட்ட நெடுங்கதைகள் / குமாரி / தமிழில் – ரிஷான் ஷெரிப் / வம்சி பதிப்பகம். சிங்களவரும் மனிதநேயப் பணியாளருமான குமாரி அவர்களின் இந்நூலை வாசிக்கப்போகும் தமிழ் வாசகர்களில் அநேகருக்கு ஈழப்போராட்டம், இயக்கத் தலைமைகள், போராளிகள் குறித்துப் புனிதமான கற்பிதங்கள் இருக்கக்கூடும். ஈழப் போராட்டம் ஒரு பொற்கால வரலாறாகவும், அதனுடைய தலைவர்கள் காவிய நாயகர்களாகவும் இவர்களின் மனதில் ஆழப் பதிந்துமிருக்கலாம். இந்தக் கற்பிதங்களைக் கொண்டாடும் இலக்கியவாதிகளும், ஆய்வாளர்களும், ஊடகவியலாளர்களும் தங்களது விசுவாசத்தை அழகிய எழுத்துகளாக உருமாற்றி, […]

அகதிகளுக்கான பைபிளை எழுதுகிறேன்

நேர்காணல்கள்

வனம் (பெப்ரவரி 2021) இதழுக்காக நேர்காணல் செய்தவர்கள்: சாஜித் அஹமட் – ஷாதிர் யாசீன். இருபது வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்தும் எழுத்தில் இயங்கி வரும் நீங்கள்; தற்கால இலக்கியப் போக்குகளால் சலிப்படைகிறீர்களா? சலிப்பு என்பதற்கு என் வாழ்வின் எந்தக் கட்டத்திலும் இடமே கிடையாது. சலிப்பையோ, விரக்தியையோ, உளச் சோம்பலையோ ஒருபோதுமே நான் உணர்ந்ததில்லை. கற்பனைத் திறன் உள்ளவனுடைய வாழ்க்கை வேறு. உலகம் வேறு. அவனுக்கான ஒழுங்குகளும் பழக்கவழக்கங்களும் ஒழுக்கமும் வேறு. நான் அங்கேயேதான் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறேன். பலரால் மகிழ்ச்சியை […]

முப்பது காசுப் புரட்சி

கட்டுரைகள்

‘ஆடுதல், பாடுதல், சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர், பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவார்’ என்ற பாரதியின் வாக்கை மகுட வாக்கியமாகக்கொண்டு, 1966 ஓகஸ்ட் தொடங்கி அரை நூற்றாண்டு காலம் வெளிவந்த ‘மல்லிகை’ இதழின் தனி இயங்குசக்தியாக விளங்கியவர் மறைந்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா. அவர் ‘மல்லிகைப் பந்தல்’ என்ற பதிப்பகத்தையும் உண்டாக்கி, அய்ம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டார். கடுமையான யுத்தச் சூழலிலும், விமானக் குண்டு வீச்சுகளுக்குக் கீழேயும் மல்லிகை ஓயாமல் மலர்ந்தது. மொத்தமாக […]

மூமின்

கதைகள்

இன்று அதிகாலையில், முஹமெட் அஸ்லம் வீட்டிலிருந்து புறப்பட்டபோது, அவனது பெயர் நாகநாதன் முருகவேள் துலீப் என்றுதான் இருந்தது. ஒரு மணிநேரத்துக்கு முன்புதான் அவன் பெயரை மாற்றியிருந்தான். பள்ளிவாசலிலிருந்து அவன் வெளியே வந்தபோது, பள்ளிவாசலுக்கு எதிரே நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருக்கும் காவல்துறையினரின் இரண்டு வாகனங்களுக்குள்ளும், பொலிஸ்காரர்கள் கைகளில் நவீனரகத் துப்பாக்கிகளுடன் அமர்ந்திருந்தார்கள். அந்த சிறிய பள்ளிவாசல், பாரிஸின் புறநகரான ‘லு ரன்ஸி’யில் சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்தது. பள்ளிவாசலைச் சுற்றி அரைக் கிலோ மீட்டருக்கு வெறும் புற்தரைதான். பள்ளிவாசலை குடியிருப்போடு […]

யானைக் கதை

கதைகள்

மொழியியல் பேராசிரியர் கியோம் வேர்னோ ‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்துவிட்டு, கேரளாவுக்கே சென்று ஆசான் வைக்கம் முகமது பஷீரை நேரில் தரிசித்து, பிரஞ்சு மொழியில் ஒரு நீள்கட்டுரை எழுதி வெளியிட்டவர். அநேகமாக பஷீர் சந்தித்த கடைசி வெள்ளைக்காரன் இவராகத்தான் இருப்பார். அந்தப் பேராசிரியரும் நானும் ஒரே இரயில் பெட்டியில், அதுவும் அருகருகாக அமர்ந்து பயணம் செய்வோம் என நான் ஒருபோதும் நினைத்திருந்ததில்லை. அவரைக் கண்டவுடன் நான் எழுந்து நின்றேன். எழுபது வயதைக் கடந்துவிட்ட […]

இச்சா: ஈழத்தமிழரின் வலியும் வேதனையும் ததும்பிடும் துன்பியல் கதை

தோழமைப் பிரதிகள்

-ந. முருகேசபாண்டியன் ‘இலங்கைத் தீவே செத்துக் கடலில் வெள்ளைப் பிரேதமாக மிதந்து வருவதான ஒரு படிமம் இப்போது என் மனதில் தோன்றி என் இருதயத்தை முறித்துப் போட்டது.’- ‘இச்சா’ நாவலின் கதைசொல்லி. கொலைகளும், தற்கொலைகளும் நிரம்பிய சிறிய தீவான இலங்கையைச் சாபமும், இருளும் காலந்தோறும் துரத்துகின்றன. பௌத்தம் X சிறுபான்மையினரின் மதங்கள், தமிழ் X சிங்களம் என இரு அடிப்படை வேறுபாடுகளின் பின்புலத்தில் வன்மும், குரோதமும், வெறுப்பும் நாடெங்கும் பரவலானதற்குக் காரணம், வெறுமனே மதவெறி மட்டும்தானா? புத்தர் […]

இழிசெயல்!

கட்டுரைகள்

ஓர் இலக்கியப் படைப்பை எழுதி வெளியிட்டுவிட்டால், அது குறித்து வரும் எல்லாவித விமர்சனங்களையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். நமது மனதுக்குப் பிடிக்காத விமர்சனங்கள் என்றாலும் கூட அங்கீகரித்தே ஆகவேண்டும். அது இலக்கிய அறம். படைப்புக்கு வெளியே சென்று எழுதியவனின் மீது அவதூறுகளை அள்ளிக்கொட்டும் சல்லிப் பயல்கள் நிரம்பிய உலகமிது என்பதால் கவலை ஏதுமில்லை. அவற்றை மயிரெனவும் பொருட்படுத்த வேண்டியதுமில்லை. ஆனால், அந்த அவதூறுகளை ‘விமர்சனம்’ என்ற பெயரில் ஓர் இலக்கிய இதழ் வெளியிடுவது இலக்கியத்திற்குப் பிடித்த […]

மறுபடியும் மறுபடியும் பெரியாரிடம் – தொ. பரமசிவன்

நேர்காணல்கள்

தமிழறிஞரும், சமூகவியல் ஆய்வாளருமான பேராசிரியர் தொ.பரமசிவன், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார். ‘அறியப்படாத தமிழகம்’, ‘இதுதான் பார்ப்பனியம்’, ‘பண்பாட்டு அசைவுகள்’, ‘டங்கல் எனும் நயவஞ்சகம்’ போன்ற நூல்களையும் ஏராளமான சமூகவியல் – இலக்கியக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழல், சாதியம், முதலாளியம், பெரியாரியம் போன்றவை குறித்த கேள்விகளோடு, 15 சனவரி 2003 அன்று பேராசிரியர் தொ.பரமசிவனை, நண்பர் லெனா குமாரின் துணையோடு நான் பாளையங்கோட்டையில் சந்தித்து உரையாடினேன். -ஷோபாசக்தி தமிழ்நாட்டின் மைய […]

யாப்பாணச் சாமி

கதைகள்

‘குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பாணத்தான், பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி’ என்றெல்லாம் சுப்ரமணிய பாரதியார் போற்றிப் பாடிய, அருளம்பலம் சுவாமியைப் பற்றியதல்ல இந்தக் கதை. வேறொரு யாப்பாணச் சாமியைப் பற்றியே உங்களுக்குச் சொல்லவிருக்கிறேன். பாரதியார் புதுச்சேரியில் சந்தித்த அருளம்பலம் சுவாமி வாயைத் திறந்து பேசாத மௌனகுரு. இந்த யாப்பாணச் சாமி முற்றிலும் வேறு. என்னுடைய அம்மாவுக்கு, நான் இன்னும் கல்யாணம் செய்யாமலிருப்பது தீராக் கவலை. பெற்ற மனம் பதைக்காமலிருக்காது. அம்மா, யாப்பாணச் சாமியைத் தரிசித்து என்னுடைய எதிர்காலம் குறித்துக் […]

Conservative Estimate

கட்டுரைகள்

“நீங்கள் ஏன் புலிகள் அமைப்பில் சேர்ந்தீர்கள்” என ஊடக நேர்காணல்களில் கேள்விகள் கேட்கப்படும் போதெல்லாம், நான் சொல்லும் காரணங்களில் முதன்மையானது ‘வெலிகடைச் சிறைப் படுகொலைகள்’. 1983 ஜுலை 25-ம் தேதி குட்டிமணி, தங்கத்துரை உட்பட 35 தமிழ் அரசியல் கைதிகளும், 27-ம் தேதி டொக்டர் இராஜசுந்தரம் உட்பட 18 தமிழ் அரசியல் கைதிகளும் வெலிகடைச் சிறையில் வெட்டியும் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த 53 படுகொலைகளும் அழியாத நினைவுகளாக என் போன்றவர்களின் மனதில் இன்னுமிருக்கிறது. எப்போதுமிருக்கும். ஆனால் […]

அஞ்சலி: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

கட்டுரைகள்

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை என் காதில் அம்மாவின் குரலோ, வேறு யாருடைய குரலோ தினந்தோறும் ஒலிக்க வாய்ப்பிருந்ததில்லை. ஆனால் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் குரல் ஒருநாள் தவறாமல் எனக்குக் கேட்டுக்கொண்டிருந்தது. சிறையிலிருந்த போது கூட யாராவது ஒரு சிறைத் தோழன் அவரைப் பாடிக்கொண்டிருப்பான். எம்.ஜி.ஆர். இரசிகர்களான எங்களுக்கு எஸ்.பி.பி. எங்களுடைய ஆள் என்ற ஒரு பிணைப்பிருந்தது. ‘ஆயிரம் நிலவே வா’ எனத் தொடக்கிவைத்த வாத்தியார் ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்’, ‘அவளொரு நவரச […]

எழுதுவதை நிறுத்திக்கொள்கிறேன்!

கட்டுரைகள்

2014-ம் வருடம் சுவிஸில் நடந்த 43-வது இலக்கியச் சந்திப்பில் நிகழ்ந்த ஒரு விஷயம்: இந்த இலக்கியச் சந்திப்புக்கு சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கையிலிருந்து எம்.ஏ.நுஃமானும், இந்தியாவிலிருந்து ம.மதிவண்ணனும், அமெரிக்காவிலிருந்து யாழினி ட்ரீமும் அழைக்கப்பட்டிருந்தார்கள். (நுஃமான் அவர்கள் உடல்நலக் குறைவால் இறுதிநேரதில் பயணத்தை இரத்துச்செய்ய, அவரின் கட்டுரை சந்திப்பில் வாசிக்கப்பட்டது). அய்ரோப்பா முழுவதுமிருந்து தலித் அரசியலாளர்களும் எழுத்தாளர்களும் சந்திப்புக்கு வந்திருந்தார்கள். அந்த இலக்கியச் சந்திப்பில் உரையாற்றிய தோழர் ஏ.ஜி.யோகராஜாவின் அமர்வில், அவருக்குப் பதிலளிக்கும் முகமாக நான் சொன்ன செய்தியை ஞாபகத்திலிருந்து […]

குறைந்த அபாயம்!

கட்டுரைகள்

அவ்வப்போது என்னைக் குறித்து ஏதாவதொரு வம்புச் செய்தியை, முகநூல் வம்பர்கள் கூட்டாகப் பரப்பிவிடுகிறார்கள். அந்தவகையில் புதிய வம்புச் செய்தி: ஷோபாசக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கிறார். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிற்போக்குத்தனங்கள் குறித்து அவருக்கு விமர்சனங்கள் இல்லை. இதைக் கொஞ்சம் விளக்கிவிடுகிறேன். ‘யாவரும்.காம்’ இணைய இதழுக்கு கொடுத்த நேர்காணலில் நான் சொல்லியிருந்த ஒரேயொரு வாக்கியத்தை முன்வைத்தே, இந்த வம்புப் பேச்சு கிளப்பிவிடப்பட்டிருக்கிறது. அந்த நேர்காணலில் நான் இவ்வாறு சொல்லியிருந்தேன்: “தேர்தல் காலங்களில் என்னுடைய ஆதரவை ஆயிரத்தெட்டு […]

இது ஆவண தர்மமல்ல!

தோழமைப் பிரதிகள்

-மு.நித்தியானந்தன் சோமிதரனும் சயந்தனும் இணைந்து தயாரித்து வெளியிட்ட, 3.07 நிமிட காணொளி எழுப்பும் கேள்விகள் பல. இது எப்போது பதிவு செய்யப்பட்டது? இதில் திரு. செல்லன் கந்தையா அவர்களுடன் பேட்டி காண்பவர் யார்? இது எங்கே பதிவு செய்யப்பட்டது? ஒரு நம்பகமான ஒளிப்பட ஆவணம் தர வேண்டிய அடிப்படை விவரங்கள் இவை. சும்மா எடுத்தமேனிக்கு ஒரு காணொளியை வெளியில் உலவவிடுவீர்களா? சோமிதரனும் சயந்தனும் யாழ்ப்பாணத்தில் ஒரு ஒளிப்படக்காரரை அமர்த்தி, கேள்விகளை அவருக்கு அனுப்பி இந்தப் பேட்டியை எடுத்தார்களா? […]

அந்த மூன்று நிமிடச் சாட்சியம்

கட்டுரைகள்

நண்பர்கள் சயந்தனும், சோமிதரனும் இன்று வெளியிட்டிருக்கும், ஒரு மூன்று நிமிட நேரக் காணொளி குறித்துப் பேசிவிட நினைக்கிறேன். இற்றைக்குப் பதினேழு வருடங்களுக்கு முன்னதாக, யாழ் பொதுநூலக நிலையத் திறப்புவிழா தடுத்து நிறுத்தப்பட்டது நாம் அறிந்ததே. அது ஏன் தடுத்து நிறுத்தப்பட்டது, எப்படித் தடுத்து நிறுத்தப்பட்டது என்பதில் மாறுபட்ட கருத்துகள் சொல்லப்படுவதுண்டு. தடுத்து நிறுத்திய புலிகள் அதற்கான காரணத்தை எப்போதுமே சொன்னதில்லை. அப்போதைய மேயர் செல்லன் கந்தையன் தலைமையில், வீ. ஆனந்தசங்கரி அந்த நூலகத்தைத் திறந்துவைப்பதாக இருந்தது. திறப்புவிழா […]

புலியூர் முருகேசன் அவர்களுக்கு!

கட்டுரைகள்

அண்ணே வணக்கம்! என்னைக் குறித்து உருட்டல்கள் நடந்துகொண்டிருந்த ஒரு முகநூல் திரிக்கு நீங்கள் சென்று, “ஷோபாசக்தி இங்கே வந்து பதிலளிப்பார் என எனக்கு நம்பிக்கையிருக்கிறது” என எழுதியிருந்ததைப் பார்த்தேன். உங்களது நம்பிக்கையைத் தவிடுபொடியாக்கியதற்காக முதற்கண் என்னை மன்னித்துவிடுங்கள். நான் சிலருடன் அல்லது சில தளங்களில் விவாதத்தில் இறங்குவதில்லை என்பதைக் கொள்கையாகவே வைத்துள்ளேன். என்னுடைய சக்தியைத் தேவையில்லாமல் செலவழிக்கக் கூடாது என்பது ஒருபுறமிருக்க, அந்த இடங்களில் விவாதிப்பது யாருக்கும் எந்தப் பயனையும் தரப்போவதில்லை என்று கருதுவதாலேயே அங்கெல்லாம் விவாதம் […]

விகடன் விருதுகளை திரும்ப ஒப்படைக்கிறேன்

அறிவித்தல்கள்

மூன்று தடவைகள் ‘விகடன்’ விருதுகளைப் பெற்றிருக்கிறேன் (வேலைக்காரிகளின் புத்தகம், எம்.ஜி.ஆர் கொலை வழக்கு, BOX). இந்த விருதுகளுக்காக என்னைத் தேர்வு செய்தவர்கள் விகடன் குழுமத்திலிருந்த எழுத்தாளத் தோழர்கள். அது மட்டுமல்லாமல் விகடன் பல முறை என்னிடம் கட்டுரைகளையும் நேர்காணல்களையும் கேட்டுப் பெற்று வெளியிட்டதற்குக் காரணமும் இந்த எழுத்தாளத் தோழர்களே. இன்று எழுத்தாளத் தோழர்களும் மற்றும் பணியாளர்களும் விகடன் குழுமத்திலிருந்து பெருந்தொகையில் வெளியேற்றப்படுவதைக் கண்டித்தும் அந்த வெளியேற்றத்திற்கு எதிராகப் போராடும் தோழமைகளுக்கான ஒரு சிறிய துணைச் செயற்பாடாகவும், மூன்று […]

நிகழாத விவாதம்

கட்டுரைகள்

வசுமித்ர எப்போதும் போலவே, இப்போதும் அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி எழுதிய முகநூல் வசைகள், எனக்கும் அவருக்குமிடையே நடந்த விவாதத்தின் போதே எழுதப்பட்டன என்பதுபோல ஒரு பேச்சிருப்பதால், அதை விளக்கிடவே இக்குறிப்பை எழுதுகிறேன். ரங்கநாயகம்மாவின் அந்த ‘அம்பேத்கர் தூஷண’ நூல் வெளிவந்து முழுதாக 4 வருடங்களாகின்றன. சில நண்பர்கள் சொல்வதுபோல, ஏதோ கவனம்பெறாமல் மூலையில் கிடந்த வசைக் குப்பையல்ல அது. அந்தக் குப்பை பரவலாகவே இறைக்கப்பட்டது. 4 மாதங்களில் அந்நூலுக்கு 3 பதிப்புகள் வந்தன. அந்நூலை வரவேற்றுக் கூட்டங்கள் […]

நான் எதையுமே தன்னியல்பாக எழுதுவதில்லை

நேர்காணல்கள்

யாவரும்.காம் இணைய இதழுக்காக நேர் கண்டவர்: அகர முதல்வன் எழுத்தாளர் ஷோபாசக்தி – தமிழ் இலக்கியத்தோடு பரிட்சயமானவர்கள் அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். தன்னுடைய படைப்புக்களின் மூலம் ஈழத்தமிழ் வாழ்வியலை எழுதி வருபவர். தனக்கான கதை சொல்லும் முறை, பகிடி, அரசியல் சாடல்கள் என நிறைய அம்சங்களால் தனது படைப்புலகை உண்டு பண்ணியிருக்கிறவர். அவரின் படைப்புக்கள் மீது கடுமையான விமர்சனம் கொண்டவர்களும் ஏராளம். அவருடைய மிகச் சமீபத்தில் வெளியான “இச்சா” நாவலை “கருப்பு பிரதிகள்“ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. […]

இச்சா – ஆலா பறவையின் குறிப்பு

தோழமைப் பிரதிகள்

– இரா.சிவ சித்து “உயிர் தப்பிப் பிழைத்திருக்கும் என்னைப் போன்றவர்கள் உண்மையின் சாட்சியங்கள் அல்ல, நாங்கள் ஊமைகளாகவே மீண்டோம். மண்ணில் ஆழப் புதைக்கப்பட்டவர்களே முழுமையான சாட்சியங்கள்” ~ நாவலில் இருந்து ஈழத்தில் இறுதிகட்டப் போர் நடந்து கொண்டிருக்கும்போது எனது வயது பதினேழு. முதிராத வயதில், இணையம் எனக்குக் கைவராத காலத்தில், தென்தமிழகத்தின் ஒரு மூலையில் பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருக்கும் என் வட்டத்திற்கு போர் பற்றிய சித்திரத்தை தந்துகொண்டிருந்தது என்னவோ தொலைக்காட்சிகளில் வந்த துணுக்குச் செய்திகள் மட்டும்தான். அதுவும் சோற்றுத்தட்டுடன் […]

இச்சா – சில கேள்விகள்

நேர்காணல்கள்

‘இச்சா’ நாவலை முன்வைத்து கனலி கலை இலக்கிய இணையத்தளம் சார்ப்பாக க. க.விக்னேஷ்வரன் நிகழ்த்தி, 14.12.2019-ல் வெளியாகிய நேர்காணல்: ‘இச்சா’ நாவலின் கரு எங்கு எப்படிபட்ட மனநிலையில் உருவாகியது? இன்று நாவலை நீங்கள் வாசிக்கும் போது, அந்த கரு அல்லது எண்ணம் சரியாக வந்துள்ளதாக நினைக்கிறீர்களா? ‘Dheepan’ திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட போது, அந்த விழாக்களில் நான் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களதும் பார்வையாளர்களதும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருந்தது. அந்தப் படத்தில் நான் நடிகன் மட்டுமே என்றபோதிலும், […]

பிரபஞ்ச நூல்

கதைகள்

இந்தக் கதையைத் தனது இரகசியக் குரலைக் கலையவிடாது, தகரத்தில் மெல்லிய ஆணி முனையால் கிறுக்குவது போன்ற கூசிய தொனியில் ஏற்ற இறக்கங்களின்றி சித்திரைலிங்கம் என்முன்னே சொல்லத் தொடங்கினான். நடுநடுவே கதையை நிறுத்தி அதே இரகசியக் குரலில் என்னிடம் சந்தேகங்களும் கேட்டான். நான் 2012-ல் சித்திரைலிங்கத்தை சென்னை புத்தகச் சந்தையில் கடைசியாகப் பார்த்தது. மனைவி பிள்ளைகளுடன் ‘க்ரியா புத்தகக் கடை’க்குள் நின்றுகொண்டிருந்தான். கையில் ‘கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ வைத்திருந்தான். என்னைக் கண்டதும் முதல் வார்த்தையாக “மச்சான் நீ […]

ஆத்தாதவன் செயல்

கட்டுரைகள்

‘கூத்தாடுவதும் குண்டி நெளிப்பதுவும் ஆத்தாதவன் செயல்’ என்பது யாழ்ப்பாணத்தில் பிரபலமான பழமொழி. கூத்தாடுபவர்களைக் கீழிறக்கி ஏளனமாக மதிப்பிடும் யாழ் சாதியச் சமூகத்தின் குறைப் பார்வையை இப்பழமொழி அறிவிக்கிறது. யாழில் கூத்துகளும் இசை நாடகங்களும் தழைத்தோங்கியிருந்த காலத்தில் மீனவச் சாதியினரும் தலித்துகளுமே இந்தக் கலைகளைப் பரம்பரை பரம்பரையாகப் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்தார்கள் . நான் பால பருவத்திலேயே கூத்துக்காரனாகி விட்டேன். முதற் கூத்து ‘பண்டாரவன்னியன்’. அண்ணாவியார் நாரந்தனை சின்னப்புவின் இயக்கத்தில் தென்மோடிப் பாணியிலமைந்த அந்தக் கூத்தில் எனக்கு […]

ஆயிரத்தொரு சொற்கள்

கட்டுரைகள்

நான் ஒன்றரை வயதிலேயே நன்றாகப் பேசத் தொடங்கிவிட்டதை, எனது அம்மா சரியாக ஞாபகம் வைத்திருக்கிறார். ஆனால் நான் எத்தனை வயதில் எழுதத் தொடங்கினேன் என்பது அவருக்கோ எனக்கோ சரியாக ஞாபகமில்லை. பள்ளிப் பருவத்திலிருந்தே எழுதிக்கொண்டிருக்கிறேன். பாடசாலையில் நாங்களே நடிக்கும் ஓரங்க நாடகங்களைத்தான் முதலில் எழுதினேன். 1981 இனவன்முறையில், எங்கள் கிராமத்திலிருந்து நான்கு கிலோ மீற்றர்கள் துாரத்திலிருந்த யாழ்ப்பாணப் பொது நுாலகம் இலங்கை அமைச்சர்களின் உத்தரவின்பேரில் போலிஸாரால் முற்றாக எரியூட்டப்பட்டபோது எனக்குப் பதின்மூன்று வயது. 90 000 நுால்களும் […]

புலிகளின் தொடர்ச்சியாக இருப்பதற்கு நீங்கள் புலிகளாக இருக்க வேண்டும்!

கட்டுரைகள்

முள்ளிவாய்க்காலில் புலிகள் இயக்கம் அழிக்கப்படுவதற்குப் பதினைந்து வருடங்கள் முன்னதாகவே புலம் பெயர் நாடுகளில் வலுவாக இருந்த புலிகளின் கிளைகளைச் சிறுகச் சிறுக அழிக்க, மேற்குநாடுகள் நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியிருந்தன. புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாகக் மதிப்பிடப்பட்டு தடைவிதிக்கப்பட்டது. புலிகளின் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு அய்ரோப்பிய – அமெரிக்கச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு குறைந்தபட்சத் தீர்வுக்குப் புலிகள் சம்மதிக்க வேண்டும், புலிகளிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்பதே மேற்கு நாடுகளின் உறுதியான நிலைப்பாடாக இருந்தது. இந்த […]

உடனடித் தேவை தத்துவ ஆசிரியரல்ல, தமிழ் ஆசிரியரே!

கட்டுரைகள்

நேற்று முன்தினம் விகடன் தடம் இதழில் வெளியாகிய என்னுடைய கட்டுரையில் இப்படியொரு பந்தி வரும்: “புலிகள் விட்டுச் சென்ற அரசியல் வெற்றிடத்தை நிரப்ப அல்லது புலிகளின் தொடர்ச்சியாகக் காட்டிக்கொள்ள, புகலிட நாடுகளில் பல முயற்சிகள் நடந்தன. நாடு கடந்த அரசு, பிளவுண்ட புலிகளின் சிறு சிறு குழுக்கள் என்பன ஒரு பக்கமும், அதுவரை இறுக்கமான இடதுசாரித் தத்துவங்களை உதிர்த்துக்கொண்டிருந்த குழுக்கள் ‘சமவுரிமை இயக்கம்’, ‘மே 18 இயக்கம்’, ‘தமிழ் சொலிடாரிட்டி’ என்ற பெயரிலெல்லாம் மறுபக்கத்திலும் குத்துக்கரணங்கள் போட்டுப் […]

ஈஸ்டர் கொலைகள்

கட்டுரைகள்

இந்த தேவாலயத்தை நிர்மூலமாக்கினாலும், மூன்றே நாட்களில் கட்டியெழுப்புவேன் -இயேசுக் கிறிஸ்து நேற்று இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளால் நிகழ்ந்த புகை அடங்க முதலே, இஸ்லாமியர்கள் மீதான பழிப்பும், வன்மம் மிக்க நினைவுகூறல்களும் சமூக வலைத்தளங்களில் புகையத் தொடங்கிவிட்டன. இலங்கையில் அமைதியே இருக்கக்கூடாது, இரத்தமும் குண்டும் கொலையும் பழிவாங்கல்களும் தொடர்ந்துகொண்டேயிருக்க வேண்டும் என்ற இரத்த வேட்கை, புலம் பெயர்ந்த எளிய தமிழ்ப் பிள்ளைகளின் முகப்புத்தகங்களில் வழிந்துகொண்டேயிருக்கிறது. இதுவரை கிடைத்த ஊடகச் செய்திகளின்படி, இந்தக் குண்டுவெடிப்புகளை சர்வதேச வலைப்பின்னலிலுள்ள இலங்கையர்களான […]

லஷ்மி மணிவண்ணனுக்கு ஷோபா..

கட்டுரைகள்

‘ஷோபாசக்திக்கு லஷ்மி மணிவண்ணன்’ என மணிவண்ணனுடைய ஒரு முகப்புத்தகப் பதிவை ஜெயமோகன் தனது தளத்தில் பதிவேற்றியுள்ளார். முகப்புத்தகத்தில் மணிவண்ணனின் பதிவுக்கு உடனடியாகவே பதில் அளித்திருந்தேன். அதையும் சேர்த்து ஜெயமோகன் பதிவேற்றியிருந்தாரெனில் முழுமையாக இருந்திருக்கும். என்னிடம் மட்டும் வலைத்தளம் இல்லையா என்ன..என்னுடைய பதிலை நான் இங்கு மறுபதிவு செய்துவிடுகிறேன்: இலக்கியத்தில் மதிப்பீடுகளின் அவசியத்தை ஓர் எழுத்தாளர் உணராமல் இருக்கமுடியாது. ஆனால் நிர்ப்பந்திக்கப்படும் விதிகளும் சட்டகங்களும் தடைக்கற்கள். அந்த விதிகள் மார்க்ஸியம் சார்ந்து வைக்கப்பட்டாலென்ன தேசியம் சார்ந்து வைக்கப்பட்டாலென்ன அழகியல் […]

தடைசெய்யப்பட்ட அதி அற்புதப் பெண்

தோழமைப் பிரதிகள்

-Élie Castiel தமிழில்: சதா பிரணவன் இலங்கையில் பிறந்து கனடாவில் வாழும் லெனின் எம் சிவத்தின், முந்தைய இரண்டு தமிழ் -கனடிய திரைப் படங்கள் 1999(2009) மற்றும் A gun and a ring (2013) . இப்படங்கள் ஆங்கில subtitles-களுடன் உருவாக்கப்பட்டவை. கனடாவில் பல்வேறு சமூகங்களின் ஒன்றிணைவு உண்மையில் வரவேற்கத்தக்கது. முதல் இரண்டு படங்களும் ‘action’ வகை சார்ந்தவை.ஆனால் லெனின் எம் சிவத்தின் புதிய படமான ‘ROOBHA’ முற்றிலும் வேறுபட்ட கருப்பொருளைக் கொண்டுள்ளது . இத் […]

இப்ப இல்லாட்டி எப்ப!

கட்டுரைகள்

இன்று தொடங்கியிருக்கும் யாழ் சர்வதேசத் திரைப்பட விழாவில், வரும் 5ம் தேதி மாலை 6.45 மணிக்கு திரையிடப்படுவதாக விழாக் குழுவினரால் அறிவிக்கப்பட்டு உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலிலும் சேர்க்கப்பட்டிருந்த ஜூட் ரட்ணத்தின் ஆவணப்படமான ‘Demons in Paradise’ இப்போது நிகழ்ச்சி நிரலிலிருந்து நீக்கப்பட்டிருப்பது வருத்தத்திற்கும் கண்டனத்திற்குமுரியது. இதையொத்த சம்பவமொன்று எங்களது ‘செங்கடல்’ திரைப்படத்திற்கும் நிகழ்ந்திருந்தது. செங்கடல் தயாரிப்பில் இருக்கும்போதே அது புலிகளிற்கு எதிரான படம் – இலங்கை அரசிற்கு எதிரான படம் என்றெல்லாம் ஊகங்கள் ஊடகங்களில் வெளியாகின. 2010 […]

Film unscheduled and censored at the Jaffna International Cinema Festival

அறிவித்தல்கள்

Dear Sir/Madam, TO WHOM IT MAY CONCERN: Allegedly owing to pressure from a group known only as the ‘Community’ in Jaffna, the festival organizers of the Jaffna International Cinema Festival have decided to remove the film DEMONS IN PARADISE directed by me from its scheduled program. Thus far I have not been given a proper […]

ஈழமும் கலைஞரும் – ஆனந்த விகடன்

கட்டுரைகள்

“அப்போது தூய தேசியவாத சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம். தமிழ் பிரச்னைகள் பற்றிப் பேசுபவர்கள் அண்ணாத்துரை, கருணாநிதி, தமிழரசுக்கட்சி என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை’’ – இவ்வாறு தொடங்கித் தனது சுயசரிதையை எழுதியிருப்பவர் புலிகள் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும் புலிகளின் முதலாவது மத்தியக்குழு உறுப்பினருமான கணேசன். ஈழத்தில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பரந்துபட்ட இளைஞர்களிடையே முதன்மையான தமிழ் உணர்வுப் படிமம் கலைஞர் மு.கருணாநிதி. இன உணர்வு, மொழிப்பற்று, கடவுள் மறுப்பு, கலையை சமூக நீதிக்காகவும் அரசியலுக்காகவும் லாகவமாகப் பயன்படுத்திக்கொள்வது போன்றவற்றில் அவர் […]

என் ஆசான் கலைஞர் – Indian Express

கட்டுரைகள்

மூன்று ஆண்டுகளிற்கு முன்பு வெளியான எனது ‘கண்டிவீரன்’ சிறுகதைத் தொகுப்பை நான் கலைஞர் மு.கருணாநிதிக்கு சமர்ப்பித்திருந்தேன். அந்தச் சமர்ப்பணக் குறிப்பில் அவரை திரைப்பட வசனங்கள் ஊடாக எனக்குத் தமிழைக் கற்றுக்கொடுத்த ஆசான் எனப் பதிவு செய்திருந்தேன். தமிழக அரசியலிலும் தமிழ் சினிமாவிலும் கலைஞரின் வீறுகொண்ட எழுச்சி 1940-களின் இறுதியில் ஆரம்பிக்கிறது. அதே வேளையிலேயே தி.மு.க.வின் தாக்கமும் கலைஞரின் திரைப்படங்களும் அவரது எழுத்துகளும் கடல் கடந்து இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இலங்கைத் தமிழர்களின் வீடுகளிலே அறிஞர் அண்ணாத்துரையின் படமும் […]

காலா : இன்னொரு பராசக்தி

கட்டுரைகள்

இப்போதெல்லாம் திரையரங்குகளிற்குச் சென்று தமிழ்ப் படம் பார்ப்பதில் ஆர்வம் போய்விட்டது. வயதாக வயதாகச் சகிப்புத்தன்மை குறைந்துவருவது வழமைதானே. ஆனால் இன்று திரையரங்கம் சென்று காலா பார்த்தேன். பாரிஸில் கடந்த மூன்று மாதங்களாகவே தொடருந்து வேலைநிறுத்தம். ‘சனாதிபதி மக்ரோன் அவர்களே பிரான்ஸ் விற்பனைக்கல்ல’ என்பது போராடும் தொழிலாளர்களின் முழக்கமாயிருக்கிறது. இந்த தொடருந்துப் பிரச்சினையாலும் திரையரங்கில் முதற் சில காட்சிகளில் ரஜினி ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரக் கூச்சல்களுக்கு அஞ்சியும் சில நாட்கள் கழித்து படத்தைப் பொறுமையாகப் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் […]

48வது இலக்கியச் சந்திப்பு – ரகறொன்ரோ – TKARONTO

அறிவித்தல்கள்

காலம்: ஜூன் 2, 3ம் நாட்களில் இடம்: 440 McLevin Avenue, Scarborough, ON M1B 5J5 சனிக்கிழமை, 2018 ஜூன் 2: நிகழ்ச்சி நிரல் காலை 10:00: நிகழ்ச்சி ஆரம்பம் வரவேற்பும் சிற்றுண்டியும் ஓவியக் கண்காட்சி நூலக நிறுவனத்தின் கண்காட்சி புத்தகக் கண்காட்சி ஆரம்பம் காலை 11:00: ஆரம்ப நிகழ்வு வரவேற்பும் மௌன வணக்கமும் பூர்வீக மக்களின் நில உரிமை பற்றிய அறிவிப்பு இலக்கியச் சந்திப்பின் வரலாறு – அதீதா காலை 11:20 – பி.ப […]

இலங்கையில் இந்துத்துவம் -2

கட்டுரைகள்

இலங்கையில் ஆர்.எஸ்.எஸ். அபாயம் குறித்து நான் எழுதிய கட்டுரை மேலோட்டமானதென மேலோட்டமாகச் சொல்லப்படுவதால் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. சிவசேனை இலங்கையில் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாகவும் பின்பாகவும் இலங்கை தொடர்பான இந்திய இந்துத்துவ சக்திகளின் நிலைப்பாடுகளையும் கூற்றுகளையும் நான் தொடர்ச்சியாகப் படித்தும் கவனித்தும் பேசியும் வந்திருக்கிறேன். தங்களது கடையை இலங்கையில் விரிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பது மிக வெளிப்படையான உண்மை. ஆகவே அவர்கள் இலங்கையின் சிவசேனைக்கு வாழ்த்தும் ஆதரவும் தெரிவிக்கிறார்கள். இந்தச் செய்திகளை ஆங்கிலத் தினப் பத்திரிகைகளை விடவும் தமிழக […]

இலங்கையில் ஆர். எஸ். எஸ். வரும் ஆனா வராது!

கட்டுரைகள்

ஒரு கிழமையாகவே, ‘இலங்கையில் ஆர்.எஸ்.எஸ். அபாயம்’ என்ற எச்சரிக்கை மணி முகநுாலில் திரும்பிய பக்கமெல்லாம் அடித்துக்கொண்டிருக்கிறது. எப்படி ஆர். எஸ். எஸ். இலங்கையில் நுழைந்ததென்பதைக் கவனித்தால் அது மிக மிகச் சுலபமான வழியில் இலங்கையில் கால் பதித்திருப்பதை விளங்கிக்கொள்ளலாம். ஒரு அதாவது ஒரேயொரு இலங்கை முகநுால் பதிவர்  ”ஆர்.எஸ்.எஸ்ஸின் சேவை இலங்கைக்குத் தேவை” என எழுதிவிட்டார். உடனே இலங்கையில் ஆர். எஸ். எஸ். அபாயம் தோன்றிவிட்டதாக எதிர்ப்பதிவுகள் முகநுாலில் தோன்றின. ஓர் அமைப்பு இலங்கையில் நுழைவதற்கு ஒரேயொரு […]

அம்பேத்கர் தூஷணம் அல்லது கேள்வியின் நாயகி

கட்டுரைகள்

முட்டாள், விஷமத்தனமானவர், பைத்தியகாரத்தனமானவர், பார்ப்பனர்களிலும் கீழானவர், பெண்களை அவமதிப்பவர், அரைவேக்காடு, உழைப்புச் சுரண்டலிற்கு ஆதரவானவர், பிதற்றலாளர், அடாவடியானவர், சாதி ஒழிப்பிற்கு எதிரானவர், சாதி ஒழிப்பு எக்காலத்திலும் சாத்தியமில்லை என்றவர், சொத்துடமை வர்க்கத்தின் ஆதரவாளர், அறியாமைகொண்டவர், மூடநம்பிக்கையாளர் என்றெல்லாம் அண்ணல் அம்பேத்கரை முழு நீளத்திற்குத் துாஷணை செய்து ரோயல் டெம்மி சைஸில் 416 பக்கங்களில் ஒரு நூல். நூலைச் சுந்தரத் தெலுங்கில் வசைத்திருப்பவர்: ரங்கநாயகம்மா. தமிழில் மொழிபெயர்த்திருப்பவர்: கொற்றவை. நூலின் பெயர் “சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! […]

இலங்கையில் வன்முறைக்குள் வாழ்தல்

கட்டுரைகள்

அனைவருக்கும் வணக்கம், நாங்கள் இன்னும் சற்று நேரத்திலே பார்க்கயிருக்கும் Demoin in paradise என்ற ஆவணப்படம் 1980-களிலே ஸ்ரீலங்காவில் நிகழ்ந்த வன்முறைகள் பற்றிப் பேச இருக்கிறது. ஆனால் இந்த வன்முறை ஒன்றும் கடந்த கால கசப்பான ஞாபகங்கள் மட்டுமல்ல, இன்றுவரை இந்த வன்முறையும் வன்முறைக்குள் வாழ்வும் இலங்கையில் தொடர்ந்தவண்ணமே உள்ளன. இந்த வன்முறைத் தொடர்போக்கு இனியும் இலங்கையில் நிகழாது என்பதற்கு எந்த உத்தரவாதமான சூழலும் கிடையாது என்பதே வருந்தத்தக்க உண்மை. இந்த மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இலங்கையில் […]

அந்திக் கிறிஸ்து

கதைகள்

1. கவர்னர் தூக்கத்தில் இருந்தபோது இரவேடு இரவாக அவருடைய பதவி நாட்டின் அதிபரால் பறிக்கப்பட்டிருந்தது. 2. இரவு படுக்கையில் நெடுநேரம் அமர்ந்திருந்து மிதமிஞ்சி மது அருந்தியவாறே, வானொலியில் வெளியாகிக்கொண்டிருந்த அதிபர் தேர்தல் முடிவுகளை கேட்டுக்கொண்டிருந்த கவர்னர் பிலாத்து, ஏமாற்றத்துடனும் சோர்வுடனும் மதுபோதையும் சேர அப்படியே கண்களைச் சொருகிக்கொண்டு தன்னையறியாமலேயே உறங்கிவிட்டிருந்தார். 3. இப்போது அதிபர் தேர்தலில் முன்னைய அதிபரே மறுபடியும் வென்றிருக்கிறார். வெற்றிபெற்றவருடைய எதிர் அணி வேட்பாளரிற்கு கவர்னர் பிலாத்து தன்னுடைய ஆதரவை வலுவாகவும் வெளிப்படையாகவும் வழங்கியிருந்தார். […]

இனவாதமற்ற ஓர் எதிர்காலத்தினை நோக்கி…

தோழமைப் பிரதிகள்

–மகேந்திரன் திருவரங்கன் கொழும்பு ரெலிகிராஃபில் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி வெளியாகிய Towards a Non-Racist Future என்ற கட்டுரையின் தமிழாக்கம். எட்டாங்கட்டை வாசியான எம் ஜாஃபர் நம்பிக்கையிழந்து போயிருந்தார். “பிரதான சந்தி தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் தமது கைகளைக் கட்டிய படி பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்” என அவர் முறைப்பட்டார். “கடைகள் எல்லாம் தீப்பற்றி எரிந்து கிட்டத்தட்ட 20 நிமிடங்களின் பின்னர் தாக்குதலினை மேற்கொண்டவர்களை நோக்கி சில முஸ்லிம் பையன்கள் கற்களை […]

இலங்கையில் முஸ்லீம்கள் மீதான வன்முறை: கூட்டறிக்கை

அறிவித்தல்கள்

  நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் வடக்கு கிழக்கில் பணியாற்றும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் சிலவற்றின் கூட்டறிக்கை: -06 மார்ச் 2018 இவ்வாரம் கண்டியிலும் சென்ற வாரம் அம்பாறையிலும் முஸ்லீம் மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். கண்டியிலும் அம்பாறையில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள பூர்வாங்க அறிக்கைகள், நடவடிக்கை எடுக்காத தவறால் பொலிஸாரும் இந்த வன்முறையில் கூட்டுப் பொறுப்பாளிகள் என்பதை உணர்த்தி நிற்கின்றன. வடக்கு […]

அறிஞர் யமுனா ராஜேந்திரனும் இனப்படுகொலையும்

கட்டுரைகள்

கொஞ்ச நாட்களிற்கு முன்புதான், இனி ஈழப் பிரச்சினை குறித்துத் தான் எழுதப்போவதில்லை என யமுனா ராஜேந்திரன் அறிவித்திருந்தார். ‘விட்டுதடா சனி’ எனச் சற்றே நிம்மதியாக இருந்தோம். இந்தா மறுபடியும் கிளம்பிவிட்டார். இம்முறை அவர் சொல்வது ஈழத்தில் முஸ்லீம்கள்  மீது புலிகளால் நிகழ்த்தப்பட்ட கொலைகளையும் வெளியேற்றத்தையும் ‘இனப்படுகொலை’ எனச் சொல்லக்கூடாதாம்.  அதை ‘இனச் சுத்திகரிப்பு’ என்றுதான் சொல்ல வேண்டுமாம். நேற்று, வாசு முருகவேலின் ஜெப்னா பேக்கரி நுாலிற்கு விருது வழங்கியதைக் கண்டித்து  700-க்கும் மேற்பட்ட இலங்கை முஸ்லீம்கள்  இணைந்து  […]

இது எம்மீதான இன்னொரு இனப்படுகொலை

அறிவித்தல்கள்

கூட்டறிக்கை: இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் (தமிழ்நாடு),   25.02 .2018 அன்று  தங்களுடைய நிகழ்வில், ‘ஜெப்னா பேக்கரி’ எனும் நூலை எழுதிய வாசு முருகவேலிற்கு  விருது வழங்கி மதிப்புச் செய்ததை நாங்கள் மிகுந்த வருத்தத்துடன் கண்டனம் செய்கிறோம். வாசு முருகவேலால் எழுதப்பட்ட ‘ஜெப்னா பேக்கரி’ நடந்த வரலாற்று உண்மைகளை முற்றாகத் திரித்து  முஸ்லீம்களை உளவாளிகளாகவும் காட்டிக்கொடுப்பவர்களாகவும் சித்தரிக்கிறது.  அதன் வழியே, இரண்டு மணிநேர அவகாசத்தில் முஸ்லீம்கள் புலிகளால் ஆயுதமுனையில் கொள்ளையிடப்பட்டு, நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை […]

அஞ்சலி : எலிசபெத் சேதுபதி

கட்டுரைகள்

கடந்த  முப்பத்தைந்து ஆண்டுகளாக, பிரஞ்சுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியைக் கற்பித்துவந்த பேராசிரியை எலிசபெத் சேதுபதி அவர்கள்  தன்னுடைய 66-வது வயதில் இம்மாதம் 11-ம் தேதி பாரிஸில் காலமானார். இரண்டாயிரத்தின் தொடக்கத்தில், தோழர். அ.மார்க்ஸை  தலைமை  உரையாளராக அழைத்து நாங்கள் நடத்திய ‘மார்க்ஸியமும் பின்நவீனத்துவமும்’ என்ற கருத்தரங்கில்தான் நான் முதன் முதலில் எலிசபெத்தைச் சந்தித்தேன். அதன் பின்பு, சென்ற ஆண்டின் இறுதியில் அவர் நோயின்வாய் வீழும்வரை அவ்வப்போது கூட்டங்களிலும் கருத்தரங்குகளிலும் அவரைச் சந்தித்துக்கொண்டிருந்தேன். கடந்த செம்டம்பர் மாதம்,  இலக்கியப் […]

அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை.

நேர்காணல்கள்

சந்திப்பு: வெய்யில், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன் விகடன் தடம்: பெப்ரவரி 2018 படங்கள்: தி.விஜய், ரா.ராம்குமார் ஷோபாசக்தி ஈழ இலக்கியத்தின் இன்றைய முகம். போரின் அழிவுகளை, சிங்களப் பேரினவாதத்தின் இன ஒடுக்குமுறைகளை, போராளி இயக்கங்களின் தவறுகளை, புலம்பெயர் வாழ்வின் பிரச்னைகளைக் காத்திரமான மொழியில் தன் படைப்புகளில் பதிவுசெய்த படைப்பாளி. சாதி ஒழிப்புக் கருத்தியலையும் தலித்தியத்தையும் ஈழத் தமிழர்களிடத்தில் கொண்டுசெல்ல இடைவிடாது உரையாடிக்கொண்டிருப்பவர். ஷோபாசக்தியின் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட அவரது படைப்பின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்வார்கள். இப்போது நடிகராகவும் […]

தமிழ் நாஸி பேக்கரி

கட்டுரைகள்

வாசு முருகவேல் எழுதிய ‘ஜெப்னா பேக்கரி’ எனும் புத்தகத்திற்கு ‘இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்’ முதல் நெருப்பு  எனும் விருதை அறிவித்திருப்பதை அறிகையில் எனக்கு உண்மையிலேயே அடி வயிற்றில் நெருப்புப் பற்றி எரிகிறது. இந்தப் புத்தகத்திற்கு ஆர். எஸ். எஸ். அல்லது சிவசேனா போன்ற காவி அமைப்புகள்தான் விருதை வழங்கியிருக்கவேண்டும். இலங்கை இ்ஸ்லாமியர்கள் மீது வெறுப்பை வாரி இறைத்து,  இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனச்சுத்திகரிப்பை அநியாயத்திற்கு நியாயப்படுத்தும் ஒரு பிரதிக்கு ஓர் இசுலாமிய அமைப்பே […]

ரோஹிங்யா அகதிகள் : இந்திய அரசு நிகழ்த்தும் இரண்டாம் இனப்படுகொலை!

கட்டுரைகள்

நான் 1991-ம் ஆண்டின் முற்பகுதியில் `சட்டவிரோத அகதி’ எனக் கைதுசெய்யப்பட்டு, தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள குடியேற்றவாசிகள் தடுப்பு மையச் (Immigration Detention Center) சிறையில் அடைக்கப்பட்டேன். நான் அடைக்கப்பட்ட சிறையில் ஆண்களுக்குத் தனியான பகுதியும், பெண்கள், குழந்தைகளுக்குத் தனியான பகுதியும் இருந்தன. உலகில் உள்ள மிக மோசமான சிறைகளைப் பட்டியலிட்டால், முதல் மூன்று இடங்களுக்குள் வருவதற்கு அந்தச் சிறைக்கு எல்லாவிதமான தகுதிகளும் உண்டு. நான் சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணம், நான் நாடற்ற அகதியாக இருந்தது மட்டுமே. […]

நாவலரும் மைத்ரியும் மணியனும்

கட்டுரைகள்

அருளினியன் எழுதி வெளியிட்ட ‘கேரள டயரீஸ்’ நூல் கடந்த ஒரு மாதமாகக் கிளம்பிய சர்ச்சைகளும் பிரச்சினைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. நூலை வெளியிடவும் பெரும் இடர்பாடுகள். தான் கொல்லப்படக்கூடும் என அருளினியன் பேரச்சம் தெரிவித்தார். வரலாற்றில் முதற்தடவையாக ஒரு தமிழ் எழுத்தாளன், இலங்கை சனாதிபதியைச் சந்தித்துக் கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்ற வேண்டியதும், சனாதிபதியும் கருத்துச் சுதந்திரத்தைக் காக்கச் சூளுரைத்த காட்சிகளும் வண்ணப்படங்களாக எங்களிற்குக் காணக்கிடைத்தன. இன்று என் கையில் கேரள டயரீஸ் கிடைத்தது. ஒரே மடக்கில் வாசித்து முடித்துவிட்டு […]

கத்னா : கேட்டிருப்பாய் காற்றே!

கட்டுரைகள்

  Nothing has really happened until it has been recorded – Virginia Woolf ஸர்மிளா ஸெய்யித்தின் ‘பெண் கத்னா’ குறித்த உரை, மலையக இலக்கியச் சந்திப்பில் விலக்கப்பட்டதைத் தொடர்ந்து பெண் கத்னா குறித்த விவாதம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. கூடவே இலக்கியச் சந்திப்புத் தொடரின் சனநாயகத்தன்மையும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இன்று உலகம் முழுவதும் கத்னாவால் இருபது கோடிப் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்குறியில் அமைந்திருக்கும் பாலியல் இன்ப நுண்ணுணர்வுக் குவியமான கிளிட்டோரிஸை (Clitoris) முழுமையாகவோ அல்லது […]

ஒரு தோழமையான வேண்டுகோள்

அறிவித்தல்கள் கட்டுரைகள்

எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் ஷர்மிளா செய்யித்தின் உரையை இடம்பெறச் செய்யுமாறு மலையக இலக்கியச் சந்திப்புக்கு விடுக்கப்பட்டிருந்த கூட்டு வேண்டுகோள் 47-வது இலக்கியச் சந்திப்பு (மலையகம்) ஏற்பாட்டுக் குழுத் தோழர்களிற்கு, இலக்கியச் சந்திப்புகளில் பங்களித்துவரும் எங்களது தோழமையான வேண்டுகோள் பின்வருமாறு: தற்போது, 47-வது இலக்கியச் சந்திப்புக் குறித்து நடந்துவரும் விவாதங்களை நாங்கள் கவனித்தவரை, இந்த இலக்கியச் சந்திப்பில் இலங்கையில் சிறுமிகளிற்கு ‘கிளிட்டோரிஸை’ சிதைத்துவிடும் ‘கத்னா’ வதைச் சடங்கு குறித்து உரையாற்றவிருந்த ஷர்மிளா செய்யித் அவர்களின் உரை சிலரின் […]

Culture Shock – ANITA PRATAP

கட்டுரைகள்

GORILLA BY SHOBASAKTHI (TR. BY SIVANARAYANAN) RANDOM HOUSE  Presents only a slice of the Lankan Tamil reality, but it is an authentic voice. Matter-of-fact, unsentimental, evocative but sparse.  It is a tribute to human ingenuity that even amidst continuous cruelty, torture and degradation, the inquiring, creative spirit cannot be extinguished. Shobasakthi, a former LTTE guerrilla […]

கிளிட்டோரிஸ் : ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா வரை

கட்டுரைகள்

– ஸர்மிளா ஸெய்யித் பிறப்புறுப்புச் சிதைக்கப்பட்டு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் 200 மில்லியன் சிறுமிகள் மற்றும் பெண்களில் ஒருத்தி, பண்பாட்டுப் பழக்கம்  இன்னும் புழக்கத்தில் இருக்கின்ற சமூகமொன்றினது உறுப்பினள் போன்ற இன்னும் என்னவாறான தகைமைகள் இதைப்பற்றிப் பேசுவதற்குத்தேவைப்படலாம்! பெண் பிறப்பு உறுப்பு சிதைப்பு (Female Genital Mutilation – FGM), பெண் விருத்தசேதனம் (Female Circumcision) ஆகிய சொல்லாடல்கள் சில ஆண்கள்,மதவாதிகள், சமூக கலாசாரக் காவலர்களுக்கு அலர்ஜியாக இருக்கலாம். இனஒடுக்குதல்களாலும், வறுமையினாலும் உழன்று கொண்டிருக்கும் ஆப்பிரிக்கமக்களுக்கு மட்டுமே […]