சித்திரப்பேழை

‘தமிழீழத்தை ஆதரிக்கும் மாவோயிஸ்டுக்கு மணமகள் தேவை’ என்று அமரேசன் செய்திருந்த விளம்பரத்தைப் பார்த்துத்தான், முப்பது வருடங்களுக்கு முன்னால் அவரை யசோதா பதிவுத் திருமணம் செய்துகொண்டார். அப்போது அமரேசனுக்கு முப்பத்து நான்கு வயது. யசோதாவுக்கு இருபத்தெட்டு வயது. சென்ற வருடத்தின் கொடுங்குளிர் காலத்தில், அமரேசன் புற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது தொண்டையில் துளையிட்டுப் புகுத்தப்பட்டிருந்த மெல்லிய குழாய் காரணமாக அவரால் பேச முடியவில்லை. அவர் பேசுவதற்கு முயற்சிக்கவே கூடாது என்றுதான் மருத்துவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தார்கள். அந்த நிலையிலும் அமரேசனின் […]

Continue Reading

ஆறாங்குழி

இரும்பு மனிதன் எனப் பொருள்படும் ‘யக்கடயா’ என்ற பெயரால் என்னை ஒருகாலத்தில் இராணுவத்தில் அழைத்தார்கள் என்பதைத் தவிர, என்னைக் குறித்த தனிநபர் தகவல்களை நான் உங்களிடம் சொல்லப் போவதில்லை. இலங்கை வரலாற்றிலேயே நெடுங்காலம் தலைமறைவாக வாழும் மனிதன் நான்தான். முப்பத்து மூன்று வருடங்கள் மறைந்து வாழ்கிறேன். இப்போது நான் வசிக்கும் நாடு இலங்கைக்குத் தெற்குத் திசையில் உள்ளது என்பதோடு என்னுடைய அறிமுகத்தை நிறுத்திக்கொள்கிறேன். நான் வசிக்கும் கடற்கரையோர சிறு நகரத்தில் வருடம் முழுவதுமே வெயில் உண்டு. மிகப் […]

Continue Reading

காலப்புள்ளி

‘கருப்புப் பிரதிகள்’ வெளியிட்டிருக்கும் ‘டானியல் அன்ரனி கதைகள் – அதிர்வுகள் – கவிதைகள்’ தொகுப்பு நூலுக்கு எழுதிய முன்னுரை: நமது கையிலிருக்கும் இந்தச் சிறிய பிரதி டானியல் அன்ரனி அவர்களுடைய மொத்த எழுத்துகளின் ஒரு பகுதியே. கண்டடைய முடியாதவாறு தொலைந்துபோயிருக்கும் கணிசமானளவு சிறுகதைகளையும், எழுதி முடித்தும் அச்சேறாத ‘இரட்டைப்பனை’, ‘செவ்வானம்’ நாவல்களையும் கொண்டது அவரது படைப்புத் தடம். அவர் ‘அமிர்த கங்கை’ இதழில் எழுதத் தொடங்கியிருந்த குறுநாவல் தொடருக்கு ‘தடம்’ எனப் பெயரிட்டிருந்தார். அது முழுமையடையாமல் ஓர் […]

Continue Reading

கலா கலகக்காரர்

என்னுடைய பதினான்காவது வயதில், நான் முதன்முறையாக மு.நித்தியானந்தன் என்ற பெயரைக் கேள்விப்பட்டேன். இலக்கியவாதியாக அல்லாமல், ஒரு விடுதலைச் செயற்பாட்டாளராகவே அவர் எனக்குப் பத்திரிகைகள் வாயிலாக அறிமுகமானார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான அவரது உறவாலும், புலிகள் இயக்கத்தின் ஆரம்ப காலங்களிலே அவர்களுக்கு உற்ற துணையாகவிருந்ததாலும் நித்தியானந்தன் இலங்கை அரச படையினரால் கைது செய்யப்பட்டு, கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானவர் என்பதை வாரத்திற்கு ஒருதடவையாவது பத்திரிகைகள் எழுதிக்கொண்டேயிருந்தன. வெலிகடைச் சிறையில் நடந்த படுகொலைகளின் போது, ஆயுதமேந்திய கொலையாளிகளை வெற்றுக் கரங்களால் எதிர்த்துத் […]

Continue Reading

வேர்ச்சொல் – விடுதலை சிகப்பி – வெந்து தணிந்தது காடு

சென்னையில், கடந்த மாத இறுதியில் ‘நீலம் பண்பாட்டு மையம்’ ஒருங்கிணைத்த வேர்ச்சொல்- தலித் இலக்கியக் கூடுகை நிகழ்வில் ‘ஈழத் தலித் இலக்கியம்’ குறித்த அமர்வில் தோழர்கள் மு.நித்தியானந்தன், தொ. பத்திநாதன் ஆகியோரோடு நானும் உரையாற்றினேன். நேரப் பற்றாக்குறை காரணமாக, என்னுடைய உரை முழுமையுறவில்லை என்றே உணர்கிறேன். எனினும் கிடைத்த நேரத்திற்குள், ஈழத்தில் கடந்த அய்ம்பது வருடங்களில் சாதியம் எவ்வாறு தந்திரமாக – விடுதலைப் போராட்ட காலத்தையும் கடந்து – இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை விளக்க முற்பட்டேன். ஏனெனில், ஈழ […]

Continue Reading

கருங்குயில்

தன்னுடைய வீட்டின் மதிற்சுவரில், ஏன் சுற்றுலாப் பயணிகளான வெள்ளைக்காரிகள் விழுந்து புரண்டு முத்தமிடுகிறார்கள் என்பது ரவிசங்கருக்குப் புரியவேயில்லை. மூன்று மாதங்களுக்கு முன்புதான் புதிதாக வெள்ளையடிக்கப்பட்டிருந்த அந்த மதிற்சுவரில், இப்போது எண்ணிப் பார்த்தால் குறைந்தது நூறு லிப்ஸ்டிக் அடையாளங்களாவது இருக்கும். ஒரே நிறத்தில் அந்த அடையாளங்கள் பதிந்திருந்தால் கூட ஒருவேளை அதுவொரு அழகாக இருந்திருக்கக் கூடும். ஆனால், சிவப்பு, ஊதா, பச்சை, கருப்பு என எல்லா வண்ணங்களிலும் அந்தச் சுவரில் உதட்டு அடையாளங்கள் பதிந்து, குரங்கு அம்மைநோய் வந்தவனின் […]

Continue Reading

கதையின் மொழி இசை போன்றிருக்க வேண்டும்

இச்சா, BOX, கொரில்லா உள்ளிட்ட முக்கிய நாவல்களை எழுதிய எழுத்தாளர் ஷோபாசக்தியிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையத்தளத்திற்காக உரையாடினோம். அதிலிருந்து தொகுக்கப்பட்டது. உரையாடியவர்: வாசுகி ஜெயஶ்ரீ – இலங்கையில் உங்களது சொந்த ஊர் எது? இலங்கையின் வடதிசையில் ‘பாக்’ நீரிணையில் மிதக்கும் சின்னஞ்சிறிய தீவுகளில் ஒன்றான ‘லைடன்’ தீவில் அமைந்துள்ள ‘அல்லைப்பிட்டி’ கிராமம் ஒருகாலத்தில் என்னுடைய ஊராக இருந்தது. அங்கேதான் நான் பிறந்து வளர்ந்தேன். இப்போது என்னுடைய குடும்பத்தினர் யாரும் அங்கில்லை. எங்களுடைய குடிசை வீடும் இராணுவத்தால் […]

Continue Reading