பழி நாணுவார்

– ஷோபாசக்தி இந்தக் கட்டுரை இரு பகுதிகளாலானது. கட்டுரையின் இரண்டாவது பகுதி, உருவாகிவரும் ‘செங்கடல்’ திரைப்படம் குறித்தும் நான் படப்பிடிப்பில் ஊதியம் கேட்ட தொழிலாளர்களைத் தாக்கினேன் என்றும் கடந்த இரண்டு மாதங்களாகப் பத்திரிகைகளிலும் இணையங்களிலும் வெளியான செய்திகளின் / விமர்சனங்களின் யோக்கியதையை ஆராய்வது. முதற்பகுதி, எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் இப்போது இணையத்தளங்களில் என்மீதும் எனது தோழர்கள் மீதும் படுதீவிரமாகச் செய்துவரும் சேறடிப்புகளிற்கான எதிர்வினை. கட்டுரையின் முதற் பகுதியான யமுனா ராஜேந்திரன் மீதான எதிர்வினையைப் படிக்கும்போது “என்ன இவன் […]

Continue Reading

கொலைநிலம்

‘வடலி’ பதிப்பகத்தாரின் பதிப்புரையிலிருந்து: துவக்குகளுக்கு அஞ்சி கருத்துகளைச் சொல்ல முடியாது மரணித்தவர்களுக்கும் மௌனித்தவர்களுக்கும் இந்நூல் காணிக்கை… இலங்கைத் தீவில் ஒரு சிறிய இனத்தின் உரிமைச் சமரை உலகப் பேரினவாதங்கள் துவக்குகளின் முனையில் ஒடுக்கியிருக்கின்றன. ராஜபக்சே சிங்களத்தின் நவீன துட்டகைமுனுவாக உருவெடுத்திருக்கிறார். தீவின் தமிழ் பேசும் மக்களிற்கான அரசியல் பேரம் பேசும் சக்தி வெற்றிடமாக இருக்கும் நிலையில் எதிர்காலம் என்பது மிகுந்த கவலை அளிப்பதாய் உள்ளது. புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகான இக்காலகட்டத்தில் பிரபாகரன், ராஜபக்சே என்ற இரண்டே சதுரங்களுக்குள் […]

Continue Reading

தமிழ் நவீனத்துவ இலக்கியம், “தேசிய நீரோட்டம்”, திராவிட இயக்கம்

ராஜன் குறை உயிர் எழுத்து ஆகஸ்ட்இதழில் வெளியான கண்ணனின் “உலக மொழிகளில் தமிழ்ப் படைப்புகள்” என்ற கட்டுரையை முன்னிட்டு சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். அவரது ஆதங்கங்களும், அக்கறைகளும் எனக்கு உடன்பாடானவையே. தமிழ் படைப்பிலக்கிய சாதனைகள் உலகில் அறியப்படவேண்டும் என்பதில் எனக்கும் ஆர்வமும், அதற்காக என்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உண்டு. மேலும் கண்ணன் படைப்பின் தரம், மொழிபெயர்ப்பின் தரம், பதிப்பின் தரம் என்ற அளவில் அல்லாமல் சமூக வரலாற்று பின்னணியில் ஏன் […]

Continue Reading

இயங்கியல், அமைப்பியல் மற்றும் தேசம்

ராஜன் குறை பேராசிரியர் தமிழவன் தீராநதி ஜனவரி 2010 இதழில் எனது “மொழியுணர்வும், தேசியமும்: அண்ணா, தமிழவன், ஆண்டர்சன்” என்ற நவம்பர் 2009 தீராநதி இதழ் கட்டுரை குறித்து பொறுமையாகவும், பெருந்தன்மையாகவும் சில கருத்துக்களை கூறியுள்ளார். அதையொட்டி, இந்த உரையாடலைக் கவனித்து வரும் வாசகர்களின் பொருட்டு என்னுடைய சில சிந்தனைகளை மீண்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன். முதலில் சுருக்கமாக எனக்கும் தமிழவனுக்கும் இருக்கும் கருத்து மாறுபாடுகளை விளக்கக்கூடிய சில தத்துவப் பின்னனிகளைக் காண வேண்டும். அமைப்பியல் என்பது […]

Continue Reading

என்னுடைய தேசிய இனம்: இலங்கை அகதி

நேர்காணல்: மீனா ஈழத்தின் மரணப் போராட்டங்களை; சாதிய, இன, அதிகார வெறிகளால் மக்களுக்கு நேர்ந்த அவலங்களை, பிறந்த மண்ணைப் பிரிந்த அகதியின் மனநிலையை; அழுகுரலெடுக்கும் பெருஓலங்களாலோ, ரத்தக் கண்ணீர்களாலோ அல்லாமல் அசாதாரண எழுத்துகளால் உறைய வைத்து நமது நனவிலியைப் பிடித்தாட்டிய தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லி, ஷோபாசக்தி. நவீன இலக்கியத்தில் தனி முத்திரையைப் பதித்ததோடு இடதுசாரி அரசியல் வழிநின்று அரச பயங்கரவாதத்துடன் புலிகளின் பயங்கரவாதத்தையும் தொடர்ந்து கண்டித்து வருகிற வகையில், புலிகளைப் புனிதத் திருஉருக்களாக கட்டமைப்பவர்களால் உட்செரிக்க இயலாதவர். […]

Continue Reading

மொழியுணர்வும் தேசியமும்: அண்ணா, தமிழவன், ஆண்டர்சன்

-ராஜன் குறை தமிழ் மொழியிலிருந்தே தன் அணியலங்கார அல்லது சொல்லணி (rhetoric) நடையின் மூலம், தமிழ் என்ற வித்தியாசமான குறியை உருவாக்கி மொழியுணர்வை ஆரோக்கியமான ஜனநாயக அரசியலுக்கு அடிப்படையாக அண்ணா பயன்படுத்தினார் என்பது தமிழக வரலாற்றின் முக்கியமான திருப்பு முனை. உண்மையில் தமிழர்கள் உணர்வளவில் தேசமாகிவிட்டார்கள், தேசிய அரசைத்தான் தோற்றுவிக்கவில்லை என்று சொல்லலாம். மத்திய அமைச்சரவையில் பங்குபெறும் நிலையில் தமிழகத்தில் அது இனி பிரச்சினையில்லை. ஆனால், இலங்கையில் தமிழர்கள் வரலாற்றின் முரண்களில் சிக்கி பெரும் அழிவை சந்தித்துள்ளனர். […]

Continue Reading

வல்லினம்

எழுத்தாள/வாசக நண்பர்களுக்கு வணக்கம். ‘வல்லினம்’ மலேசியாவிலிருந்து வெளிவரும் கலை, இலக்கிய மாத இணைய இதழாகும். http://www.vallinam.com.my என்ற அகப்பக்கத்தில் நீங்கள் வல்லினத்தை வலம் வரலாம். தற்போது அக்டோபர் 2009 (இதழ் 10) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வல்லினம் இதழ் புதுப்பிக்கப்படும்போது மின்னஞ்சல் வழியாக தங்களுக்குத் தகவல் அனுப்பப்படும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வல்லினம் இதழ் மற்றும் வல்லினம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்கள் மட்டுமே மின்னஞ்சலாக தங்களுக்கு அனுப்பப்படும். தங்கள் படைப்புகள் மற்றும் […]

Continue Reading