முப்பது காசுப் புரட்சி

‘ஆடுதல், பாடுதல், சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர், பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவார்’ என்ற பாரதியின் வாக்கை மகுட வாக்கியமாகக்கொண்டு, 1966 ஓகஸ்ட் தொடங்கி அரை நூற்றாண்டு காலம் வெளிவந்த ‘மல்லிகை’ இதழின் தனி இயங்குசக்தியாக விளங்கியவர் மறைந்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா. அவர் ‘மல்லிகைப் பந்தல்’ என்ற பதிப்பகத்தையும் உண்டாக்கி, அய்ம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டார். கடுமையான யுத்தச் சூழலிலும், விமானக் குண்டு வீச்சுகளுக்குக் கீழேயும் மல்லிகை ஓயாமல் மலர்ந்தது. மொத்தமாக […]

Continue Reading

இழிசெயல்!

ஓர் இலக்கியப் படைப்பை எழுதி வெளியிட்டுவிட்டால், அது குறித்து வரும் எல்லாவித விமர்சனங்களையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். நமது மனதுக்குப் பிடிக்காத விமர்சனங்கள் என்றாலும் கூட அங்கீகரித்தே ஆகவேண்டும். அது இலக்கிய அறம். படைப்புக்கு வெளியே சென்று எழுதியவனின் மீது அவதூறுகளை அள்ளிக்கொட்டும் சல்லிப் பயல்கள் நிரம்பிய உலகமிது என்பதால் கவலை ஏதுமில்லை. அவற்றை மயிரெனவும் பொருட்படுத்த வேண்டியதுமில்லை. ஆனால், அந்த அவதூறுகளை ‘விமர்சனம்’ என்ற பெயரில் ஓர் இலக்கிய இதழ் வெளியிடுவது இலக்கியத்திற்குப் பிடித்த […]

Continue Reading

Conservative Estimate

“நீங்கள் ஏன் புலிகள் அமைப்பில் சேர்ந்தீர்கள்” என ஊடக நேர்காணல்களில் கேள்விகள் கேட்கப்படும் போதெல்லாம், நான் சொல்லும் காரணங்களில் முதன்மையானது ‘வெலிகடைச் சிறைப் படுகொலைகள்’. 1983 ஜுலை 25-ம் தேதி குட்டிமணி, தங்கத்துரை உட்பட 35 தமிழ் அரசியல் கைதிகளும், 27-ம் தேதி டொக்டர் இராஜசுந்தரம் உட்பட 18 தமிழ் அரசியல் கைதிகளும் வெலிகடைச் சிறையில் வெட்டியும் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த 53 படுகொலைகளும் அழியாத நினைவுகளாக என் போன்றவர்களின் மனதில் இன்னுமிருக்கிறது. எப்போதுமிருக்கும். ஆனால் […]

Continue Reading

அஞ்சலி: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை என் காதில் அம்மாவின் குரலோ, வேறு யாருடைய குரலோ தினந்தோறும் ஒலிக்க வாய்ப்பிருந்ததில்லை. ஆனால் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் குரல் ஒருநாள் தவறாமல் எனக்குக் கேட்டுக்கொண்டிருந்தது. சிறையிலிருந்த போது கூட யாராவது ஒரு சிறைத் தோழன் அவரைப் பாடிக்கொண்டிருப்பான். எம்.ஜி.ஆர். இரசிகர்களான எங்களுக்கு எஸ்.பி.பி. எங்களுடைய ஆள் என்ற ஒரு பிணைப்பிருந்தது. ‘ஆயிரம் நிலவே வா’ எனத் தொடக்கிவைத்த வாத்தியார் ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்’, ‘அவளொரு நவரச […]

Continue Reading

எழுதுவதை நிறுத்திக்கொள்கிறேன்!

2014-ம் வருடம் சுவிஸில் நடந்த 43-வது இலக்கியச் சந்திப்பில் நிகழ்ந்த ஒரு விஷயம்: இந்த இலக்கியச் சந்திப்புக்கு சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கையிலிருந்து எம்.ஏ.நுஃமானும், இந்தியாவிலிருந்து ம.மதிவண்ணனும், அமெரிக்காவிலிருந்து யாழினி ட்ரீமும் அழைக்கப்பட்டிருந்தார்கள். (நுஃமான் அவர்கள் உடல்நலக் குறைவால் இறுதிநேரதில் பயணத்தை இரத்துச்செய்ய, அவரின் கட்டுரை சந்திப்பில் வாசிக்கப்பட்டது). அய்ரோப்பா முழுவதுமிருந்து தலித் அரசியலாளர்களும் எழுத்தாளர்களும் சந்திப்புக்கு வந்திருந்தார்கள். அந்த இலக்கியச் சந்திப்பில் உரையாற்றிய தோழர் ஏ.ஜி.யோகராஜாவின் அமர்வில், அவருக்குப் பதிலளிக்கும் முகமாக நான் சொன்ன செய்தியை ஞாபகத்திலிருந்து […]

Continue Reading

குறைந்த அபாயம்!

அவ்வப்போது என்னைக் குறித்து ஏதாவதொரு வம்புச் செய்தியை, முகநூல் வம்பர்கள் கூட்டாகப் பரப்பிவிடுகிறார்கள். அந்தவகையில் புதிய வம்புச் செய்தி: ஷோபாசக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கிறார். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிற்போக்குத்தனங்கள் குறித்து அவருக்கு விமர்சனங்கள் இல்லை. இதைக் கொஞ்சம் விளக்கிவிடுகிறேன். ‘யாவரும்.காம்’ இணைய இதழுக்கு கொடுத்த நேர்காணலில் நான் சொல்லியிருந்த ஒரேயொரு வாக்கியத்தை முன்வைத்தே, இந்த வம்புப் பேச்சு கிளப்பிவிடப்பட்டிருக்கிறது. அந்த நேர்காணலில் நான் இவ்வாறு சொல்லியிருந்தேன்: “தேர்தல் காலங்களில் என்னுடைய ஆதரவை ஆயிரத்தெட்டு […]

Continue Reading

அந்த மூன்று நிமிடச் சாட்சியம்

நண்பர்கள் சயந்தனும், சோமிதரனும் இன்று வெளியிட்டிருக்கும், ஒரு மூன்று நிமிட நேரக் காணொளி குறித்துப் பேசிவிட நினைக்கிறேன். இற்றைக்குப் பதினேழு வருடங்களுக்கு முன்னதாக, யாழ் பொதுநூலக நிலையத் திறப்புவிழா தடுத்து நிறுத்தப்பட்டது நாம் அறிந்ததே. அது ஏன் தடுத்து நிறுத்தப்பட்டது, எப்படித் தடுத்து நிறுத்தப்பட்டது என்பதில் மாறுபட்ட கருத்துகள் சொல்லப்படுவதுண்டு. தடுத்து நிறுத்திய புலிகள் அதற்கான காரணத்தை எப்போதுமே சொன்னதில்லை. அப்போதைய மேயர் செல்லன் கந்தையன் தலைமையில், வீ. ஆனந்தசங்கரி அந்த நூலகத்தைத் திறந்துவைப்பதாக இருந்தது. திறப்புவிழா […]

Continue Reading