சுகனின் கவிதை – 03.03.2005

கட்டுரைகள்

காலம் தேவையில்லை
எங்கே என்பதும் தேவையில்லை
யாரென்பதும் தேவையில்லை
எப்படியென்பதைக் கேளுங்கள்   வீட்டிற்கு வந்தார்கள்
“அவரிற்கு நாங்கள் மரணதண்டனை விதித்துள்ளோம்”
என் மனைவியிடம் சொன்னார்கள்

“எங்களிடம் தோட்டாக்கள் இல்லை
தோட்டாக்கள் வாங்குவதற்குப் பணம் அதிகம்
நாங்கள் அவரைத் துண்டு துண்டாக வெட்டிக்
கொல்லப் போகின்றோம்” என்றார்கள்; மேலும்.

ஊரவர்கள் ஒரு தோட்டாவுக்கு எண்பது ரூபாய் வீதம்
மூன்று தோட்டாவுக்காக இருநூற்றி நாற்பது ரூபாயைச்
சேர்த்து அவர்களிடம் கொடுத்தார்கள்.

சுகன்   நன்றி – காலம்