டிட்டோயிசத்தின் கடைசிப் போராளி

கட்டுரைகள்

மிலசவிக் – டிட்டோயிசத்தின் கடைசிப் போராளி

 தமிழரசன்

மிலசவிக் - டிட்டோயிசத்தின் கடைசிப் போராளி

32 இனங்களையும் வித்தியாச மக்கள் பிரிவுகளையும் உள்ளடக்கிய மொத்தமாக 22 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நாடாக யூகோஸ்லாவியா இருந்தது. தற்போது 4,60,000 மக்கள்தொகையும் பல்வேறுபட்ட இனங்களையும் கொண்ட மொன்ரநீக்ரோ கடைசியாக யூகோஸ்லாவியாவின் சமஸ்டிக் குடியரசில் இருந்து பிரிந்த பின்பு 10 மில்லியன் மக்கள்தொகையுடன் சேர்பியா மட்டும் மிஞ்சியுள்ளது. அரை நூற்றாண்டுகள் கூடி வாழ்ந்த வித்தியாசமான மதம், இனம், மொழி கொண்ட மக்கள், யூகோஸ்லாவிய தேசத்தின் குடிமக்களாகத் தம்மை அடையாளம் கண்டவர்கள் இன்று பல தேசங்களாகச் சிதறடிக்கப்பட்டுவிட்டனர். சக தொழிலாளியாய் பக்கத்து வீட்டுக்காரராய், கட்சி உறுப்பினர்களாய், பள்ளித் தோழர்-தோழியாய், வாழ்க்கைத் துணையாய் வாழ்ந்த மக்கள், அக்கம்பக்கமாய் கூடி வாழ்ந்த மனிதர்கள் பகையான இனவெறிக் கூட்டமாய் எப்படி ஆயினர். எப்படி ஒவ்வொரு இனமும் தாம் யூகோஸ்லாவிய மக்கள் என்பதை மறந்து இனத்துக்கொரு நாடு கேட்கும் நிலை எப்படிப் பிறந்தது? ஐ.நா.சபையில் கிட்டத்தட்ட  185க்கு மேற்பட்ட இனங்களே நாடுகளாக அங்கம் வகிக்கின்றன. ஆனால் உலகில்  4,000க்கு மேற்பட்ட இனங்கள் உள்ளன. அனைவருக்கும் ஐ.நா. சபையில் உறுப்புரிமையோ தனித்தனி நாடோ கிடையாது. அது சாத்தியமுமல்ல.

மேற்கு ஐரோப்பாவில் ஐரிஸ், பாரிஸ், கோர்சிக்கா போன்ற நாடுகளில் தேசியக் கிளர்ச்சிகள் பல நூற்றாண்டுகளாக நடந்தபோதும் அவை ஒடுக்கப்பட்டன. துருக்கியில் குர்திஷ், அமேனியா மக்கள் பல மில்லியன் இனரீதியாக அழித்தொழிக்கப்பட்ட வரலாறுகள் சாகாமல் உள்ளன. நாட்டோ நாட்டுச் சிறைகளில் பிரிவினைவாதிகள் என்று தேசியத்துக்குப் போராடியவர்கள் இன்னமும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பிரிவினைவாதிகளாக, பயங்கரவாதிகளாக மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது தேசிய இனங்களின் சுயநிர்ணயம் அவர்கட்கும் உண்டு என்று ஒப்பாதவர்கள் யூகோஸ்லாவியாவில்  உள்ள மக்களுக்கு தேசிய அடையாளம் தேவை, அவர்கள் யூகோஸ்லாவியா என்ற பொதுச் சுலோகத்துள் சேர்பியத் தேசியத்தில் மூழ்கடிக்கப்பட்டு தனித்துவம் இழந்துவிட்டதாய் பெருமூச்செறிந்தனர். தேசிய இனங்கட்கான சுயநிர்ணய உரிமை அவர்கட்கு உண்டென நாட்டோ ஊடகங்கள் காலை முதல் மாலை வரை முறைப்பாடு செய்தன. சகல இனங்களிலுமுள்ள பாசிச சக்திகளையும் இரண்டாம் உலக யுத்த அரசியல் மிச்ச சொச்சங்களையும் தேடிக் கண்டுபிடித்து யூகோஸ்லாவியாவின் பல மக்களினங்களின் கூட்டு வாழ்வைச் சிதறடித்தனர். யூகோஸ்லாவிய மக்கள் தமது தேசத்தின் வளங்களை தமது உழைப்பை ஒன்றாய்க் குவிந்து கூடிப் பங்கிட்டு வாழ்ந்த ஞாபகங்கள் அழிக்கப்பட்டன. அம்மக்களின் தொழிற்சாலைகள், வங்கிகள், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், விவசாய உற்பத்தி நிலங்கள், பூங்காக்கள் உட்பட சகலதும் அன்னிய முதலாளிகட்கு உடமையாவது, மக்கள் கடந்தகால உழைப்பையும் அதன் சேமிப்புகளையும் இழப்பது பொருளாதார சுதந்திரம் எனப்பட்டது. யூகோஸ்லாவிய தேச அடையாளத்தில் கலக்க மறுத்தவர்கள் உலகமயமாக்கலின் உலகமயமான பொருளாதார கலாச்சார ஓட்டத்துள் கலந்துபோயினர்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்பு அத்லாந்திக் கடல்பிரதேசத்திற்கும் சீனாவுக்கும்  இடையில் மிஞ்சிக் கிடந்த அரசுடமைகளைக் கொண்ட நாடு யூகோஸ்லாவியா மட்டுமே. அதை மாக்கியவல்லியின் 16ஆம் நூற்றாண்டுப் பிரித்தாளும் தந்திரத்தைப் பயன்படுத்தி உடைத்தனர். ஜெர்மனியின் மந்திரியாக இருந்த கிறிஸ்டியான் சுவாட்ஸ் சில்லிங் (Christian Schwarz – Schilling) நாட்டோவால் யூகோஸ்லாவியா வெட்டிச் சிதைக்கப்பட்டுக்கொண்டு இருந்தபோது “யூகோஸ்லாவியாவுடன் சாதகமான சிதைவுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. மோசமான காலத்திலிருந்து விடுதலை பெறுவது நடைபெறுகிறது” எனக் கூறினான் ஜெர்மனியின் பழைய பாதுகாப்பு அமைச்சரும், நிர்வாக நீதிமன்றத் தலைவருமான ரூபேட், ஸ்சோல்ஸ் (Rupert Scholz) “முதலாம் உலக யுத்தத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் உலக யுத்தத்தால் தீர்க்கப்படாத பிரச்சினை கொண்ட நாடாக யூகோஸ்லாவியா விளங்கியது பலமானவர்களின் நாடு என்ற பெயரில் பல இனமக்களது சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டது எனக் கூறினான். ஆனால் இதே சுயநிர்ணய உரிமை ஐரிஸ், பாரிஸ், குர்திஸ் மக்களுக்கும் உள்ளது என்பது இவர்களின் பேசுபொருளாவதில்லை. மாறாக அவர்கள் பயங்கரவாதிகளாகப் பட்டனர். 1991இல் ஜெர்மனியில் வெளிநாட்டமைச்சராக இருந்த தீவிர வலதுசாரி வெறியனான கான்ஸ் பீட்ரிச் கென்சர் யூகோஸ்லாவியாவின் பல்லின வாழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் “ஒரு கட்சி ஆட்சிமுறை, மத்திய ஆசிய வகைப்பட்ட கொமண்டோப் பொருளாதாரம், ஜனநாயகப் பன்மைப் போக்குக்கு மாற வேண்டும். இராணுவ வகைப்பட்ட ஒழுங்கமைப்புகள் மாற்றப்படல் வேண்டும்” என்று கூறினான்.

பிரிக்கப்பட்ட நாடுகளில் தேசியவாதிகள்தாம் சிறப்பாய் வாழ்வதாகக் காண்பிக்க முயற்சித்தபோதும் பழைய யூகோஸ்லாவிய நாட்டின் பொருளாதார மாற்றையோ, சமூக மட்டத்தையோ, வாழ்வுத் தரத்தையோ அவர்களால் எட்ட முடியவில்லை. கறுப்புச் சந்தை மாபியா அரசியல் பெருகியது. ஒரு விசேட சுரண்டும் உயர் வர்க்கம் ஆடம்பர உடைகள், விலை உயர்ந்த மேற்கு நாட்டுக்காரர்கள், விமானப்பறப்பு, உயர் உல்லாச விடுதிகள், சொத்துக்களோடு இணைந்துகொண்டது. இனத்தூய்மை பேசியவர்கள், இனச்சுத்திகரிப்புச் செய்தவர்களின் நாடுகளில் பாலியல் விற்பனை விடுதிகள் தோன்றியபோது சகல இனப் பெண்களும் இருந்தார்கள். குரோட்டியா, பொஸ்னியா, சேர்பியா, கொசவோ போன்ற நாட்டுப் பாலியல் தொழில் புரியும் விடுதிகளில் பால்கன் பிரதேசத்தில் உள்ள எல்லா இன, மதப் பெண்களும் கிடைத்தார்கள். சுத்தமான தேசிய இன ஒழுக்கம் விரும்பியதாய்ச் சொல்லப்பட்ட ஆண்கள் சகல இனப் பெண்களையும் நுகரும் பெருவாய்ப்புப் படைக்கப்பட்டது. கொசவோவில் இருந்து அல்பானியர்கள் அல்லாத சகலரையும் துரத்திய சிரிரி தான் கட்டுப்படுத்தும் பாலியல் தொழில் நடத்தும் சகல விடுதிகளிலும் சேர்பியப் பெண்கள் உட்பட தம் சொந்தக் கொசவோ அல்பானியப் பெண்களால் நிரப்பப்பட்டிருந்தது.

நாசி கால ஜெர்மனி வீழ்ச்சியடைந்தது போல யூகோஸ்லாவியாவின் பல்லின மக்களைக் கொண்ட அரசும் வீழ்வது நியாயம் எனவும் அதற்கு சர்வதேசத் தலையீடு தேவை என்றும் நாட்டோ வாதிட்டது. நாட்டோ பாசிச இராணுவ அரசியல் கூட்டானது யூகோஸ்லாவியாவில் நாசி அரசுடன் ஒப்பிட்டமையின் மூலம் தமது சொந்த பாசிசத் தொடர்ச்சியை மறைக்க முயற்சித்தது. யூகோஸ்லாவியாவில் சேர்பியத் தேசியவாதம் 1991களின் பின்னர் அது நாட்டோ பயங்கரவாதிகளைத் தீவிரமாய் எதிர்க்கும் போக்கிலேயே பிறந்தது. டிட்டோவின் மனைவியாக இருந்து இறந்த டாபோர்ஜன்கா பாவுனோவிக் (Davorjanka Paunovic)  ஒரு சேர்பியப் பெண்ணாவார், யூகோஸ்லாவியாவின் 16 ஜெனரல்களில் இருவர் மட்டுமே சேர்பியர்கள். பல நூறாயிரம் மக்கள் கலப்பு மணம் புரிந்திருந்தனர், பல நூறாயிரம் கலப்பு இனக் குழந்தைகள் பிறந்தன. தொழிற்சாலைகளில் இனம் கடந்து தொழிலாளர்கள் கூட்டாக உழைத்தனர். இரண்டாம் உலக யுத்தத்தால் அழிவுற்ற தேசத்தை மீண்டும் அழகும் மகிழ்ச்சியும் நிறைந்ததாய்ப் படைத்தார்கள். இன்று மிகுந்து நிற்கும் சேர்பியாவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் சேர்பியர் அல்லாத பல்லின மக்கள் கூட்டமாகும்.

ஜெர்மனியானது 1980 முதல் யூகோஸ்லாவியுள் அரசியல், உளவுத்துறை செயற்பாடுகள் ஊடாகத் தலையிட்டு வந்தபோதும் ஜெர்மனிய இணைப்பு நடைபெற்ற 30 அக்டோபர் 1989 பலமான ஏகாதிபத்தியமாய் எழுந்தது. தனது அரசின் புவியியல், இராணுவ குணாம்சங்களை முன்னரைவிட அதிகமாய்ப் பெற்றது, ஜெர்மனிய கான்சிலராக இருந்த கெல்மட் கோல் “ஜெர்மனிய மண்ணில் இனி சமாதானம் நிலவும், ஐரோப்பிய தேசங்களின் எல்லைகளையும் நாடுகளின் இறையாண்மை சமாதானம் என்பவை நிலவுவதற்கான அடிப்படையாய்க் கருதுகின்றேன்” என்றான். எனினும் இத்தகைய சம்பிரதாயபூர்வமான பேச்சுகட்கும் ஏகாதிபத்திய அரசியல் நடப்புகட்கும் எந்தத் தொடர்பும் நிலவவில்லை. ஜெர்மனிய ஏகாதிபத்தியமானது ஜெர்மனிய வெளிநாட்டமைச்சர் கிளவுஸ் சிங்கல் மூலமாகத் தன் விருப்பைப் பின்வருமாறு வெளியிட்டது “நாம் இருமுறை இழந்ததை இம்முறை திரும்பப்பெற வேண்டும்” என்று முதல், இரண்டாம் உலக யுத்தத்தில் ஜெர்மனிய இழப்பை ஈடு செய்ய ஆயத்தங்கள் நடந்தன.

மிலசவிக் - டிட்டோயிசத்தின் கடைசிப் போராளி

CNN, BBC, ARD என்ற வரிசைகள் மிலசவிக் – சேர்பிய எதிர்ப்பை உளவுத்துறை உதவிகளோடு வடிவமைத்து நடத்தி வந்தபோது சர்வதேச ரீதியாக யூகோஸ்லாவிய அரசுக்கு இதற்கு சமமாக தன் நியாயத்தைச் சொல்ல எந்த மார்க்கமும் இருக்கவில்லை. யூகோஸ்லாவிய அரசு தோற்றம் பெற்றமைக்கான வரலாற்றுக் காரணிகள் மிலசவிக் வெளியிட்டு வந்த அரசியல் கருத்துநிலை பற்றிய விவாதங்கள் ஊடகங்களில் விவாதிக்கப்படும் தகுதி பெற்றிருக்கவில்லை. மிலசவிக் முதல் சேர்பிய மக்கள் வரை சர்வாதிகாரி – இனங்களை ஒடுக்குவோர் என்ற தினசரிக் கருத்துருவாக்கம் நிரூபணங்கள் இல்லாமலே பரப்பப்பட்டன. மிலசவிக், சுவிஸ், கிரிஸ், சைப்பிரஸ், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் சட்டவிரோத வழிகளில் திரட்டிய  பணம் பாதுகாக்கப்பட்டு வருவதாயும் இன்டர்பேஸ் அதைத் தேடிவருவதாயும் சொல்லப்பட்டது. ஆனால் கடந்த 15 வருடமாயும் இன்டர்பேஸ் தேடி ஒரு டொலர்கூட இரகசிய வங்கிக் கணக்குகளில் இருப்பதாய் நிரூபிக்க முடியாமையின் காரணம் இவை. பொய் என்பதற்கு அப்பால் மிலசவிக் சார்ந்த எதிர்ப்பு இயக்கத்துக்கு கருத்துருவாக்கத்துக்குத் துணையாக இருந்தன. அரசியல் கரிசனை  மிக்க இடதுசாரி ஏடுகள்தான் இந்த ஆதாரமற்ற உளவுத்துறை வதந்திகளை தகர்த்துப்  போரிட்டு வந்தன. ஏகாதிபத்தியப் பொய்கள் நீண்ட ஆயுள் பெற்று சீவித்து வந்தன. மிலசவிக் தனக்கு வங்கிக் கணக்குகள் வெளிநாட்டில் இருப்பதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று அறிவித்ததோ யூகோஸ்லாவியா சார்பான வாதங்களோ நாட்டோ ஊடகங்களில் ஒருபோதும் காணக் கிடைக்காதவையாக இருந்தன. ஈராக்கில் இரசாயன, உயிரியல் ஆயுதங்களை சதாம் உசேன் கொண்டிருப்பதாய் சொல்லி நாட்டோ யுத்தம் தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவொரு உயிரியல், இரசாயன ஆயுதமும் ஈராக்கில் கண்டுபிடிக்கப்படவில்லை ஆனால் ஏகாதிபத்திய ஊடகப் பயங்கரவாதிகள் இதை மறைக்க வேறு பெரிய பொய்களை நோக்கி ஓடிவிட்டனர்.

மிலசவிக்கை, பொய்யன், பயங்கரவாதி, சர்வாதிகாரி, இட்லர் என்றவர்கள் சொந்தமாய் தாமே கடந்த காலத்திய ஜெர்மனியப் பாசிசத்தின் பரம்பரையில் இருந்து வந்தவர்களாக இருந்தனர். மிலசவிச்சை  கிட்லருடன் ஒப்பீடு செய்தமையின் மூலம் ஜெர்மனியின் குண்டுகள், ஏவுகணைகள் பெல்கிராட்டில் பெண்கள் குழந்தைகள் உட்பட பொதுமக்களைக் கொல்வதற்கு நியாயம் காட்டப்பட்டது. மேற்கு ஐரோப்பாவில் இருந்த போர் எதிர்ப்பு இயக்கங்களின் பலம் காரணமாகவும் நாட்டோ தனது ஊடகத் தொழிற்சாலைகளில் இருந்து புனைவுகளைக் கணக்கு வழக்கில்லாமல் தயாரித்துக் குவித்தது. இவைகளில் பெரும் பகுதி மக்களின் கருத்தியல்களைக் கட்டுப்படுத்தின. உதாரணமாக ஜெர்மனிய கொலண்ட் எல்லையில் வருடாவருடம் இடம்பெறும் 2ஆம் உலக யுத்த அழிவுகளை நினைவுகூரும் சமாதானத்துக்கான நடந்தும் >> Nooit meer -nie wieder << அமைப்பு நாட்டோ யூகோஸ்லாவியாவில் ஏற்படுத்திய யுத்த அழிவுகளைப் பற்றிய புகைப்படக் கண்காட்சி அதில் இடம்பெறுவதைத் தடுத்ததுடன் அவை ஒரு பக்கச் சார்பானவை என்றும் விளக்கப்பட்டது. 1999இல் சேர்பியா மீது நாட்டோ இராணுவத் தாக்குதல்களை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது ஜெர்மனியின் Hannoue நகரில் உள்ள மருத்துவ வளாகத்தில் சிகிச்சை பெற்றுவந்த ஒரு ஜெர்மனியப் பெண் சேர்பிய இனத்தைச் சேர்ந்த பெண் மருத்துவரான Dr. Ljiljana என்பவரிடம் அவர் சேர்பியர் என்பதைக் காரணம் காட்டி சிகிச்சை பெற்றுக்கொள்ள மறுத்தாள்.

நாட்டோ நாடுகளில் மட்டுமல்ல முழுக் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் தொடர்பு ஊடகங்களை மேற்கத்தைய ஊடக நிறுவனங்களே கட்டுப்படுத்தின. சேர்பிய எல்லையுள் மட்டும்  நாட்டோ நிதியூட்டலில் அரசு அனுமதியின்றி ஊடகங்கள் பெருமளவு சட்டவிரோதமாக இயங்கின. பெல்கிராட்டில் மட்டும் அவைகளின் தொகை 38 ஆகும். இவைகளை சேர்பிய அரசு தடுத்து தடை செய்தபோதெல்லாம் சேர்பிய சர்வாதிகார அரசு ஊடக உரிமைகளை முடக்குவதாய், கருத்து சுதந்திரத்தை நசுக்குவதாய் உலக அரங்கில் இவர்கள் கூவினார்கள்.   யூகோஸ்லாவிய எல்லையுள் செயற்படும் 90% ஊடக நபர்கள் நாட்டோ உளவாளிகளாக இருந்தனர். அமெரிக்காவின் “USAID” (Us-Agency For International Development) உட்பட பல நாட்டோ ஊடகங்கள் சேர்பிய எதிரணி தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, சஞ்சிகைகளில் எவ்வாறு பிரச்சாரம் செய்வதென்று பயிற்றப்பட்டனர். பிரச்சார உத்தி, செய்தி தருவது, நிகழ்ச்சிகளைத் திட்டமிடல், நிர்வாகம் உட்பட சோசலிச எதிர்ப்பு மிலசவிச் எதிர்ப்பு என்பனவுக்கு தயாரிக்கப்பட்டனர்.

சுதந்திர ஐரோப்பிய வானொலி (Radio Freies Europa) சேர்பிய மொழியில் தினசரி 13.5 மணி நேரம் நிகழ்ச்சிகளைப் புதிதாகத் தொடங்கியது. வொயிஸ் ஓவ் அமெரிக்கா, Reuter die deutsche welle, Radio France International  என்பவையும் தனித்தனியே சேர்பியாவிற்கான நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கின. ஜெர்மனியின் ZDF, Bayerischen Rundfunk என்பன உத்தியோகபூர்வமான சேர்பிய எதிரணிகட்கு வேலை செய்தன. die deutsche welle 1999இல் சேர்பியர்கட்கான ஊடகச் சேவைகட்கென 10 மில்லியன் ஜெர்மனிய மார்க்குகளை ஒதுக்கியது, இந்த வருடம் ஜெர்மனியில் இருந்து மட்டும் சேர்பிய எதிரணி ஊடகங்கட்கு 17 மில்லியன் ஜெர்மனிய மார்க்குகள் நிதி தரப்பட்டது. இவை சுதந்திர ஊடக உரிமைகளை உறுதிசெய்யும் நடவடிக்கை எனப்பட்டது. கோஸ்டுனிக்கா, டிஜின்டிஜிக் போன்ற ஆசிய அநாமதேயங்கள் சேர்பிய மக்களின் உண்மையான தலைவர்கள் என்றும் கூறப்பட்டது. 2000இல் தேர்தலுக்கு முன்பாக 4 மில்லியன் மார்க் பெறுமையான நவீன அச்சு இயந்திரங்கள் சேர்பிய எதிரணிக்கு ஜெர்மனியால் வழங்கப்பட்டது. சேர்பிய எதிரணியிடம் இருந்த தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, சஞ்சிகை, ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப வசதிகள் என்பன சேர்பிய அரச ஊடகங்களைவிட உயர்வாகவும் நவீனமாகவும் பலம் படைத்தவையாகவுமிருந்தன.

Waz – Gruppe எனும் ஜெர்மனிய ஊடக நிறுவனம் குரோட்டியா, பல்கேரியா, மொன்ரநீக்ரோ, மசிடோனியா பெரும் பகுதிப் பத்திரிகைகளை நடத்தியது இந்த நிறுவனம். தென்கிழக்கு ஐரோப்பாவில் மட்டும் 23 பத்திரிகைகள், 38 சஞ்சிகைகள், 10 விளம்பரப் பத்திரிகைகளை நடத்துகிறது. ஐரோப்பாவுள் waz – Gruppe மொத்தமாக 30 முக்கியப் பத்திரிகைகள், 50 முக்கிய சஞ்சிகைகள் நடத்துகின்றனர் 14,000 பேர் வேலை செய்கின்றனர். இவர்கள் சேர்பியாவில் 50% பத்திரிகைகளைக் கட்டுப்படுத்துகின்றனர். இவர்களிடம் முக்கிய சேர்பியப் பத்திரிகை பெரிய Politika, பெரிய பத்திரிகையான Vecernje Novosti இரண்டும் உள்ளன. சேர்பியாவில் எந்தப் பெரிய பத்திரிகையும் சேர்பியர்களிடம் இல்லை “Blic” சுவிஸ் ஊடக நிறுவனமென்றாலும் “Dunas” அன்னிய தன்னார்வக் குழுவின் நிதியிலும் இயங்குகின்றன. குரோட்டியாவிலும் 75% பத்திரிகைகள், பல்கேரியாவில் 75% பத்திரிகைகள், ஜெர்மனிய Essen நகரில் உள்ள “mediengigant” சொந்தமாயிருந்தது. “der Rheinischen Post” என்ற ஜெர்மனிய ஊடக நிறுவனம் போலந்து உட்பட பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சுவிசின் “Ringier” நிறுவனம் ரூமேனியா உட்பட 3 பெரும் பத்திரிகைகள் அடங்கலாக  5 முக்கியப் பத்திரிகைகளை நடத்தியது. ஐரோப்பியாவில் உள்ள பெரும் அச்சு நிறுவனமான “Passauer Neuen Presse” செக்கில் சகல பிராந்தியப் பத்திரிகைகளையும் வெளியிடுகிறது. கிழக்கு ஐரோப்பாவில் இவர்கள் 20 பெரும் பத்திரிகைளை வெளியிட்டபோது செக் மக்களின் கையில் ஒரு பத்திரிகைகூட இருக்கவில்லை. ஜெர்மனிய Axel Springer ஊடக நிறுவனம் 2006இல் போலந்தில் மட்டும் 30 பத்திரிகைகள், சஞ்சிகைகளை நடத்துகிறது.

எனவே யூகோஸ்லாவியாவில் மக்கள்தொடர்புச் சாதனங்கள் ஏகாதிபத்தியக் கட்டுப்பாட்டில் இருந்தது. மிலசவிக்குக்கு எதிரான கருத்துகள் இவைகள் மூலமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் விதைக்கப்பட்டன. கிழக்கு ஐரோப்பாவில் ஜெர்மனிய இராணுவம் சாதித்ததைவிட ஜெர்மனிய மக்கள்தொடர்பு ஊடக நிறுவனங்கள் சாதித்தவை அதிகமாகும்.

முழுமையான பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்…

3 thoughts on “டிட்டோயிசத்தின் கடைசிப் போராளி

  1. யூகோஸ்லாவிய பற்றி ஸ்ராலினின் மார்க்சிய நிலைப்பாடும்;, டிரொட்ஸ்க்கிய மற்றும் குருச்சேவின் நிலைப்பாடும்

     

    யூகோஸ்லாவிய முதலாளித்துவத்தை நோக்கி தன்னை வளப்படுத்திய போது, சர்வதேச கம்யூனிச இயக்கமே இதற்கு எதிராக போராடியது. குறிப்பாக ஸ்டாலின் இந்த முதலாளித்துவ பாதைக்கு எதிராக கடுமையான அரசியல் போராட்டத்தை நடத்தினார். ஆனால் ட்ராட்ஸ்கிகள் யூகோஸ்லாவியவின் முதலாளித்துவ மீட்பை ஆதாரித்ததுடன், அதை மார்க்சியமாகவே பிரகடனம் செய்தனர். இதன் போது ட்ராட்ஸ்கிகள் ஸ்ராலின் அவதூற்றிலும், ஸ்ராலின் எதிர்ப்பிலும் தம்மைத் தாம் புடம் போட்டவராக இருந்தாலும், தமக்கிடையில் ஒத்த அரசியல் நிலைப்பாடுகள் இருந்தால், உலகளவில் இந்த பிரச்சனை மீது மார்க்சியத்தை எதிர்த்து டிட்டோ மற்றும் குருச்சேவுடன் ஜக்கியப்பட்டு நின்றனர்.

     

    இதைப் பற்றி ட்ராட்ஸ்கிகள் எப்படி பகுத்தாய்கின்றனர் எனப் பார்ப்போம். ~~இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின்னர் சோவியத் யூனியன் யூகோஸ்லாவியாவையும் தன் மேற்பார்வையுள் கொண்டுவர முயன்றது. ஆனால், டிட்டோ ஸ்டாலினிசத்தை தொடர்ந்து கண்டித்து வந்தார். ஸ்டாலினை சோசலிச உலகின் மன்னராக முடி சூடிவிட விரும்பவில்லை. சோவியத் யூனியனின் சோசலிச நாடுகள் மற்றும் கம்யூனிசக் கட்சிகளுடனான உறவு சோசலிசப் பண்புகள் அற்றது என்ற கருதியதோடு ~தென் ஸ்லாவிய மக்களின் குடியரசு| என்ற இலட்சியத்தையும் டிட்டோ கொண்டு இருந்தார்||2 இப்படித் தான் ட்ராட்ஸ்கியம் யூகோஸ்லாவிய முதலாளித்துவத்தை ஆதாரித்தது. இதை கம்யூனிச நாடு என்ற வரையறுத்துக் காட்டினர். குருச்சேவ் சொந்த நாட்டிலும் சர்வதேச கம்ய+னிய இயக்கத்திலும் முதலாளித்துவத்தை மீட்ட நிலையில், மீண்டும் இரு முதலாளித்துவ மீட்சியாளர்களும் ஒன்று இனைந்து கைகளை உயர்த்திய போது, அதை ட்ராட்ஸ்கியம் வானளவு தலையில் தூக்கிப் பாதுகாத்து கைகளை அவர்களுடன் இறுகப் பற்றிக் கொண்டனர்..

     

    இதை அவர்கள் தமது சொந்த வர்க்கக் கோட்பாட்டால் விளக்கும் போது ~~குருசேவ் வருகையின் பின்பு யூகோஸ்லாவியாவுடனான சோவியத் யூனியனின் உறவுகளில் நெருக்கம் எற்பட்டது. இராணுவ பாசிச சர்வாதிகாரி என்று ஸ்ராலினால் டிட்டோவுக்கு சூட்டப்பட்ட பட்டங்கள் மறைந்து யூகோஸ்லாவியா சோசலிச நாடு என்று எற்கப்பட்டது. ~பிராவ்தா| பத்திரிகை யூகோஸ்லாவியா பாசிசத்திலிருந்து விடுதலை பெற்ற 10 வருட நினைவு தினத்தை நினைவு கூர்ந்ததோடு ~யூகோஸ்லாவிய சோவியத் மக்கள் இருவரம் ஸ்லாவிய இனத்தைச் சோந்த இரத்த உறவு கொண்ட மக்கள்| என்று ~ஸ்லாவியப் பெருமை| பேசியது. சோசலிச இயக்கங்களை தத்துவரீதியில் சிதைத்த பயங்கரவாதப்படுத்திய பெருமை ஸ்டாலினிசத்துக்கே உரியது||2 இப்படி ட்ராட்ஸ்க்கிய அரசியல் ஸ்ராலின் அவாதூறுகளில் பூத்துக் குலுங்கிய போது, யூகோஸ்லாவிய மார்க்சியத்தை பாதுகாத்தா? அல்லது முதலாளித்துவத்தை மீட்டதா? என்பதை துல்லியமாக ஆராய்யும் போது, ட்ராட்ஸ்;கின் அரசியல் நிர்வாணமாவது தவிர்க்க முடியாது அல்லவா! ட்ராட்ஸ்கியம் தூற்றுவது மார்க்சியமா அல்லது ஸ்ராலின் மார்க்சியத்தை பின்பற்றினரா என்பதை யூகோஸ்லாவிய பற்றிய அடிப்படையான நிலைப்பாட்டில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளமுடியும்;. யூகோஸ்லாவியா முதலாளித்துவ மீட்பை அடிப்படையாக கொண்டே, சோவியத் யூனியனுடானும் சர்வதேச கம்ய+னிச இயக்கத்துடனும் முரண்பட்டது. ட்ராட்ஸ்கியம் இதை மறுத்த போதும் அன்றைய எதார்த்தம் எதைக் காட்டுகின்றது?.

     

    கிரேக்க நாட்டில் நடந்த கம்யூனிச புரட்சியின் போது 10.07.1949 டிட்டோ யூகோஸ்லாவிய -கிரேக்க எல்லையை மூடினார். அத்துடன் கிரேக்க கொரில்லாக்கள் யூகோஸ்லாவியாவில் நுழைவதைத் தடுத்தனர். கொரிலாக்களை பின்னால் இருந்து தாக்க கிரேக்க பாசிட்டுகள் உள்ளடங்கிய அமெரிக்கா பிரிட்டிஸ் ஏகாதிபத்திய படைகள், யூகோஸ்லாவியாவின் உடாக பின் பக்கம் அனுப்பி தாக்கி அழிக்க உதவினார். சர்வதேசியத்தை கைவிட்ட ஏகாதிபத்தியத்துடன் கூடிக்கூலாவி மார்க்சியத்தை துறந்து அப்பட்டமாக இதை நிலைநாட்டினர். இந்த நிலையில் பாட்டாளி வர்க்கம் அந்த நாட்டை சோசலிச நாடு என்று எப்படிக் கூறமுடியும். யூகோஸ்லாவிய ஸ்ராலின் அதிகாரத்தை எற்க மறுத்து, சோவியத்தை எதிர்த்தாக ட்ராட்ஸ்கியம் ஏன் பசப்புகின்றது. ஏகாதிபத்தியங்களுடன் கைகோர்த்த படி யூகோஸ்லாவிய சர்வதேச பாட்டாளி வாக்கத்தையே விலை கூவி விற்றது. ஆனால் ட்ராட்ஸ்கிகள் பினாற்றும் போது ~~1944 இல் போர்த்துக்கல், கீறிஸ் (கிரேக்கம்), ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் கம்யூனிஸ்டுக்களும் பாசிச எதிர்ப்பு சக்திகளும் செய்த தியாகங்களும் நடத்திய போராட்டத்தின் பெறுபேறுகளும் ஏகாதிபத்தியத்திற்கு இலகுவாக விட்டுக் கொடுக்கப்பட்டன.||2 என்ன அப்பட்டமான ஒரு சேறு அடிப்பை ஸ்ராலின் மீதும் சாவதேச கம்யூனிச இயக்கம் மீதும் செய்கின்றனர். ட்ராட்ஸ்கிகள் உண்மைக்கு மாறக பினாற்றி தூற்றும் போது ~~1947 இல் அமெரிக்கா, கீறீஸ் துருக்கி போன்ற நாடுகட்கு ஆயுதங்களை வழங்கியது. இந்த நாடுகளில் ஸ்டாலினால் கைவிடப்பட்ட முதலாளித்துவத்திடம் ஒப்படைக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் ஒழித்துக் கட்டப்பட்டனர்||2 பிரான்ஸ், கிரேக்கம் உள்ளிட்ட நாடுகளில் புரட்சியை எப்படி விட்டுக் கொடுக்கப்பட்டது என்பதை மட்டும் சொல்ல வக்கற்றவர்கள்;, இப்படி அவாதூறுகளை கட்டமைக்கின்றனர். பிரான்ஸ், கிரெக்கம் போன்ற நாட்டு கம்யூனிஸ்ட்டுகளுக்கு உதவ சோவியத்யூனியன் படை அனுப்பியிருக்க வேண்டுமா! அப்பட்டமான ஆக்கிரமிப்புகளை செய்யக் கோருபவர்கள் மார்க்சிஸ்ட்டுகளா? ஒவ்வொரு புரட்சியும் ஒரு எல்லைக்குள் நடக்கின்ற போது, அவை சொந்த பலம் சார்ந்து நடத்தப்படாத வரை அவை ஆக்கிரமிப்பாகவே இருக்கும். இக்காலத்தில் ட்ராட்ஸ்கிகள் யாரைக் கம்யூனிஸ்ட்டுகள் என்று கூறி காட்டிக் கொடுத்தாக ஸ்டாலின் மீது அவதுறைப் போலிகின்றனரோ, அவர்களை எதிர்த்தே ட்ராட்ஸ்கிகள் அன்று வக்கரித்து நின்றனர். அன்று யாரைத் தூற்றி அரசியல் செய்தார்களோ, அவர்களை இன்று கம்ய+னிஸ்ட்டுகள் என்று பச்சையாக கூறி அவர்களுக்காகவும் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். இது போன்றே யூகோஸ்லாவியா முதலாளித்துவ மீட்பை முடிமறைத்து, ஏகாதிபத்தியத்துடன் கூடிக் கூலாவியதை பூசிமொழுகுகின்றனர்.

     

    சோசலிச நாடான அல்பேனியாவுக்கு எதிராக யூகோஸ்லாவிய, 1948 முதல் 1958 வரை அதன் எல்லையில் 470 முறை ஆயுதம் எந்திய தாக்குதல் மூலம் ஆத்திர மூட்டியது. 1944, 1948, 1956, 1960 என நான்கு முறை பெரிய அளவிலான தேசதுரோக முயற்சியில் ஈடுபட்டது. 1960 இல் கிரேக்க பாசிட்டுகளுடனும்;, அமெரிக்காவின் 7 வது கப்பற் படையும் சேர்ந்து அல்பேனியாவை தாக்கி அழிக்க யூகோஸ்லாவியா முனைந்தது. இதற்கு முன்னமே அமெரிக்காவுடன் பல தொடர்ச்சியான ஒப்பந்தங்களை யூகோஸ்லாவிய கம்ய+னிச உலகுக்கு எதிராக செய்தது. 1951 இல் அமெரிக்காவுடன் யூக்கோலாவியா கையெழுத்தான இராணுவ உதவி தொடர்பான ஒப்பந்தத்தில் ~~சுதந்திர உலகின் பாதுகாப்பு வலிமையை வளர்க்கவும் நிலைநிறுத்தவும் முழு அளவிவில் பங்கு செலுத்த வேண்டும்||6 அத்துடன் ஜக்கிய நாட்டுப் படைக்கு துருப்புகளை வழங்கவும் இது வழி செய்தது. அமெரிக்க துருப்புகள் யூகோஸ்லாவிய இராணுவ பயிற்சியை மேற்பார்வையிடவும் ஒப்பந்தம் கோரியது. 1951 இல் பரஸ்பரம் பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் யூகோஸ்லாவியா செய்தது. இதில் அமெரிக்கா இராணுவப் பொருட்கள் யூக்கோஸ்லாவியாவுக்கு வந்து சேர்வதையும், அங்கே விநியோகமாவதையும் கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும் ~தங்கு தடையற்ற சுதந்திரம்|6 வழங்கப்பட்டது. அத்துடன் ~~போக்குவரத்து மற்றும் தகவல் அமைப்புகளைப் பார்வையிட முழு சுதந்திரம்||6 அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டது. 1952 இல் யூகோஸ்லாவியாவும் அமெரிக்கவும் பொருளாதார ஒப்பந்தம் ஒன்றைச் செய்தனர். அதில் அமெரிக்கா உதவியை பயன்படுத்தி ~~அடிப்படையான தனிமனித உரிமைகளையும், சுதந்திரங்களையும், ஜனநாயக நிறுவனங்களையும் வளர்க்க வேண்டும்||6 என்று நிபந்தனை விதித்தது. இது போன்று 1954க்கு பின் பல உடன்படிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களுடன் செய்தது. 1957 – 1958 க்கும் இடையில் அமெரிகாவுடன் 50 மேற்பட்ட ஒப்பந்தங்களைச் யூகோஸ்லாவியா செய்தது. விரிந்த அளவில் சோவியத் யூனியனுக்கு எதிராகவும் கம்ய+னிச சர்வதேசியத்துக்கு எதிராகவும், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்துடன் சதி திட்டங்கள் பலவற்றில் கையெழுத்திட்டன. இதில் அமெரிக்கா அல்லாத மற்றைய மேற்கு ஏகாதிபத்தியதுடன், கம்யூனிஸ்சத்துக்கு எதிராக ஒரு வலைப் பின்னலை அமைத்து கம்யூனிசத்தை வேராறுக்க சபதம் எற்றது.

     

    சொந்த நாட்டில் முதலாளித்துவ மீட்சியையும், சர்வதேச அளவில் கம்யூனிசத்தை எதிர்த்து யூகோஸ்லாவியா நடத்திய முதலாளித்து தாக்குதலுக்கு கையூட்டை எகாதிபத்தியம் தாரளமாக வழங்கியது. இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின் 1963 வரையிலான காலத்தில் ஏகாதிபத்தியங்கள் யூகோஸ்லாவியாவுக்கு கொடுத்த மொத்த ~~உதவி|| 546 கோடி டொலராகும். இதில் அமெரிக்கா கொடுத்தது மட்டும் 360 கோடி டொலராகும்;. இதில் பெரும் பகுதி 1950 பின் கொடுக்கப்பட்டது. உத்தியோக பூர்வமான புள்ளிவிபரப்படி 1961 இல் யூகோஸ்லாவியா பன்னாட்டு நிதி அமைப்புகளில் இருந்து பெற்ற தொகை 34.6 கோடி டொலராகும். இது யூகோஸ்லாவியாவின் மொத்த வரவு செலவில் 47.4 சதவீதமாகும். மற்றயை எகாதிபத்தியத்திடம் கையேந்தி பெற்றது உட்பட மொத்த 49.3 கோடி டொலராகும். இது மொத்த வரவு செலவில் 67.6 சதவீதமாகும்.

    ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி அரசாக, தேசத்தையும் மக்களையும் எகாதிபத்தியத்திடம் விற்ற யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்சியை ட்ராட்ஸ்கிகள் எதிர்க்கவில்லை. மாறாக அதை ஆதாரித்ததுடன், அதையே கம்ய+னிஸ்சம் என்று விளக்கம் கொடுத்தனர். ட்ராட்ஸ்கிகள் அதை பெருமையாக அறிவித்தனர். ஆனால் ஸ்ராலின் இதை எதிர்த்து நின்றார். கம்ய+னிஸ்சத்தின் சர்வதேசியத்தின் உன்னதமான வர்க்கப் போராட்டத்தை நடத்தினர். யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்சியை அம்பலப்படுத்தி உறுதியான ஒரு கம்யூனிஸ்டாக போராடினர். முதலாளித்துவ மீட்சியை யூகோஸ்லாவியாவின் தலைவர் டிட்டோ ஒரே நாளில் அறிவிக்கவில்லை. மாறாக இதற்காக கம்யூனிஸ்ட்டுகளை தொடாச்சியாக சொந்த நாட்டில் வேட்டையாடினார்.

     

    யூகோஸ்லாவியாவில் டிட்டோ தலைமையிலான கட்சி மார்க்சியத்தை கைவிட்டு செல்லும் போக்கு எதிராக பலத்த எதிர்ப்பு கட்சிக்குள் எழுந்தது. கம்ய+னிசத்தை கைவிடவும் முதலாளித்துவத்தை மீட்டு எடுக்கவும் 1948-1952 வரையிலான காலத்தில் பாரிய களையெடுப்பை கட்சியில் நடத்தினர். மார்க்சிய லெனிசத்தை அடிப்படையான கோட்பாடாக கொண்ட வர்க்க சக்திகளை ஒடுக்கியதுடன், இரண்டு லட்சம் கம்யூனிஸ்ட்டுகளை கட்சியில் இருந்து அகற்றினர். இது மொத்த கட்சி உறுப்பினர்களில் அரைவாசியாகும்;. மிகத் தீவிரமாக முதலாளித்துவ மீட்சியை எதிர்த்த 30000 கம்ய+னிஸ்ட்டுகளை சிறையில் அடைத்ததுடன், பலத்த சித்திரவதையும் செய்தது. அத்துடன் பலரை கொன்றனர். இந்த கம்யூனிச அழித்தொழிப்பை நடத்தி முடிந்த கையுடன், 1952 இல் ~~கட்சி என்ற பெயர் இப்போது பொருத்தமில்லை||6 என்று பிரகடனம் செய்தனர். யூகோஸ்லாவிய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரை யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் கழகம் என பெயர் மாற்றியதுடன், தன்னை ஒரு முதலாளித்துவ சர்வாதிகார பாசிச அரசாக மாற்றியது. கம்யூனிஸ்சத்தை எதிர்த்து போராடிய எதிர் புரட்சி முதலாளித்துவ கும்பலுக்கு மன்னிப்பு வழங்கியது. சிறையில் கம்யூனிஸ்ட்டுகள் அடைக்கப்பட முதலாளித்துவவாதிகள்; சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன் ஆட்சிகளில் பதவி வழங்கினர். 1951 இல் டிட்டோ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் 11000 அரசியல் கைதிக்கு மன்னிப்பு வழங்கியதை உறுதி செய்தார். கம்யூனிஸ்ட்டுகளை சிறையில் தள்ளியபடி எதிர் புரட்சி கும்பல்களுக்கும், பாசிட்டுகளுக்கும் மன்னிப்பு வழங்கினர். 1962 இல் நாட்டுக்கு எதிராக துரோகம் செய்து நாட்டை விட்டே ஒடிய பாசிட்டுகள் உள்ளடங்கிய 1.50 லட்சம் பேருக்கு மன்னிப்பு அளித்து, முதலாளித்துவ மீட்சியை பலப்படுத்தினர். ஆனால் ட்ராட்ஸ்கிகள் இதை கம்யூனிஸ்சத்தின் உன்னதமான பண்பாகவும், ஸ்ராலினை எதிர்த்த போராட்டத்தில் ஒரு தீரமிக்க பாத்திரமாகவும் காட்டத் தயங்கவில்லை.

     

    ஆனால் யூகோஸ்லாவியாவும் அதன் தலைவர் டிட்டோவும் சர்வதேசியத்துக்கு எதிராக அமெரிக்கா ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்து அன்றைய முக்கிய சர்வதேச நிகழ்வுகளில் கை கோர்த்து நின்றதே எதார்த்தமாகும். 1950 இல் கொரிய போரின் போது கம்யூனிஸ்சத்தை எதிர்த்த டிட்டோ கும்பல் அமெரிக்கா ஆக்கிரமிப்புக்கு ஆதாரவாக செயல்பட்டது. கொரியா மக்களின் வீரமிக்க போராட்டத்தை கூட்டாகத் ஒருமித்த குரலில் தூற்றுpனர். டிசம்பா 1ம் திகதி ஐ.நா பாதுகாப்புச் சபையில் பேசிய யூகோஸ்லாவியப் பிரதிநிதி அமெரிக்கா ஆக்கிரமிப்புக்கு எதிராக ~~கொரியப் போரில் முனைப்புடன் குறுக்கிட்டமைக்காக||6 சீனாவுக்கு எதிராக பேசியதுடன், சீனாவுக்கு எதிரான பொருளாதார தடைக்கு ஆதாரவாக வாக்களித்தனர். இதை சர்வதேச கம்யூனிஸ்ச சமூகமும், ஸ்டாலினும் எப்படி மௌனமாக அங்கிகாரிக்க முடியும். அமெரிக்காவுடன் அப்பட்டமாகவே சோராம் போய், கம்ய+னிஸ்ச உலகக்கு எதிராக செயல்பட்ட யூகோஸ்லாவியாவை ட்ராட்ஸ்கிகள் ஆதாரிக்காலாமே ஒழிய, கம்யூனிஸ்ட்டுகாளல் ஒருக்காலும் முடியாது.

     

    1954 இல் வியட்னாம் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக ஜெனிவாவில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. இந்த போராட்டத்தை அமெரிக்கா எகாதிபத்திய நலனுக்கு இசைவாக இணைந்து தூற்ற் டிட்டோ தவறவில்லை. அவன் இதை சோவியத் சீனாவின் ~~கெடுபிடி போர்க் கொள்கையின் ஒரு பகடையாக||6 வியட்னாமிய மக்களை பயன்படுத்துகின்றனர் என்ற அவதூறு புரிந்தான். ட்ராட்ஸ்கிகள் கூறும் சோசலிச யூகோஸ்லாவியா இப்படித் தான் தூற்றியது. வியட்நாம் விடுதவைப் போராட்டத்தை ~~நல்லெண்ண சமிக்ஞை அல்ல||6 என்று கூறி பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆக்கிரமிப்புக்கு இசைவாக மூலதனத்தின் சூறையாடக்கு பச்சைக் கொடி காட்டினான்.

     

    இது போன்று 1956 இல் கங்கேரியில் எதிர்புரட்சி கலகத்தில் நேரடியாகவே யூகோஸ்லாவியா தலையிட்டது. முதலாளித்தவ மீட்சியை நடத்த முயன்ற துரோகி நேக்கியின் எதிர்புரட்சி கலகத்தை ஆதாரித்து, ஒரு கடித்ததை டிட்டோ வெளியிட்டார். எதிர்புரட்சி தோல்வி பெற்ற போது, துரோகி நேக்கிக்கு கங்கேரிய துரோகத்தில் அடைகலம் கொடுத்தான். நவம்பர் 11ம் திகதி டிட்டோ ஆற்றிய உரையில் முதலாளித்துவ மீட்சிக்கான முயற்சியை ட்ராட்ஸ்கிகள் போல் ~~முற்போக்காளர்களின்||6 போராட்டம் என்றதுடன், வெல்லப் போவது ~~யூகோஸ்லாவியாவின்||6 பாதையா அல்லது ~~ஸ்டாலினியத்தின் பாதையா||6 என்று பிரகடனம் செய்து எதிர் புரட்சியை ஆதாரித்து நின்றான். அமெரிக்காவுடன் கூடிக் கூலாவிய படி எதிர் புரட்சிகளுக்கு உற்ற நன்பனாக யூகோஸ்லாவியா செயல்பட்டது.

     

    1958 இல் லெபனானை ஆக்கிரமிக்க அமெரிக்கப் படையும், ஜோர்டனை ஆக்கிரமிக்க பிரிட்டனும் படைகள் அனுப்பியது. இதை அடுத்த இதற்கு எதிராக உலகளவிய போராட்டங்கள் நடந்தன. படைகளை வாபஸ் பெறப்பட வேண்டும் என்று கோராப்பட்டு உலகாளவிய கிளர்ச்சியை அடுத்து, ஐ.நாவில் அவசரக் கூட்டம் நடந்தது. யூகோஸ்லாவியாவின் ஐ.நா பிரதிநிதி அங்கு பேசிய போது ~~அமெரிக்காவும் மகா பிரிட்டனும் மேற்கொண்ட நடவடிக்கைகளை கண்டிக்கின்றோமா அல்லது அங்கீகரிக்க வற்புறத்துகிறோமா என்பதல்ல பிரச்சனை||6 என்று பிரகடனம் செய்து ஆக்கிரமிப்புக்கு அப்பட்டமாகவே செங்கம்பளம் விரித்தனர். அத்துடன் இதில் ஐ.நா தலையிடக் கூடாது என்றனர்.

     

    1958 இல் தைவானின் துணையுடன் அமெரிக்கா படை சீனாவுக்கு எதிராக செய்த சதிகளை அம்பலப்படுத்தி சீனா போராடிய போது, யூகோஸ்லாவியா ~~உலகத்துக்கே ஆபத்து||6 என்றும் ~~சமாதானத்துக்குக் கேடு||6 என்று கூறிபடி அமெரிக்கா எகாதிபத்தியத்தில் வால்களில் கெட்டியாக தொங்கியது. 1959 இல் சீனா இந்தியா எல்லை மோதலின் போது டிட்டோ கும்பல் அமெரிக்கா கைக்கூலியாக செயல்பட்டு எல்லை மோதலை உருவாக்கிய இந்தியாவுக்கு ஆதாரவாக நின்ற யூகோஸ்லாவியா, சீனாவைத் தூற்றியது. கியூபா பிரச்சனையின் போது கியுபாவுக்கு எதிராக பல அவதூறுகளை தொடர்ச்சியாக செய்தது. ~~கியுபா புரட்சி அமெரிக்கா நியமங்களின் உரிமைகளை காலில் போட்டு மிதித்த போதே தொல்லைகள் ஆரம்பமாயின||6 என்ற புரட்சியைத் தூற்றினான். கியூபப் புரட்சி ~~புரட்சிப் பாதைக்கு முன்மாதிரியாய் அமைவதைக் காட்டிலும், விதி விலக்காகவே அமைகின்றது||6 என்று யூகோஸ்லாவியா அவதூறு பொலிந்தது. ~~புரட்சியில் மட்டும் நம்பிக்கை வைப்பதாக||6 கம்யூனிஸ்ட்டுகளை குற்றம்சாட்டி ஆயுதப் புரட்சியைத் தூற்றத் தயங்கவில்லை.

     

    லாவோஸ்சி மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக 1961 இல் அமெரிக்கா நேரடியாக தனது இராணுவத் தாக்குதலைத் தீவிரப் படுத்திய போது, யூகோஸ்லாவியா தனது அறிக்கையில் அமெரிக்கா ~~உண்மையிலேயே லாவொஸின் அமைதி குறித்தும், அந் நாட்டை நடுநிலையாக்குவது குறித்தம் கவலை கொண்டுள்ளது||6 என்று ஆக்கிரமிப்பை நியாப்படுத்தினர். லாவோஸ்சில் பாரிய படுகொலைகளை அமெரிக்கா நடத்தி அம்பலமான போது ~~பழி முழுவதையும் அமெரிக்கா மீது சுமத்தியமைக்காக||6 சர்வதேச சமூகத்தையும், போராடிய மக்களை இழிவுபடுத்தியது. அமெரிக்கா படுகொலைக்கு லாவோஸ்சிய மக்களின் போராட்டம் தான் காரணம் என்று பாசிச விளக்கமளித்தது.

     

    1961 இல் அமெரிக்கா ~~முன்னெற்றத்தின் நேசக் கூட்டுத்||6 திட்டம் என்ற பெயரில் லத்தீன் அமெரிக்கா நாடுகளை இராணுவ பாசிச பலத்தின் மூலம் பலாக்கரமாக இணைத்த போது, லத்தீன் அமெரிக்கா மக்கள் அதற்கு எதிராக கிளர்ந்து எழுந்தனர். ஆனால் அமெரிக்கா கைக் கூலியாக சீராழிந்த முதலாளித்துவ மீட்சி சொந்த நாட்டில் நடைமுறைப்படுத்திய டிட்டோ அமெரிக்கா ~~லத்தின் அமெரிக்கா நடுகளின் தேவைகளைப் பெரிய அளவில் நிறைவு செய்ததாக||6 கூறி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தினான். அமெரிக்கா பாசிச வழிகளின் உலகத்தைச் சூறையாட பலாக்காரமாக இணைத்த கூட்டை நியாப்படுத்தி, சர்வதேச சமூகத்தின் போராட்டங்களை கொச்சைப்படுத்தினான்;.

     

    முதலாளித்துவத்தை மீட்ட பின்பாக ஸ்ராலின் காலத்தில் தொடங்கி குருச்சேவ் காலம் வரையிலான பல்வேறு சர்வதேச நிகழ்வுகளில், யூகோஸ்லாவியா தனது நிலைபாட்டை மாற்றிவிடவில்லை. ஆனால ஸ்ராலினை மறுத்த குருச்சேவ் காலத்தில் சோவியத்ய+னியன் தனது நிலைப்பாட்டை யூகோஸ்லாவியா நிலைக்கு கீழ் இறக்கியது. குருச்சேவ் யூகோஸ்லாவியா தலைவர் டிட்டோ போல் ஸ்ராலினைத் தூற்றி, முதலாளித்துவத்தை மீட்ட போதே, இருவரிடையே ஒருமித்த கருத்துகள் உள் நாட்டில் இருந்து சர்வதேச நிலைவரை பொருந்திப் போனது. இதையே ட்ராட்ஸ்கிகள் ~~குருசேவ் வருகையின் பின்பு யூகோஸ்லாவியாவுடனான சோவியத் யூனியனின் உறவுகளில் நெருக்கம் எற்பட்டது. இராணுவ பாசிச சர்வாதிகாரி என்று ஸ்ராலினால் டிட்டோவுக்கு சூட்டப்பட்ட பட்டங்கள் மறைந்து, யூகோஸ்லாவியா சோசலிச நாடு என்ற எற்;கப்ட்டது. ~பிராவ்தா| பத்திரிகை யூகோஸ்லாவியா பாசிசத்திலிருந்து விடுதலை பெற்ற 10 வருட நினைவு தினத்தை நினைவு கூர்ந்ததோடு ~யூகோஸ்லாவிய சோவியத் மக்கள் இருவரும் ஸ்லாவிய இனத்தைச் சோந்த இரத்த உறவு கொண்ட மக்கள்| என்று ~ஸ்லாவியப் பெருமை| பேசியது. சோசலிச இயக்கங்களை தத்துவரீதியில் சிதைத்த பயங்கரவாதப்படுத்திய பெருமை ஸ்டாலினிசத்துக்கே யுரியது||2 என்று கூறி குருச்சேவின் முதலாளித்துவ மீட்சியை பராட்டினர். கம்யூனிஸ்சத்துக்கு எதிரான டிட்டோ, குருச்சேவ் நிலையுடன் ட்ராட்ஸ்கிகள் கைகளை இறுகப் பற்றிக் கொண்டனர். ஸ்ராலினை தூற்றவதில் மூவரும் முரண்பாடு இன்றி ஒன்றுபட்டு நின்றனர். ஸ்ராலின் இது வரை கையாண்ட சர்வதேச நிலையை மறுப்பதிலும், அதைக் கொச்சைப்படுத்துவதிலும் முரண்பாட்டை வெளிப்படுத்தவில்லை. ஒட்டு மொத்தமாக இந்த போக்கில் ஏகாதிபத்திய நிலையுடன் முரண்பாடற்ற நிலையை இவர்கள் ஐக்கியத்துடன் பின்பற்றினர். இதை குருச்சேவ் மிக அழகாக கூறத் தவறவில்லை. சர்வதேச பிரச்சனையில் யூகோஸ்லாவியாவுக்கும் எமக்கும் இடையில் ~~முழுக் கருத்தொற்றுமையும்||6, ~~இணக்கமும்||6 நிலவுவதாக அறிவித்தான். ஆனால் 1960 இல் அமெரிக்கா விமானம் சோவியத்யூனியனில் ஊடுருவி வேவு பாhத்த விவகரத்தில் அமெரிக்காவையே யூகோஸ்லாவியா ஆதாரித்தது. ஜப்பானில் அமெரிக்கா படைகளுக்கு எதிராக மக்கள் போராடிய போது, இதை ஜனநாயகத்துக்கு எதிரானது என்று, யூகோஸ்லாவியா 1960 இல் பிரகடனம் செய்தது. இந்தோசீனா கம்யூனிஸ்ட்டுகளை ஒழித்துக் கட்ட அனைத்து வகையிலும் யூகோஸ்லாவியா உதவியது. 1960 இல் ஐ.நா கொடியுடன் சட்டவிரோதமாக கங்கோ நாட்டை அமெரிக்கா ஆக்கிரமித்த போது, ஐ.நாவில் அமெரிக்காவுக்கு ஆதாரவாக வாக்களித்ததுடன், கங்கோ மக்கள் மேல் குண்டு போடா தனது விமானப் படையை அனுப்பியது.

     

    இப்படி யூகோஸ்லாவியா உலகளவில் எதிர்புரட்சிகர பாத்திரத்தை அமெரிக்கா தலைமையிலான எகாதிபத்தியத்துக்கு துணையாக நின்று அடிபணிந்து செயல்பட்டது. மக்களுக்கு எதிராக ஏகாதிபத்திய மூலதனம் உலகை அடக்கியாண்ட போது, டிட்டோவின் ஒத்துலைப்புக்கு குருசேவ்வும் ஆதாரவளித்து நின்றான். இருவரும் முதலாளித்துவ மீட்சியை விரைவுபடுத்தவும், பரஸ்பரம் கோட்பாட்டு ஆதாரவை பரிமாரிக் கொண்டனர். இதை விரிவாக கட்டுரையின் தொடர்ச்சியில்; பாhப்போம்;. இருவரும் ஸ்ராலின் கால கம்ய+னிஸ்ச இயக்கத்தின் வர்க்க குணம்சத்தையும், வர்க்கப் போராட்டத்தையும் அதன் வெற்றிகளையும் சிதைப்பதில் ஒன்றுபட்டனர். ஸ்ராலினைத் தூற்றிப் பிழைப்பதில் யார் தலை சிறந்தவர்கள் என்பதில் போட்டியிட்டனர். இதனுடன் ட்ராட்ஸ்கியவாதிகளும் களம் இறங்கினர். இந்த மூன்று கும்பலுடன் ஏகாதிபத்தியம் முரணற்ற நிலையையில் களம் இறங்கி, அவதூற்றை சாரமாக கொண்டு வர்க்க அரசியலை கழுவேற்றினர்.

  2. யூகோஸ்லாவியா பொருளாதாரத்தில் முதலாளித்துவ மீட்சி

     

    யூகோஸ்லாவியாவில் உள்நாட்ட பொருளாதார உற்பத்தியில், முதலாளித்துவ மீட்சி பொருளாதார ரீதியாக எப்படி நிறைவேற்றப்பட்டது எனப் பார்ப்போம். 1951 இல் யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரை, வெறும் கம்யூனிச கழகமாக மாறி அனைத்து மக்கள் கட்சியாக சிதைக்கப்பட்டது. அதற்கு முன்பே கட்சியின் அரைவாசி உறுப்பினர்களை கட்சியில் இருந்து வெளியேற்றியதுடன், சிறையிலும் தள்ளியது. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க கட்சி என்பது மறுக்கப்பட்டது. ‘’பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரம் என்ற கருவி, அதாவது சோசலிச அரசமைப்பு மேலும் மேலும் அவசியமற்றதாகி விட்டது” என்று அறிவித்ததுடன் புதிய அரசியல் சட்டம் அழுல்படுத்தினர். மாறாக அனைத்து மக்களின் கட்சி என்ற பெயரில், ஜனநாயகம் என்ற சுரண்டும் உள்ளடகத்தை கழகமாக உட்புகுத்தியதன் மூலம், முதலாளித்துவ கட்சிக்கான வர்க்க மூகமுடியை ஒளித்து வைத்தனர்.

     

    1950 இல் ‘அரசுக்கு சொந்தமான எல்லாத் தொழிச்சாலைகளையும், சுரங்கங்களையும் தகவல்துறை, போக்குவரத்து, காடுகள், வேளண்மை பொதுஜன பயன் சார்ந்த அனைத்தையும் ‘தொழிலாளர் சுயநிர்வாகத்திடம்’ கொடுத்தது. (இந்த அரசியல் உள்ளடக்கம் ட்ராட்ஸ்கி 1920 களில் லெனுக்கு எதிராக கோஸ்டி அமைத்து பிளவு நடவடிக்கையை ஈடுபட்ட போது வைக்கபட்டதாகும்.) இதன் மூலம் தனியார் உற்பத்தி, தரகு முதலாளித்துவமாக மாறியது. ‘தொழிலாளர் கூட்டுக்கள்’ என்ற பெயரில் சுயட்சையாக இயங்கவும், வாங்கவும் விற்கவும், விலையை சொந்தமாக தீர்மானிக்கவும், கூலியை தீர்மானிக்கவும் லாபத்தை பகிரவும் அனுமதிக்கும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்தியது. இதை ‘உயர் வடிவிலான சோசலிச உடமை’ என்றனர்.” பாட்டாளி வர்க்க புரட்;சியில் உற்பத்தியை அரசுடமையாக்குவதை இது மறுக்கின்றது. அதாவது உற்பத்தியை சமூகத்தின் சொத்தாக பேனுவதை அழித்து ஒழித்து, முதலாளித்துவ மீட்சிக்கான பாதையை செப்பனிட்டனர். டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலில் மார்க்ஸ் எங்கெல்ஸ் ‘பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி உற்பத்திச் சாதனங்களை அரசுடமையாக மாற்றுகிறது” என்பதை டிட்டோ அப்பட்டமாக மறுத்தான். இதன் மூலம் இதை வலியுத்திய சர்வதேச கம்ய+னிச நிலைப்ட்டடை ஒட்டிய ஸ்ராலின் நிலைப்பாட்டை மறுத்தான். இதையே ட்ராட்ஸ்கியம் ‘’ஸ்டாலினை சோசலிச உலகின் மன்னராக முடி சூடிவிட விரும்பவில்லை” என்று கூறி நியாப்படுத்துகின்றனர். சோவியத்யூனியனில் ஆலைகளை உற்பத்தியாளர்களிடம் ஒப்படைத்து ‘’உற்பத்தியை ஒழுங்கமைக்க”6 கோரிய போது, லெனின் கடுமையாக விமர்சனம் செய்தார். அராஜாகவாத்தின் அடிப்படைக் கோட்பாடான இது முதலாளித்துவ மீட்சிக்கு இது ஒரு வழிப்பாதையாகும்;. லெனின் இது தொடர்பாக விமர்சிக்கும் போது ‘’நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தனித்தனி தொழிற்சாலைகள் அல்லது தனித்தனித் தொழில் முறைகளைச் சொந்த தொழிலாளர்கள் தமது உற்பத்தியைத் தமக்கே உடைமையாக்கிக் கொள்வதையும் அரசதிகாரத்தின் ஆணைகளைப் பலவீனப்படுத்தவும், அல்லது தடைப்படுத்தும் உரிமையையும் சட்டபூர்வமாக்குவதும் சோவியத் அதிகாரத்தின் ஆதாரக் கோட்பாடுகளைப் படுமோசமாகத் திரிப்பதும், சோசலிசத்தை அடியொடு கைகழுவி விடுவதுமாகும்”என்றார். ஸ்ராலினை மறுத்தன் உள்ளடக்கம் இங்கு தான், இப்படித்தான் முதலாளித்துவ மீட்சியாக இருந்தது. ஸ்ராலினை மறுத்து அவதூற்றைப் பொலிந்தது என்பது, முதலாளித்துவ மீட்சியை நடைமுறை ரீதியாக இலகுபடுத்தவே. ஸ்ராலின் உயர்த்தி பிடித்த லெனினிய கோட்பாட்டை மறுக்க, ஸ்ராலினை அவதூறு செய்ய வேண்டியிருந்தது.

     

    ‘’இரண்டாம் உலக யுத்தத்ததைத் தொடர்ந்து யூகோஸ்லாவியாவில் நிலச்சீர்திருத்தம் செய்யப்பட்டு, உழைப்பு கூட்டுறவு உருவாக்கப்பட்டது. ஆனால் பணக்கார விவசாய பொருளாதாரத்தின் மேல் கைவைக்கவில்லை” ஸ்ராலினினும் சர்வதேச கம்யூனிச இயக்கமும் யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட்டுகளும் மார்க்சிய நிலையை அமுல்படுத்தக் கோரினர். பணக்கார விவசாயிகளின் நிலத்தை கூட்டுமையாக்க கோரினர். ஆனால் டிட்டோ கும்பல் இதை மறுத்து முதலாளித்துவ மீட்சியை முன்னெடுத்த போதே, ஸ்டாலினின் பாட்டாளி வர்க்க நிலையை மறுத்து அவதூறு புரிய வேண்டியிருந்தது. இப்படி அவதூறு செய்தபடி 1950 இல் யூகோஸ்லாவியா அந்நிய வர்த்தகம் மீதான அரசின் எகபோகத்தைக் கைவிட்டதுடன், அதை தனியாருக்கு தரை வார்த்தனர். 1953 இல் டிட்டோ வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ‘’ குடிமக்கள் குழுக்களுக்கு”தொழில் நிறுவனங்களை நிறுவவும்’ ‘உழைப்பாளரைக் கூலிக்கமர்த்தவும்’ உரிமையுண்டு. …அரசுப் பொருளாதார நிறுவனங்களிடமிருந்து அசையாச் சொத்துகளை வாங்கிட தனியாருக்கு உரிமையுண்டு.” என்று பிரகடனம் செய்தான். ‘’1951 இல் விவசாயக் கூட்டுமையை கைவிடுவதாக அறிவித்ததுடன், விவசாயிகளின் கூட்டுமையை கைவிடுவதாக பகிரங்கமாக அறிவித்து, அதை கலைக்க தொடங்கியது. 1950 இல் இருந்த 6900 அதிகமாக இருந்த கூட்டுறவு அமைப்புகள், 1953 இல் 1200 யாக சற்று அதிமாக குறைந்து. இது 1960 இல் 147 யாகிப் போனது. முற்றாகவே அவை தனியார் மயமாகியது.”கூட்டுடமை கைவிடப்பட்டு முதலாளித்துவ மீட்சி அரங்;கேறிய போது ஸ்ராலின் மீதான தூற்றல் உயர்ந்த மட்டத்துக்கு தாவியது. இந்த மீட்சியை சோசலிசத்தின் முன்னேற்றம் என்றனர். ட்ராட்ஸ்கிகள் ஸ்ராலினிடம் இருந்து பாட்டாளி வர்க்க அதிகாரத்தை களைந்த, ஜனநாயக பூர்வமான சோசலிசத்தை நோக்கிய முன்னேற்றம் என்று வருனித்தனர். இவருடன் குருச்சேவ் இணைந்ததுடன், முதலாளித்துவ மீட்சியை சோவியத் யூனியனிலும் தொடங்கினர். டிட்டோ, குருச்சேவ், ட்ராட்ஸ்கிய கும்பலலும் இணைந்து நடத்திய கச்சேரியில், ஸ்ராலின் பாட்டாளி வர்க்க அதிகாரத்தை ஒழித்துக் கட்டி நிறுவிய முதலாளித்துவ மீட்சியை மறுத்து, அதை மூவரும் சோசலிசமாக காட்டினர். முதலாளித்துவ மீட்சி என்பதையே கோட்பாட்டு ரீதியாக மறுத்தனர். இவர்கள் மறுக்கும் முதலாளித்துவ மீட்சியை சோசலிசமாக வருணித்து 1955 இல் டிட்டோ கூறும் போது ‘’யூகோஸ்லாவியாவில் சிறு பண்ணைகள் எதெனுமொரு விதத்தில் ஒன்றிணையும் நாள் வரும் என்ற எண்ணத்தை நாம் கைவிட்டு விடவில்லை. அமெரிக்காவில் இதை எற்கனவே செய்துவிட்டனர். நாம் இந்த பிரச்சனைக்குத் தீர்வு கண்டாக வேண்டும்” அமெரிக்கா வகை மூலதனக் குவிப்பையே கூட்டுடமையாக்கல் என பிரகடனம் செய்தான். எழை விவசாயிகளின் நிலத்தை சூறையாடிக் குவித்தையே, சோசலிசம் கூட்டுடமையாக்கல் என டிட்டோ அறிவித்தான்;. இக் காலத்தில் தான் குருச்சேவ் டிட்டோவை ஆதாரித்து சொந்த நாட்டில் முதலாளித்துவ மீட்சியை தொடங்கி வைத்தான். ட்ராட்ஸ்கிகள் இதற்கு ஆலாத்;தி எடுத்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர்.

     

    யூகோஸ்லாவியாவில் முதலாளித்துவ மீட்சியை அமெரிக்கா வகை கூட்டுடமையாக்கல் என்ற வகையை டிட்டோ அப்பட்டமாக அழுலுக்கு கொண்டு வந்தான். இதை டிட்டோ கொள்கை ரீதியாக விளக்கும் போது ‘’ ‘கூட்டடமையாக்கமும் உடமைப்பறிப்பும் ஒன்றே’ என்ற பிரகடனம் செய்து ‘இது கிராமப்புற பண்ணையடிமை முறையை பாதுகாத்து வறுமையை நீடிக்க வைக்கின்றது’ என்று பிரகடனம் செய்ததுடன் ‘பொருளாதார சக்திக்கிடையில் தடையில்லாத போட்டி’ வறுமையை ஒழிக்கும் என்று பிரகடனம் செய்தான்.” முதலாளித்துவம் வறுமையை ஒளிக்கும் என்றான். இதை குருச்சேவ், ட்ராட்ஸ்கிய கும்பல் ஆதாரித்து நின்றனர். ஸ்ராலினிய பாட்டாளி வர்க்க சர்வாதிகார அதிகாரத்தை ஒழிப்பதன் மூலம் இதை நிறுவ முடியும் என்று ஒரே விதமாக கச்சேரி வைத்தனர். இதன் அடிப்படையில் 1953 இல் உருவாக்கிய அரசு ஆணையில் ‘’நிலம் வாங்கவும், நிலம் விற்கவும், கூலிக்கு ஆட்களை அமர்த்தவும், உற்பத்தியின் கொள்முதலை தனியாரிடம் வழங்கவும், குத்தகைக்கு நிலத்தை விடவும்” அனுமதிக்கும் வகையில் சட்டத்தையே திருத்தினர். நிலம் அமெரிக்கா வகை நிலக் குவிப்புக்கு இசைவாக சட்டம் தன்னை தகவமைத்துக் கொண்டது. தடையில்லாத வகையில் சொத்துக் குவிப்புக்கு ஸ்ராலின் களப்பலியானர். இதன் மூலம் யூகோஸ்லாவியாவில் பணக்காரனுக்கும் எழைக்கும் உள்ள இடைவெளி அதிகாரித்துச் சென்றது. இதை விவசாயத் துறைக்கு பொறுப்பாக இருந்த அதிகாரியே 1959 இல் ஒப்புக் கொண்டர். அவர் தனது அறிக்கையில் ‘’மொத்த தனியார் விவாசயிகளில் 5 ஹெக்டேருக்கு குறைந்தவர்கள் 70 சதவீதமாக இருந்த போது, அவர்களிடம் மொத்த விவசாய நிலத்தில் 43 சதவீதமே சொந்தமாக இருந்தது. 10 ஹெக்டேருக்கு அதிகமாக வைத்திருந்த பணக்கார விவசாயிகள் 13 சதவீதமாகும். ஆனால் இவர்கள் 33 சதவீத நிலத்தை சொந்தமாக வைத்திருந்தனர். 10 சதவீதமான விவசாய குடும்பங்கள் நிலத்தை ஆண்டு தோறும் விற்கின்றனர் அல்லது வாங்குகின்றனர்.”அமெரிக்கா வகை சோசலிச கூட்டுடமையாக்கல் இப்படி விரைவுபட்டது. 1958 யூகோஸ்லாவிய போலிக் கம்ய+னிச இதழ் ஒன்றில் வெளியான தகவல் ஒன்றில் ‘’எட்டு ஹெக்டேருக்கு அதிகமாக நிலம் வைத்திருந்த குடும்பங்கள், 50 சதவீதமான விவசாய குடும்பங்களை 1956 இல் கூலிக்கு அமர்த்தியதை”6 வெளியிட்டு, அமெரிக்கா வகை கூட்டுடமையாக்கல் விரைவுபடுவதை ஏற்றுக் கொண்டது. 1962 இல் ‘’இரண்டு ஹெக்டேருக்கு குறைவான விவசாயக் குடும்பங்களின் வருமானத்தில் 70 சதவீதம் சொந்த உழைப்பை பணக்கார விவசாயிகளுக்கு விற்று கிடைக்கும்” வருமானத்தில் தம் வாழ்க்கையை ஒட்டினர். அமெரிக்கா வகை கூட்டுடமையாக்கல் மேலும் விரைவுபடுத்தியதை இத நிறுவியது. 1963 இல் யூகோஸ்லாவியாவில் ‘’நில உச்சவரம்பு 10 ஹெக்டேராக இருந்த போதும், அதைவிட அதிகமாகன நிலத்தை சொந்தமாக கொண்ட 1000 மேற்பட்ட பணக்கார விவசாயிகள் இருந்ததுடன், 30 ஹெட்டருக்கு அதிகமாக நிலத்தை கொண்டு இருந்தனர்” அரசு புள்ளிவிபரங்களே இப்படி இருந்த போது இதை சோசலிசம் என்றனர். இதை குருச்சேவ்வும், ட்ராட்ஸ்கிகளும் வானளவு புகழ்ந்து அங்கீகரித்தனர்.

     

    முதலாளித்துவ மீட்சி நிலத்துக்கு வெளியில் பல்துறைகளில் பல்கிப் பெருகியது. 1953 உருவாகிய சட்டம் ஒன்று அன்னிய ஏகாபோக நிறுவனத்துடன் தொழில் நிறுவனங்கள் உடன்பாடுகளை செய்ய வசதியளித்தது. 1956 இல் ‘’உள்ளாச்சி அமைப்புகள் வரிகளை வசூலித்து தனியார் முதலீட்டை உருவாக்க ஊக்குவித்தது.” யூகோஸ்லாவியாவின்; முதலீட்டு வங்கி தனது அறிக்கை ஒன்றில் 1952க்கும் 1956க்கும் இடையில் மொத்த மூதலீட்டில் 32.5 சதவீதம் வெளிநாட்டு பணம் என்பதை தெரிவித்தது. அமெரிக்கா வெளிநாட்டு அமைச்சர் தீன் ரஸ்க், யூகோஸ்லாவியா மூலதனம் ‘’பெரும்பாலும் மேற்கத்தைய நாடுகளில் இருந்த தான்” கிடைக்கிறது என்றார். ஸ்ராலின் ஏன் தூற்றப்பட்டார் என்பதும், பாட்டாளி வர்க்க சர்வாதிகார அதிகாரத்தை என் வெறுக்கின்றனர் என்பது எதார்த்த உள்நாட்டு கொள்கை நிர்வாணமாக்கிவிடுகின்றது. ஆனால் ட்ராட்ஸ்கிகள் ‘’ஸ்டாலினிச அதிகாரம் ஜார் ஆட்சியிலிருந்து சீதனமாய் பெறப்பட்ட பின்தங்கிய பொருளாதாரநிலை, அதிகார இயந்திரம், சர்வாதிகார கருத்தியல் தொடர்ச்சி இவைகளில் இருந்து தொடங்கியது”என்கின்றனர். ஸ்ராலினை இப்படித்தான் தூற்றினர். தூற்றியபடி தான் டிட்டோ நாட்டை ஏகாதிபத்திய மூலதனத்துக்கு விற்றன். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை, அதன் அதிகாரத்தை ஜார் ஆட்சியின் சீதனம் என்றனர். பின்தங்கிய பொரளாதாரத்தை சார்ந்து ஸ்ராலின் அதிகாரம் நிலவியதாக கூறி,; நவீன உற்பத்திக்கும் அதன் வகை ஆட்சி அமைப்புக்கும் கதவை திறக்க கோரினர். ட்ராட்ஸ்கிகள் ‘’புரட்சியை சூழவுள்ள நிலைமைகளை எதிரிடும் தத்துவப் பலமும் மனிதக் குணங்களும் ஸ்டாலினிடம் இருக்கவில்லை என்பதோடு புரட்சியை உருக்குலைக்கும் நடைமுறைகளும் தொடர்ந்து வளர்ந்தன.” என்று கூறினர். நாட்டையும் பாட்டாளி வர்க்க சர்வாதிரத்தையும் சூழவுள்ள நிலைமைக்கு இசைவாக மாற்ற வேண்டும் என்;றனர். இதைச் செய்த குருச்சேவ், டிட்டோ கும்பலின் முதலாளித்துவ மீட்சியை சோசலிசமாக வருணித்து அதை ஆதாரிக்கும் இவர்கள், பாட்டாளி வாக்கத்தின் எதிரியாக தம்மை வெளிப்படுத்தி நிற்கின்றனர். இதை உருவாக்கும் தத்துவப் பலத்தை ஸ்ராலின் கொண்டிருக்கவில்லை என்பதே, ட்ராட்ஸ்க்;சியத்தின் பலமான குற்றச்சாட்டு. இதை மூர்க்கமாக எதிர்த்த ஸ்ராலின் குணத்தை ‘’மனித குண” அற்ற செயலாக ட்ராட்ஸ்கியம் வருணிக்கின்றது. குருச்சேவ், டிட்டோ வகைப்பட்ட ‘’மனித குண” ஜனநாயகத்தைப் போற்றி, இதற்கு எதிரான ஸ்ராலின் நிலையை ‘’உருக்குலைக்கும் நடைமுறை” என்று அவதுறை பொலிகின்றனர். தொடர்ச்சியாக ட்ராட்ஸ்கியம் தன்னைத் தான் அம்பலப்படுத்திய போது, தமது முந்திய நிலைக்கு சாயம் அடிப்பது அவசியமாகியது. ‘’ஸ்டாலினிசத்துடன் ஏற்பட்ட மோதல் டிட்டோவை பிற்காலத்தில் சோவியத் அணியும் அல்லாத முதலாளிய அணியும் அல்லாத அணிசேரா நாடுகளின் அணி என்ற கருத்துக்கு துரத்தி விட்டது. டிட்டோவின் சோசலிசப் போக்கை ஸ்டாலினிச அதிகாரத்தின் போக்குக்கு எதிரான சோசலிசப் பிரயத்தனமாயே காணவேண்டும்”

     

    இப்படித் தான் ட்ராட்ஸ்கிய கோட்பாடுகள் அலை பாய்ந்தன. சோசலிசமும் அல்லாத முதலாளித்துவமும் அல்லாத வர்க்கமற்ற நிலைக்கு பிற்காலத்தில் யூகோஸ்லாவியா சென்றதாக ட்ராட்ஸ்கியம் பிதூற்றுகின்றது. மார்க்சியத்தின் அரிச்சுவடியையே மறுக்கின்றது. சோசலிசமும் அல்லாத முதலாளித்துவமும் அல்லாத சமுதாயம் கம்யூனிச சமுதாயத்தில் மட்டுமே சாத்தியம். அப்படியானல் யூகோஸ்லாவிய கம்ய+னிச சமூகமாக மாறிவிட்தா! இதை ட்ராட்ஸ்கிய கோட்பாட்டின் உள்ளடகத்துக்கு விட்டுவிடுவோம்;. ஸ்ராலின் அவதூறுகளில் பிறக்கும் கள்ளக் குழந்தைகள் இப்படி அப்பன் பெயர் தெரியாத அனாதைக் குழந்தையாக பிறப்பது தவிர்க்க முடியாது. ஆனால் ட்ராட்ஸ்;கியம் ஸ்ராலுனுக்கு எதிரான டிட்டோவின் முதலாளித்துவ மீட்சியை ‘’சோசலிசப் பிரயத்தனமாயே காண வேண்டும்” என்று கூறத் தவறவில்லை. அதே நேரம ஒன்றுக்கு ஒன்று முரணாக இதை சோசலிச நாடு என்று சொன்னதை மேலே பார்த்துதோம். பாட்டாளி வர்க்க ‘’ஸ்டாலினிச அதிகாரத்தின் போக்குக்கு” எதிரான சோசலிச முயற்சியாக இதை ட்ராட்ஸ்கிய கோட்பாடுகள் வரையறுத்தன. நான்காம் அகில விபச்சாரத்தை மூடிமறைக்க பிற்காலத்தில் நடந்தது என்று பூச்சூட்டிவிடகின்றனர். குருச்சேவ்வின்; ஆட்சி இருந்த காலத்தை ட்ராட்ஸ்கியம் ‘’ தொழிலாளர் அரசு நடக்கும் நாடுகள்”என்றே கூறுகின்றனர். மார்க்சியத்தின் அரிச்சுவடியை மறுக்கும் இவர்கள், அதன் மேல் தமது பொம்மை ஆட்சியை நிறுவவே விரும்பினர். முதலாளித்துவ மீட்சியை விரைவுபடுத்தவே விரும்பினர். இதனால் அதை தொழிலாளர் அரசு நடக்கும் ஆட்சி என்கின்றனரே ஒழிய, பாட்டாளி வர்க்க ஆட்சி பற்றி இவர்கள் பேசுவதில்லை. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், வாக்கப்போராட்டம் பற்றி விரிவான எல்லைக்குள் மூச்சுவிடுவதில்லை.

     

    குருச்சேவ்வுக்கு சாமரை வீசியபடி, டிட்டோவின் முயற்சியை சோசலிச முனைப்பாகவும் முதலாளித்துவமற்ற போக்காக காட்டியபடி ட்ராட்ஸ்கிய கோட்பாடுகள் வளர்ச்சி பெற்றன. அதை மெய்பிக்கும் வகையில் டிட்டோ அரசு செயல்பட்டது. தொழிலாளர் அரசாக, தொழிலாளார் மேற்பார்வையில் தனியார் மயமாக்கிய நிறுவனங்களில் நிலைமையை ஒட்டி 1958 களில் எழுதிய உள்சுற்று கடிதம் ஒன்றில் ‘’சுயநிர்வாக தொழில்துறையில் தொழிலாருக்கும் உயர் அதிகாரிக்கும் இடையில் சம்பள விகிதம் 40 மடங்கு அதிகமாக இருப்பதையும், சில தொழல் நிறுவனத் தலைவர்களின் போனஸ் உற்பத்தி மையத்தில் மொத்த தொழிலாளர்கள் பெறும் மொத்த கூலிக்கு சமமாக கூட இருந்தது.” சோசலிச முனைப்பாக முதலாளித்துவம் அல்லாத தொழிலாளர் அரசு என்று கூறியபடி, முதலாளித்துவ மீட்சியை கண்டு கொள்வதை காணவிடாது ஸ்ராலின் அவாதூறுகளால் கண்ணையே தோண்டியெடுத்தனர்.

     

    ஆனால் முதலாளித்துவ மீட்சி நாலுகால் பாய்ச்சலில் முன்னெடுக்கப்பட்டது. 1961 இல் ‘’அந்நியச் செலாவாணியை வாங்கிட தனியாருக்கு உரிமையுண்டு” என்று டிட்டோ அறிவித்தான். ‘’1963 இல் தனியார் மூலதனத்தை வளர்க்கும் கொள்கையை” ஊக்கவிக்கப்பட்டது. 1963 இல் ‘’யூகோஸ்லாவியாவில் 1.15 லட்சத்துக்கு மேற்பட்ட தனியார் மூலதனங்கள் காணப்பட்டது. இது தொடர்ந்து பெருகிச் சென்றது. இது சட்டபடி 5 பேரை கூலிக்கு அமர்த்த அனுமதித்த போதும் 10 மடங்கு முதல் 500 மேற்பட்டவரைக் கூட தனியார் உற்பத்தி கொண்ட இருந்தது. அத்துடன் சில தனியார் விற்பனை 10 கோடி தினாராகவும் இருந்தது.”ட்ராட்ஸ்கிய வரையறுத்த முதலாளித்துவமும் அல்லாத சோசலிச முனைப்பில் மூலதனம் குதுகலத்தால் கலகலத்தது. ஸ்ராலின் அவாதூறுகள் மூலம் ஸ்ராலினிய கால சோசலிச உள்ளடங்கங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. 1961 இல் யூகோஸ்லாவியாவில் வெளியான செய்தி ஒன்றின் படி ‘’சிலரது வருமானம் ஒரு மாதத்துக்கு 10 லட்சம் தினாராக இருந்தது.”ஒரு முதலாளித்துவ நாட்டின் நிலைக்கு முதலாளித்துவ சர்வாதிகார அடக்குமுறை மூலம் உருவாக்கப்பட்டது. இதை எதிர்த்த கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டனர். சொத்துடைய வர்க்கத்தின் சுரண்டும் ஆட்சி யூகோஸ்லாவியா மக்களின் மேல் நிறுவப்பட்டது. யூகோஸ்லாவியாவில் ‘தனியார் வாணிபமும், தனியார் சேவை நிறுவனங்கள், தனியார் வீட்டு வசதி அமைப்பு, தனியார் போக்குவரத்து, தனியார் வங்கி” என்று 1960 களில் பெரும் எண்ணிக்கையில் தனியார் துறை பெருகி வந்தது. 1961 இல் பெல்கிரெட்டில் வெளியான ஒரு பத்திரிகையில் ‘’1960 இல் 116 தொழில் நிறுவன உரிமையாளர்கள் ஒவ்வெருவரும் ஒரு கோடி தினாருக்கு அதிகமான வருமானத்தை பெற்றனர். சிலர் 7 கோடி தினாரை பெற்றதாக” செய்தி வெளியிட்டது. யூகோஸ்லாவியாவின் ஆட்சி மூலதனத்தின் ஆட்சி ஒழிய வேறு ஒன்றும் அல்ல. ஸ்ராலின் சரியாக கூறியது போல், டிட்டோவால் நிறுவப்பட்ட சர்வாதிகாரம் முதலாளித்துவ சர்வாதிகாரமேயாகும்;.

  3.  

    மார்க்சியத்தை தூற்றிய யூகோஸ்லாவியா எகாதிபத்தியத்தைப் போற்றியது

     

    முதலாளித்துவ மீட்சியை சோசலிசமாகவும், முதலாளித்துவமல்லாத புரட்சியாக காட்டப்பட்டது. இதனடிப்படையில் ஸ்ராலின் தூற்றப்பட்டார். ஸ்ராலினால் முன்னெடுக்கப்பட்டு உருவாக்கபட்ட சோசலிச சமூக கட்டுமானங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு நொருக்கப்பட்டன. இந்த முதலாளித்துவ மீட்சியை சர்வதேசிய ட்ராட்ஸ்கிகள் ஆதாரித்து நின்றனர். குருச்சேவ் பதவிக்கு வந்தவுடன் ஸ்ராலின் மறுக்கப்பட்ட நிலையில், சோவியத்யூனியனும், உலக கம்யூனிஸ்ச இயக்கமும்; படிப்படியாக யூகோஸ்லாவிய நிலைக்கு தம்மை மாற்றிக் கொண்டது. உலக எங்கும் புரட்சிகர போக்குகள் சிதைக்கப்பட்டன. எதிரியை நண்பனாக காட்டுவதும், போற்றுவதும் புதிய விடையமாகியது. குருச்சேவ், டிட்டோ இடையில் ஏகாதிபத்தியத்துடன் யார் அதிகம் கூடிக்கூலாவுவது என்பதில் கடுமையான போட்டி நிலவிய போதும், தமது முதலாளித்துவ மீட்சிக்கான நோக்கத்தில் அதற்காகவே மட்டும் ஒன்றுபட்டு கைகோர்த்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். முதலாளித்துவத்தை மீட்பது எப்படி என்பதில் குருச்சேவ் டிட்டோவின் சீடானான்;. டிட்டோ கும்பல் உலகம் தழுவிய வகையில் மக்களின் புரட்சிகர போராட்டங்களையும், ஏகாதிபத்திய நாடுகளின் ஒடுக்குமுறைக்கு உள்ளான உலக நிகழ்ச்சிகளில், அமெரிக்காவுக்கு சார்பாக அப்பட்டமாக செயல்பட்டது. இதன் போது ஏகாதிபத்திய தலைவர்களுக்கு வெண்சமாரை வீசி, செங்கம்பளம் விரித்து வரவேற்று அவர்களைப் போற்றினர்.

     

    1951 இல் ஸ்ராலினை மறுத்த யூகோஸ்லாவியா கட்சியை வெறும் கழகமாக மாற்றியது. யூகோஸ்லாவிய கட்சிப் பத்திரிகை ஒன்று 1954 இல் எமுதியது ”ஒட்டு மொத்தமாக சோசலிசத்துக்குள் ‘குதித்து’ உலகமே சோசலிசமாக மாறிவிட்டது” என்றது. யூகோஸ்லாவிய அரசு வெளியிட்ட நூல் ஒன்றில் ”சோசலிசமா முதலாளித்துவமா என்ற பிரச்சனை ஏற்கனவே உலக அளவில் தீர்க்கப்பட்டு விட்டது.” என்று எழுதியது. இப்படி கூறி நடந்த முதலாளித்துவ மீட்சியை ட்ராட்ஸ்சிகள் ஆதாரித்தனர். ட்ராட்ஸ்;கிய அரசியல் கோட்பாடுகள் இதை தழுவி நின்றன. ட்ராட்ஸ்கிகள் முதலாளித்துவமல்லாத சோசலிச முனைப்பாக ஸ்ராலின் மறுப்பாக காட்டி முதலாளித்துவ மீட்சியை மறுத்தனர். ஒட்ட மொத்தத்தில் ஏகாதிபத்தியங்கள் உலகமே சோசலிசமாக மாறிவிட்டது என்ற போது, பெருமையாக போற்றின. சோசலிசமா, முதலாளித்துவமா என்பது தீர்க்கப்பட்டு விட்டது என்ற வரையறையால், கம்யூனிச இயக்கமே நஞ்சுட்டப்பட்டு அதில் ஸ்ராலின் உயிருடன் கொல்லப்பட்ட போது, ஏகாதிபத்தியங்கள் குதுகலித்தன.

     

    உலகப் புரட்சிகர வர்க்கப் போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் நடத்துவதை கொச்சைப்படுத்தினர். பலாக்கார மூலம் ஆட்சி அதிகாரத்தைக் பாட்டாளி வர்க்கம் கைப்பற்றுவதை தூற்றினர். பலாக்காரப் புரட்சி மூலம் ”சமுதாய முரண்பாடுகளை தீர்க்கும் வழியில் தேவையற்ற ஒன்றாக ஆகிவருகின்றது” என்று யூகோஸ்லாவியா அறிவித்து, உழைக்கும் மக்களின் முதுகில் குத்தினர். உழைக்கும் மக்களை ஆதாரிப்பதாக, அவர்களின் நலனுக்காக போராடுவதாக கூறிக் கொண்ட ட்ராட்ஸ்கிகள், யூகோஸ்லாவியாவின் இந்த நிலைப்பாட்டை ஆதாரித்து நின்றனர். முதலாளித்துவ மீட்சியை மறுத்தனர். முதலாளித்துவ மீட்சி அல்ல இது, ஸ்ராலின் மீதான அதிகாரத்துவ மறுப்பு என்றனர். முதலாளித்துவ மீட்;பு அல்லாத சோசலிச முனைப்பு என்றனர். ஏன் இதை சோசலிசம் என்று கூடச் சொன்னார்கள்.

     

    டிட்டோ ”அமைதி வழிப் போட்டியின்” மூலம் தொழிலாளி வர்க்கம் ஆட்சியை கைபற்ற முடியும் என்று அறிவித்தான். முதலாளித்துவ உலகில் நிலவும் சூறையாடும் ஜனநாயகத்தின் நெம்பை தாங்கி நிற்பதன் மூலம், தொழிலாளி வர்க்கம் தனது நலனை அடைய முடியும் என்றான். இதை ஸ்ராலின் மாறுத்தால், ஸ்ராலினை ஒரு கொடுங்கோலன் என்றனர். உலகில் ”அரசியல் பொருளாதார ஒருமைப்பாட்டை” உருவாக்குவதே பாட்டாளிவாக்கத்தின் கடமை என்று டிட்டோ அறிவித்தான். இதற்கு மாறாக ஸ்ராலின் வர்க்க முரண்பாட்டைத் தூண்டி அரசியல் பொரளாதார ஒருமைப்பாட்டை உலகளவில் தகர்த்த, ஒரு அதிகார வெறி கொண்ட சர்வாதிகாரி என்றான். ஸ்ராலினும், ஸ்ராலின் வழிப்பட்ட அரசியலும் துடைதெறியப்பட வேண்டும் என்றான்;. இதையே குருசேவ் ”அமைதி வழிப் பொருளாதார போட்டியின்” ஒற்றுமையை ஒத்துலைப்பை முதலாளி வர்க்கத்துடன் நல்க பட்டாளி வர்க்கத்தைக் கோரினன். இதை எதிர்த்த ஸ்ராலின் நிலைப்பாட்டைக் கொண்ட மார்க்சிய வாதிகள் ஈவிரக்கமின்றி ஒழித்துக் கட்டப்பட்டனர். ட்ராட்ஸ்கிகள் குருச்சேவின் இந்த நிலைப்பாட்டை ஆதாரித்தனர். முதலாளித்துவ மீட்பை மறுத்த இவர்கள் குருச்சேவின் அரசியாலுக்கு பாய்விரித்தனர். டிட்டோ குருச்சேவின் அரசியல் தந்தையாக ட்ராட்ஸ்கிகள் தாயாக கள்ளக் குழந்தையாக குருச்சேவை பெற்றுப் போட்டனர். ஸ்ராலினை தூற்றுவதில், ஸ்ராலின் அரசியலை புதைப்பதில் குடும்பமாகவே ஒன்றுபட்டு புதைகுழியை வெட்டினார்.

     

    குருசேவ் – டிட்டோ இருவரும் மார்க்சியத்தை கைவிட்டு முதலாளித்துவத்தை மீட்டு எடுத்து முன்வைத்த கோட்பாடுகளை பரஸ்பரம் ”ஆக்கபூர்வமான வளாச்சி” என்ற கூறிக் கொண்டனர். இதை எதிர்த்தவர்களை வரட்டுவாதிகள் என முத்திரை குத்தினர். இதை எதிர்ப்பவார்கள் ஸ்ராலினிய அதிகாரத்துவ கொடுங்கோலர்களின் சர்வாதிகாரப் போக்கு இசைவானவர்கள் என்றனர். ஸ்ராலினுக்கு மாற்றான தமது பாதையே சோசலிசப் பாதை என்றனர். இதை டிட்டோ கூறிய போது ”மனிதகுலம் தடுத்து நிறுத்த முடியாதபடி பல்வேறு வழிகளில் சோசலிச சகாப்தத்தினுள் பெரிய அளவில் நுழைந்து கொண்டிருக்கின்றது” என்று முதலாளித்துவ மீட்சியை கூறினான். குருச்சேவோ புரட்சிகளை ”நாடாளுமன்ற பாதையில்” நடத்த முடியும் என்றான். நாடாளுமன்ற பாதை அல்லாத வழிகளில் புரட்சியை நடத்தவும், நடத்த துண்டிய ஸ்ராலினின் மார்க்சிய வழியை, ஸ்ராலின் போன்ற கொடுங்கோலர்களின் வழி என்றனர். ஈவிரக்கமற்ற வர்க்கப் போராட்டத்தை நடத்துகின்ற மனிததாபிமான மற்ற ஸ்ராலின் வழி நிராகரித்து, அமைதி வழி சோசலிசத்தை கட்ட பேண்டும் என்பதே எமது வழி என்று குருச்சேவ் – டிட்டோ கும்பல் உலகுக்கு அறிவித்தது. இந்த பாதையில் தடுத்த நிறுத்த முடியாத வகையில் பல்வேறு வழியில் சோசலிச சகாப்தத்துக்குள் உலகம் செல்வாதாக கூறி, முதலாளித்துவ மீட்சியை நடத்தினர். ட்ராட்ஸ்;கிகள் புல்லரிக்க தமது கடந்த கால அரசியல் வழி சோவியத்யூனியனில் நனவாகிவிட்டது என்று கூறி, தமது குதுகலத்தை பிரகடணங்கள் மூலம் ஆதாரித்தனர். ஸ்ராலினை கழுவேற்றிய அந்தக் கணமே குருச்சேவ் ”பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ரசியாவில் இனிமேலும் அவசியமில்லை” எற்று கூறியதுடன் ”மக்கள் அனைவரினதும் அரசை” பிரகடனம் செய்து முதலாளித்துவ மீட்சியை கோட்பாட்டு ரீதியாக பிரகடனம் செய்தான். ஆனால் லெனின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ”முதலாளி வர்க்கத்தைத் தூக்கியெறிந்துள்ள பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டுமல்ல, முதலாளித்துவத்துக்கும் ‘வர்க்கமற்ற சமுதாய’த்துக்கும் அதாவது கம்யூனிசத்துக்கும் இடையிலுள்ள வரலாற்றுக் காலகட்டம் முழுவதுக்கும் அவசியம்” என்றார்.

     

    குருச்சேவ் – டிட்டோ கும்பல முதலாளித்துவ மீட்சியில்; மேலும் முன்னேறி ”அனைத்து மக்களின் அரசு” என்று கூறி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டனர். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத் அனைத்து மக்களுக்குமான ஜனநாயகத்தை மறுக்கும் ஸ்ராலின் வகைப்பட்ட கொடுங்கோலர்களின் தத்துவம் என்றனர். அனைத்து மக்களுக்கும் ஜனநாயகம், இதுவே சோசலிசத்தின் லட்சியம் என்றனர். மார்க்ஸ் முதல் லெனின் ஸ்ராலின் ஈறாக பாட்டாளி வாக்க சர்வாதிகாரம் என்ற கொடுரமான மார்க்சிய சிந்தனை மூலம், அனைத்து மக்கள் ஜனநாயகத்தை வழங்க மறுத்தாக கூறி, அதை கம்யூனிச இயகத்தில் புகுத்தி கட்சிகளின் வர்க்க குணம்சத்தை மாற்றினர். குருச்சேவ் ”அனைத்து மக்கள் கட்சி” என்ற பெயரில் கட்சியின் வரலாற்றுப் பாத்திரத்தை மறுத்தான். இதை ட்ராட்ஸ்;கிகள் தாளம் போட்டு இசைமீட்டனர். உலக கம்யூனிச இயக்கமே முதலாளித்துவ கட்சியாக மாற்றியது.

     

    ”வட்டார அளவிலான போரே உலப் போரேன்னும் பெருந் தீயை மூட்டிவிடக் கூடும்” என்று கூறிய குறுகிய அளவிலான போராட்டங்களை கூட, உலகளவில் பிற்போக்கனவை என்றனர். வட்டார அளவிலான வர்க்கப் போராட்டங்கள் ஸ்ராலின் வகைப்பட்ட மார்க்சியம் என்றனர். அதாவது உலகளாவில் மனித போராட்டங்கள் அனைத்தும் பிற்போக்கானவை என்றனர். அவற்றுக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் போராட வேண்டும் என்றனர். ஏகாதிபத்தியத்துக்கு அதன் ஒடுக்குமுறைக்கும் பாட்டாளி வர்க்கம் தலை வணங்கவேண்டும். இதை மறுத்த ஸ்ராலினையும், அவரின் பாட்டாளி வர்க்க கொடுங்கோலர்களின் அரசியல் நிலையை நாம் ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து ஒடுக்கவேண்டும் என்றனர். ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதே, ஸ்ராலின் என்ற கொடுங்கோலனின் முடிவை நிதார்சனமாக்கும் என்றனர். உலகத்தில் கொடுங்கோலன் ஸ்ராலின என்ற தூற்றியபடி, டிட்டோ அமெரிக்கா எகாதிபத்தியத்தின் தலைவiரான அய்சனோவரை ”விடாப்பிடியான சமாதானக் காவலர்” என்று போற்றினன். 1961 இல் கெனடியை ”சர்வதேச உறவுகளை மேம்படுத்தவும், நெருங்கிப் பிடிக்கும் உலகப் பிரச்சினைகளை அமைதி வழியில் Pர்க்கவும் உதவிகரமாய் இருக்கும்” சர்வாதிகாரத்துக்கு எதிரான ஜனநாயக மனிதர் என்றன். குருச்செவ் அய்சனோவரை ”சமாதானத்தை மனப்பூர்வமாய் விரும்புகிறவர்” என்றார். கெனடியை ”சமாதானத்தைப் பாதுகாக்கும் பேராவலைக் காணமுடிகின்றது” என்ற புகழாரம் செய்தான். பாட்டாளி வர்க்கம் சமாதனத்தை கடைபிடிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதை கைவிட வேண்டும் என்பதே இதன் சராம்சமாகும். முதலாளித்துவ மீட்சியை சோசலிசத்தின் ஆக்கபூர்வமான வளர்ச்சியாக காட்டியபடி, உலக மக்களுக்கே எதிராக கரம் உயர்த்தினான்.

     

    சமாதனம், அமைதி என்ற போர்வையில் வர்க்கப் போராட்டங்களை கொச்சைப்படுத்தினர். ஏகாதிபத்திய அமெரிக்காவுடன் கூடிக்கூலாவி சமரசமாடவும், சொந்த நாட்டில் முதலாளித்துவ மீட்சியை துரிதப்படுத்தவும் அணு ஆயுதத்தை மிகைப்படுத்தி, மக்களையும் மக்களின் போராட்டத்தையும் சிறுமைப்படுத்தினர். டிட்டோ அணுப் போர் மூண்டால் ”மனித இனம் அழிந்து போகும்” என்று கூறி வர்க்கப்; போராட்டத்தை கொச்சைப்படுத்தினான். குருச்சேவ் குருவை மிஞ்சும் வகையில் ”நமது கிராகம் நோவாவின் தோணி” அணுக்குண்டால்; ”பூவுலகம் அழிந்து போகும்” என்ற கூறி உலகளாவிய வர்க்கப் போராட்டத்தை கைவிடக் கோரினான். அமெரிக்காவின் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபனிந்து உலகமே அமெரிக்கா காலனியாக வேண்டும் என்றான். சர்வாதிகார கொடுங்கோலான் ஸ்ராலின் அணுக்குண்டுக்கு அடிபணியாது, உலகத்தை அழிவுக்கு இட்டுச் சென்றாதாக தூற்றினான். அமெரிக்காவினதும் எகாதிபத்தியங்களினதும் காலனித்துவகளையும், புதிய காலனித்துவ முயற்சிகளை எதிர்த்து உலகளாவில் வர்க்கப் போராட்டங்களை உற்சாகப்படுத்தி ஆதாரவு வழங்கியதன் மூலம், ஸ்ராலின் உலக சமாதனத்துக்கு எதிராக இருந்தாக கூறித் தூற்றினான். வர்க்க சமரசம் மூலம் உலக சமாதானத்துக்கு கைகளை உயர்த்தியவர்களை, ஸ்ராலின் கடந்த காலத்தில் ஒடுக்கிய போக்குகளில் இருந்து, அனைவரை விடுவிப்பதை முன்னிறுத்தி முதலாளித்தவ மீட்சியை நடத்தினர்.

     

    ஸ்ராலின் பாட்டாளி வர்க்க போக்குகளை ஒளித்துக் கட்டிய பின், குருச்சேவ் 1961 குரு டிட்டோ வழியில்; கம்யூனிஸ்ட் கட்சியை ”அனைத்து மக்களின் கட்சியாகி விட்டது” என்று அறிவித்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையே முடிவுக்கு கொண்டு வந்தான். ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதை டிட்டோ தனது கொள்கையாக கொண்டிருந்த போதே, ஸ்ராலினும் சர்வதேச பாட்டாளி வர்க்கமும் அதற்கு எதிராக போராடியது. யூகோஸ்லாவிய எதை தனது அரசியல் வழியாக கடைப்பிடித்தது என்பதை ஆதாரமாக மேலே ஆராய்ந்தோம். அரசியல் ரீதியாக ஸ்ராலினை மறுத்த குருச்சேவ், முதலாளித்துவ மீட்சியை டிட்டோ வழியில் தொடங்கியதை விரிவாக ஆராய முன்பு, ஸ்ராலின் அவாதூறின் அரசியல் போக்கை புரிந்து கொள்ள முனைவது அவசியம். இந்த முதலாளித்துவ மீட்சியை ட்ராட்ஸ்கிகள் ஆதாரித்து நின்றனர். அனைத்துக்கும் ஸ்ராலின் அவதூற்றை அடிப்படையாக கொண்டே முதலாளித்துவ மீட்சியை அழகுபடுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *