3 thoughts on “இரண்டாவது தலித் மாநாடு லண்டன்

  1. புதுவருஷமும் தீபாவளியும் பெரிய பண்டிகைகளே. ஆனால் யாழ்பாணத்தில் பொங்கலுக்கு நிகரான பண்டிகை இல்லை எண்டு சொல்லலாம்.” இவ்வாண்டு 75 அகவையை நிறைவு செய்திருக்கும் ஈழத்து எழுத்தாளர் எஸ்.பொ தனது நனவிடை தோய்தலில் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.

    அத்துடன் “யாழ்ப்பாணப் பொங்கல் விழாஇ கமக்காரர் விழாவாகஇ பாட்டாளிகளின் விழாவாகஇ தமிழர் பண்பாட்டு விழாவாகஇ விளைவுக்கு உதவும் கதிரோனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகஇ பழையன நீக்கி புதியன புனைந்துஇ புதியன கொண்டு வந்து சேர்க்கும் என்ற நம்பிக்கைகளின் நுழைவாயில் விழாவாக பொங்கல் பண்டிகையை யாழ்ப்பாண மக்கள் கொண்டாடினார்கள்” எனவும் கூறிச் செல்கிறார்.
    – பாட்டாளி

  2. ஈழத்துச் தமிழ்ச் சமூகம் இன்று தமிழ் நாட்டுக்கு முன்னோடியாகக் காட்டப்படுகிறது.. ஆயுதப் போராட்டத்தில் அவர்கள் ஏற்படுத்தியுள்ள ‘’சாதனையை‘’ இங்கே இருக்கும் தமிழ்த் தேசியவாதிகள் முன்னுதாரணமாகக் காட்டுகின்றனர். அதைவிடவும் வேறுசில ‘’சிறப்புகளும்‘’ ஈழத்துக்கு உண்டு. அந்த சமூகம்தான் ஆறுமுக நாவலரைத் தந்தது. ‘’பறையும்இ பெண்ணும்இ பஞ்சமரும் அடிவாங்கப் பிறந்தவை‘’ என்ற அரிய கருத்தைச் சொன்னவர் ஆறுமுகநாவலர்.

    இன்றளவும் அங்கே வேர் கொண்டிருக்கிற சாதி வெறியை நீரூற்றி வளர்த்தவர் அவர்…

    ….அங்கிருக்கும் பிரச்சைனைக்கு தமிழ்நாட்டில் இருந்துகொண்டு எப்படி கேள்வி எழுப்பலாம் என்று யாரேனும் கேட்கலாம் ‘’இந்தியா எங்களது தந்தை நாடு‘’ எனவும் ‘’தமிழர்களோடு எங்களுக்கிருப்பது தொப்புள்கொடி உறவு‘’ எனவும் புலிகள் மீண்டும் மீண்டும் அழுத்தமாகத் தெரிவித்துள்ளனர். அவர்கள் நினவுபடுத்தும் உறவோ ஆதிக்கத்தின் அடிப்படையிலானது. ஆனால் இலங்கையில்தீண்டாமை என்னும் கொடுமைக்கு ஆளாக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களோடு தம்மை இணைப்பதோ பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலான தோழ-மையாகும். பறையும்இ பெண்ணும்இ பஞ்சமனும் அடிபடப் பிறந்தவை என்று சாதித் திமிரோடு சொன்ன ஆறுமுகநாவலரைச் சொந்தம் பாராட்ட இங்குள்ள சாதித் தமிழர் முன்வரும்போது அதற்கு இவர்களுக்கு உரிமை இருக்கும்போது நாம் படுவதுபோன்ற கொடுமையை எதிர்கொண்டு அல்லல்படும் ஒருத்தனின் துயரத்தைப் பகிர்ந்துகொள்ள நமக்கெப்படி உரிமையில்லாமல் போய்விடும்.

  3. //..….அங்கிருக்கும் பிரச்சைனைக்கு தமிழ்நாட்டில் இருந்துகொண்டு எப்படி கேள்வி எழுப்பலாம் என்று யாரேனும் கேட்கலாம் ‘…///

    ஐரோப்பாவில் இருந்து கொண்டு எப்படி தமிழீழம் கேட்கலாம் என கேட்கும் கூட்டம் அல்ல நான். எனவே அவ்வாறு கேட்கமாட்டேன்.
    இதுக்கெல்லாம் நீங்கள் புலியை இழுக்கத்தேவையில்லை. மாற்றுக்கருத்தாளர்களை கேட்டிருக்கலாம்.

    //.. பறையும்இ பெண்ணும்இ பஞ்சமனும் அடிபடப் பிறந்தவை என்று சாதித் திமிரோடு சொன்ன ஆறுமுகநாவலரைச் ..///

    இதைத்தான் நான் இவ்வளவு காலமும் தேடித்திரிகிறேன். இது முன்னர் நான் கேள்விப்பட்ட ஒன்று ஆனாலும் யாரும் இது எங்கே (ஏதாவது ஆறுமுக நாவலரின் புத்தகம்இ பிரசுரம் ?) இருக்கிறது என சொல்ல முடியாதிருக்கிறது. எனது நண்பனோடு விவாதித்துக்கொண்டிருந்தபோது இவ்வாறான கருத்துகள் முன் வைக்கப்பட்டன. ஆனால் யாருக்கும் எங்கே ஆதாரம் இருக்கிறது என சொல்ல முடியாதிருந்தது. ஆறுமுக நாவலர் இவாறான கருத்துள்ளவர் என அறிந்தவன் தான். ஆனால் ‘அடிவாங்க பிறந்ததுகள்’ என சொன்னதாக அறியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *