மரண பூமி

கட்டுரைகள்

“சிறிலங்கா அரசு – விடுதலைப் புலிகள் என இருதரப்புமே யுத்தவிதிகளை மீறக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை(Human Rights Watch) சேர்ந்த ஆய்வாளர் Anna Neistat. தொடர்கையில் “வன்னியில் சிறிய நிலப்பரப்பினுள் ஏறக்குறைய ஒரு இலட்சம் மக்கள் மரணப்பொறியினுள் சிக்கியிருக்கிறார்கள். அந்தப் பகுதியை மோதல் தவிர்ப்பு வலயமாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தும் அந்தப் பகுதியினுள் அரசபடையினர் தொடர்ச்சியாகவும் கண்மூடித்தனமாகவும் எறிகணை வீச்சுகளை நிகழ்த்துகிறார்கள். அங்கு சிக்கயிருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாதவாறு விடுதலைப் புலிகள் மக்களைத் தடுத்து வைத்திருக்கிறார்கள்” என்கிறார் Anna Neistat.

கீழேயுள்ள படங்கள் புதுமாத்தளனில் அமைந்திருக்கும் தற்காலிக வைத்தியசாலையில் எடுக்கப்பட்டவை. ஏப்ரல் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் இவர்கள். பெண்களும் குழந்தைகளுமே பெருமளவில் காயப்பட்டுள்ளனர். பொக்கணை எனும் பிரதேசத்தில் உணவுப் பொருட்களைப் பெறுவதற்காக நின்றுகொண்டிருந்தவர்கள்மீது இலங்கை இராணுவத்தினர் எறிகணைகளை வீசியுள்ளனர்.