அஞ்சலி : எலிசபெத் சேதுபதி

கடந்த  முப்பத்தைந்து ஆண்டுகளாக, பிரஞ்சுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியைக் கற்பித்துவந்த பேராசிரியை எலிசபெத் சேதுபதி அவர்கள்  தன்னுடைய 66-வது வயதில் இம்மாதம் 11-ம் தேதி பாரிஸில் காலமானார். இரண்டாயிரத்தின் தொடக்கத்தில், தோழர். அ.மார்க்ஸை  தலைமை  உரையாளராக அழைத்து நாங்கள் நடத்திய ‘மார்க்ஸியமும் பின்நவீனத்துவமும்’ என்ற கருத்தரங்கில்தான் நான் முதன் முதலில் எலிசபெத்தைச் சந்தித்தேன். அதன் பின்பு, சென்ற ஆண்டின் இறுதியில் அவர் நோயின்வாய் வீழும்வரை அவ்வப்போது கூட்டங்களிலும் கருத்தரங்குகளிலும் அவரைச் சந்தித்துக்கொண்டிருந்தேன். கடந்த செம்டம்பர் மாதம்,  இலக்கியப் […]

Continue Reading

அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை.

சந்திப்பு: வெய்யில், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன் விகடன் தடம்: பெப்ரவரி 2018 படங்கள்: தி.விஜய், ரா.ராம்குமார் ஷோபாசக்தி ஈழ இலக்கியத்தின் இன்றைய முகம். போரின் அழிவுகளை, சிங்களப் பேரினவாதத்தின் இன ஒடுக்குமுறைகளை, போராளி இயக்கங்களின் தவறுகளை, புலம்பெயர் வாழ்வின் பிரச்னைகளைக் காத்திரமான மொழியில் தன் படைப்புகளில் பதிவுசெய்த படைப்பாளி. சாதி ஒழிப்புக் கருத்தியலையும் தலித்தியத்தையும் ஈழத் தமிழர்களிடத்தில் கொண்டுசெல்ல இடைவிடாது உரையாடிக்கொண்டிருப்பவர். ஷோபாசக்தியின் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட அவரது படைப்பின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்வார்கள். இப்போது நடிகராகவும் […]

Continue Reading

தமிழ் நாஸி பேக்கரி

வாசு முருகவேல் எழுதிய ‘ஜெப்னா பேக்கரி’ எனும் புத்தகத்திற்கு ‘இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்’ முதல் நெருப்பு  எனும் விருதை அறிவித்திருப்பதை அறிகையில் எனக்கு உண்மையிலேயே அடி வயிற்றில் நெருப்புப் பற்றி எரிகிறது. இந்தப் புத்தகத்திற்கு ஆர். எஸ். எஸ். அல்லது சிவசேனா போன்ற காவி அமைப்புகள்தான் விருதை வழங்கியிருக்கவேண்டும். இலங்கை இ்ஸ்லாமியர்கள் மீது வெறுப்பை வாரி இறைத்து,  இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனச்சுத்திகரிப்பை அநியாயத்திற்கு நியாயப்படுத்தும் ஒரு பிரதிக்கு ஓர் இசுலாமிய அமைப்பே […]

Continue Reading

ரோஹிங்யா அகதிகள் : இந்திய அரசு நிகழ்த்தும் இரண்டாம் இனப்படுகொலை!

நான் 1991-ம் ஆண்டின் முற்பகுதியில் `சட்டவிரோத அகதி’ எனக் கைதுசெய்யப்பட்டு, தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள குடியேற்றவாசிகள் தடுப்பு மையச் (Immigration Detention Center) சிறையில் அடைக்கப்பட்டேன். நான் அடைக்கப்பட்ட சிறையில் ஆண்களுக்குத் தனியான பகுதியும், பெண்கள், குழந்தைகளுக்குத் தனியான பகுதியும் இருந்தன. உலகில் உள்ள மிக மோசமான சிறைகளைப் பட்டியலிட்டால், முதல் மூன்று இடங்களுக்குள் வருவதற்கு அந்தச் சிறைக்கு எல்லாவிதமான தகுதிகளும் உண்டு. நான் சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணம், நான் நாடற்ற அகதியாக இருந்தது மட்டுமே. […]

Continue Reading

நாவலரும் மைத்ரியும் மணியனும்

அருளினியன் எழுதி வெளியிட்ட ‘கேரள டயரீஸ்’ நூல் கடந்த ஒரு மாதமாகக் கிளம்பிய சர்ச்சைகளும் பிரச்சினைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. நூலை வெளியிடவும் பெரும் இடர்பாடுகள். தான் கொல்லப்படக்கூடும் என அருளினியன் பேரச்சம் தெரிவித்தார். வரலாற்றில் முதற்தடவையாக ஒரு தமிழ் எழுத்தாளன், இலங்கை சனாதிபதியைச் சந்தித்துக் கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்ற வேண்டியதும், சனாதிபதியும் கருத்துச் சுதந்திரத்தைக் காக்கச் சூளுரைத்த காட்சிகளும் வண்ணப்படங்களாக எங்களிற்குக் காணக்கிடைத்தன. இன்று என் கையில் கேரள டயரீஸ் கிடைத்தது. ஒரே மடக்கில் வாசித்து முடித்துவிட்டு […]

Continue Reading

கத்னா : கேட்டிருப்பாய் காற்றே!

  Nothing has really happened until it has been recorded – Virginia Woolf ஸர்மிளா ஸெய்யித்தின் ‘பெண் கத்னா’ குறித்த உரை, மலையக இலக்கியச் சந்திப்பில் விலக்கப்பட்டதைத் தொடர்ந்து பெண் கத்னா குறித்த விவாதம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. கூடவே இலக்கியச் சந்திப்புத் தொடரின் சனநாயகத்தன்மையும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இன்று உலகம் முழுவதும் கத்னாவால் இருபது கோடிப் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்குறியில் அமைந்திருக்கும் பாலியல் இன்ப நுண்ணுணர்வுக் குவியமான கிளிட்டோரிஸை (Clitoris) முழுமையாகவோ அல்லது […]

Continue Reading

ஒரு தோழமையான வேண்டுகோள்

எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் ஷர்மிளா செய்யித்தின் உரையை இடம்பெறச் செய்யுமாறு மலையக இலக்கியச் சந்திப்புக்கு விடுக்கப்பட்டிருந்த கூட்டு வேண்டுகோள் 47-வது இலக்கியச் சந்திப்பு (மலையகம்) ஏற்பாட்டுக் குழுத் தோழர்களிற்கு, இலக்கியச் சந்திப்புகளில் பங்களித்துவரும் எங்களது தோழமையான வேண்டுகோள் பின்வருமாறு: தற்போது, 47-வது இலக்கியச் சந்திப்புக் குறித்து நடந்துவரும் விவாதங்களை நாங்கள் கவனித்தவரை, இந்த இலக்கியச் சந்திப்பில் இலங்கையில் சிறுமிகளிற்கு ‘கிளிட்டோரிஸை’ சிதைத்துவிடும் ‘கத்னா’ வதைச் சடங்கு குறித்து உரையாற்றவிருந்த ஷர்மிளா செய்யித் அவர்களின் உரை சிலரின் […]

Continue Reading