நடராசர் மான்மியம் ( தூற்று.கொம் – பகுதி 6 )

கீற்று இணையத்தளத்தில் 22 ஜுன் 2010 ல் “ஷோபா சக்தி – பிரபாகரன் பாசிஸ்ட், ரோகண புரட்சியாளன்” என்ற இன்னொரு அவதூறுக் கட்டுரை வெளியாகிற்று. அக்கட்டுரை நடராசன் என்ற பெயரில் எழுதப்பட்டிருந்தது. அவ்வை நடராசன், ஆயிஷா நடராசன், வெளிவட்டம் நடராசன், முதலியார் நடராசன், சசிகலா நடராசன் என்று பல நடராசன்களைப் பார்த்த தமிழ் உலகிற்கு இந்தக் கீற்று நடராசன் புதியவராகவேயிருந்தார். கீற்று நடராசனுக்கு அவதூறுப் பணியில் ஆழ்ந்த அனுபவம் இருக்கின்றது என்பதையும் வசைமொழியே அவரது தனிச் சிறப்பான […]

Continue Reading

ஓர் அவதூறின் முடிவு (தூற்று .கொம் – பகுதி 5)

ஷோபாசக்தியைப் பொய்யனாக்கியே விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு கடந்த ஒரு கிழமையாகவே ‘கீற்று’ ரமேஷ் ஒரு காரியத்தைச் செய்து வந்தார். அவர் ‘தலித் முரசு’ குறித்த  ஒரு குறிப்பைக் கீற்றுவின் பின்னூட்டப் பகுதியில் எழுதியதோடு நின்றுவிடாமல் உற்சாகமிகுதியில் “அம்பலமாகியது ஷோபா சக்தியின் மற்றுமொரு பொய்!” என்ற தலைப்போடு அந்தக் குறிப்பை முகப் புத்தகமெங்கும் தூவி வைத்தும் தூற்றினார். கீற்றுவின் பின்னூட்ட மன்னர்களும் கிடைத்தது ‘சான்ஸ்’ என்று ரமேஷைப் பின்தொடர்ந்து கீற்றுவில் என்மீது அவதூறுகளை அள்ளிச் சொரியலாயினர். நடந்தவற்றைத் […]

Continue Reading

தூற்று . கொம் – பகுதி 4

“கீற்று இணையத்தளத்தில் முன்வைக்கப்படும் கேள்விகளிற்கு ஷோபாசக்தி பதிலே சொல்வதில்லை, அவ்வாறு பதில் சொன்னாலும் கேள்விகளைத் திசை திருப்பிவிடுகிறார், எனவே என் கேள்விக்கு என்ன பதில்?” எனச் சிலிர்த்து நிற்கிறார் கீற்று ஆசிரியர் ரமேஷ். அவருடைய சிலிர்ப்பு வெறும் அவதூறுப் பிழைப்பு என்பதை இங்கே விளக்குவதற்குத் தோழர்கள் என்னை அனுமதிக்க வேண்டும். தவிரவும் எனது தோழமைகள் குறித்தும் அவதூறுகளால் பின்னப்பட்ட சில பல கேள்விகளைக் கேட்டு அதற்கும் பதில் எங்கே எனக் கேட்டு அண்ணாமலையாகத் தொடை தூக்குகிறார் ரமேஷ். […]

Continue Reading

தூற்று .கொம் – பகுதி 3

கடந்த ஜனவரி 2011ல் கொழும்பில் நடந்து முடிந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை ‘கீற்று இணையத்தளம்’ எவ்விதம் எதிர்கொண்டது  எனக் கேட்டால், அது கடைந்தெடுத்த பொய்களாலும் திட்டமிட்ட அவதூறுகளாலுமே எதிர்கொண்டது என்பதைத் தவிர வேறு மரியாதையான பதிலொன்றைச் சொல்வதற்கு கீற்று எனக்கு வாய்ப்பு வழங்கவேயில்லை. மாநாட்டிற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாகவே மாநாட்டிற்கான தயாரிப்புப் பணிகள் லெ. முருகபூபதியினதும் ‘ஞானம்’ சிற்றிதழின் ஆசிரியர் ஞானசேகரனது தலைமையிலும் தொடக்கப்பட்டன. மாநாடு நிகழ்வுகள் குறித்துத் திட்டமிடுவதற்காக 2010 ஜனவரியில் பேராசிரியர் கா. […]

Continue Reading

தூற்று .கொம் – பகுதி 2

கீற்று இணையத்தளம் தமிழ் இலக்கியத்திற்கும் மாற்று அரசியல் கருத்துகளிற்கும் பங்களிப்புச் செய்திருக்கிறதா? ஆம்! நிச்சயமாகச் செய்கிறது. பல்வேறு காத்திரமான கட்டுரைகளை அது வெளியிடுகிறது. பல்வேறு சிற்றிதழ்களை அது இணையவெளிக்கு எடுத்து வருகிறது. இதிலெல்லாம் மாற்றுக் கருத்தே என்னிடம் கிடையாது என்பதை முதலிலேயே சொல்லிவைக்க விருப்பம். கீற்று ஆசிரியர் அடிக்கடி ஒரு விடயத்தை வலியுறுத்துகிறார். அதாவது “கீற்று அனைத்துப் பிரிவினருக்குமான தளம், எல்லாக் கருத்துகளையும் நாம் பாரபட்சமின்றி வெளியிடுவோம்” என்கிறார் அவர். இந்தச் சொல்லாடல் ஒருவகையில் சனநாயகத்தின்மீதும் கருத்துரிமைமீதுமுள்ள […]

Continue Reading

தூற்று .கொம்

தோழர்களே! கீற்று.கொம் என்றொரு இணையத்தளம் தொடர்ந்து தூற்றுவதையே ஒரு ‘களப்பணி’யாக முன்னெடுத்து வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். அந்த வரிசையில் கீற்று லேட்டஸ்டாக எழுதியிருக்கும் ‘கீற்றுவை முடக்க அ.மார்க்ஸ் குழு சதி’ என்ற தூற்றலுக்கு நான் அவர்களிற்கு அனுப்பிவைத்த எதிர்வினை இது: காலையில் எழுந்ததும்  கணனியைத் திறந்து அவதூறுகளிற்குப் பதிலளிப்பதே எனது  அன்றாட வேலையாகிப்போனது. சனி, ஞாயிறு கூட லீவு கிடையாது. பதிலளிக்காவிட்டால் அவதூறாளர்கள் “ஏன் பதிலில்லை” எனக் கொக்கரிக்கிறார்கள். பதிலளித்தாலோ தோழமைகள் “எதற்காக நேரத்தையும் சக்தியையும் விரயம் […]

Continue Reading

அவதூறாளர்களே! நீங்களே என்னைப் பேச வைத்தீர்கள்

16 பெப்ரவரி 2011 எனது முகநுாலில் எழுதிய குறிப்பு: ப்ரியா தம்பி நான் தமிழச்சியிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக முகப்புத்தகத்தில் குற்றச்சாட்டை வைத்ததுமே நான் அவரது திரியில் அந்தக் குற்றச்சாட்டைக் கடுமையாக மறுத்தேன். ஆதாரம் காட்ட முடியாதபட்சத்தில் ப்ரியா தம்பி குற்றச்சாட்டை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றேன். ப்ரியா தம்பி, வளர்மதியை ஆதாரம் காட்டி அந்தக் குற்றச்சாட்டை தமிழச்சி ஏற்கனவே எழுதியிருக்கிறார் என்றார். ‘தமிழச்சி எழுதியதாகச் சொல்லப்படும் அந்த இணைப்பைத் தரமுடியுமா’ என நான் மட்டுமல்லாமல் வேறுசிலரும் கேட்டோம். […]

Continue Reading