சொல்லுங்கள் மகேஸ்வரி துரோகியென்று!

-ராகவன் மகேஸ்வரி வேலாயுதம் (1953- 2008) அது தமிழ் தேசிய விடுதலை இயக்கங்கள் முளைவிட்ட 1972- 1977 காலப்பகுதி! இன்றிருப்பதுபோல் தமிழ் தேசிய இயக்கங்களிடையே பாஸிசமும் கொலைக் கலாச்சாரமும் காணக்கிடைக்காத காலமது. மகேஸ்வரி அக்கா சட்டக் கல்லூரி மாணவியாகவும், தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் உறுப்பினருமாயிருந்தார். அக்கால கட்டத்தில் ஒரு இளம்பெண் அரசியலில் ஈடுபடுவதென்பது ஒன்றும் எளிதான நிகழ்வல்ல. 1977 வன்செயல்கள் தமிழ் மக்களை அகதிகளாக்கி இடம்பெயரச் செய்ய மகேசக்கா இடம்பெயர்ந்தவர்களுக்காக உழைப்பதற்குத் தன்னை தயார்ப்படுத்தினார். அவர், […]

Continue Reading

கிழக்கிலங்கைத் தேர்தல்

– இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். வெளிநாடுகளிலிருந்து கொண்டு அறிக்கைவிடும் போலிப் புரட்சிவாதிகள், கிழக்கு மக்களில் எந்தக் கரிசனமும் அற்றவர்கள். தங்கள் அமைப்புக்களில் கிழக்கு மக்களைத் ‘தீண்டாச்சாதியாக’ நடத்துபவர்கள். இவர்கள் பார்வையில் கிழக்கு மக்கள் ‘மோர்தின்னி முட்டாள்க’ளாகும். இந்தக் கேவலங்களின் குரலைக் கேட்காமல் கிழக்கிலங்கை மக்கள் தங்கள் பிரச்சினையைத் தங்கள் கையில் எடுத்துத் தங்கள் தலைமையைத் தேடவேண்டும். எதிர்வரும் 10.05.08ல் நடக்கவிருக்கும் கிழக்கலங்கைத்தேர்தல், இலங்கையில் இதுவரை நடந்த தேர்தல்களைவிட மிகவும் முக்கிய தேர்தலாக அமையவிருக்கிறது. ஜனநாயக சமுதாய அமைப்பின் முக்கிய […]

Continue Reading

அறிக்கை

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஜனநாயகத்தைப் பேணுவோம்! தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்துவோம்!! எதிர்வரும் மே மாதம் 10ம் திகதி கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல் தொடர்பாக கிழக்கு வாழ் தமிழ் – முஸ்லிம் மக்கள் தமது ஆழ்ந்த அக்கறையையும் தெளிவான நிலைப்பாட்டையும் எடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணச்சபைத் தேர்தல் கிழக்கு வாழ் தமிழ் – முஸ்லிம் மக்களின் எதிர்கால வாழ்வுடன் தொடர்புற்று இருப்பதாலும் வேறு எந்தத் தேர்தலிலும் இல்லாத […]

Continue Reading

முதலீட்டியத்தின் எரிபொருள் கனவுக் காலம்

–ராஜன் குறை ‘மொழிபெயர்ப்பில் தொலைந்தவை’ என்ற சொற்றொடர் ஆங்கிலத்தில் புழங்குகிறது. ‘மொழிபெயர்ப்பில் தடம் மாறியவை’ என பட்டியல் போட்டால் அதில் காபிடலிஸத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான முதலாளித்துவத்திற்கு முக்கிய இடம் கொடுக்கவேண்டும். இது காபிடலிஸ எதிர்ப்பை முதலாளி – தொழிலாளி முரண்பாடாக சுருக்குவதை சுலபமாக்கியது. வெகுஜன சிந்தனையில் முதலாளியல்ல, முதலீட்டியமே பிரச்சனை என்ற எண்ணம் எழவே வாய்ப்பில்லாமல் போனதால் அரசு முதலீட்டியம் போன்ற கருத்தாக்கங்கள் வெகுஜன பிரக்ஞையில் தமிழில் பரவலாக கவனம் பெறவில்லை, சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகும் […]

Continue Reading

காணவில்லை!

பிரித்தானியாவில் Watford நகரத்தில் 108, Liar Road என்ற முகவரியில் வசித்து வந்த படத்திலிருக்கும் யமுனா ராஜேந்திரனைக் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் காணவில்லை. மார்ச் மாதம் 11ம் தேதி ‘தேசம்’ இணையத்தளத்தில் “ஷோபா சக்திக்கும் சுகனுக்கும் பத்து நாளில் பதிலோடு வருகிறேன்” என்று சூளுரைத்துவிட்டுச் சென்றவரை நாற்பது நாட்களாகியும் காணவில்லை. கடைசியாக இவர் நடிகர் ரகுவரனின் செத்தவீட்டில் கண்ணைக் கசக்கிக்கொண்டு திரிந்ததாகவும் தகவல்கள் உள்ளன. இவர் ஒளிந்திருக்கும் இடமோ அல்லது இவர் பற்றிய தகவல்களோ தெரிந்தவர்கள் […]

Continue Reading