வருகை – சுகன்

கட்டுரைகள்

ஞானதீபன் வந்தவுடனேயே ஒருவனைக் கொன்று விடுகிறான் எந்த ஆண்டு வந்தான்? ஜோர்மனியா? பிரான்ஸா? எதுவும் தெரியவில்லை தெரிவதெல்லாம்

வந்தவுடனேயே ஒருவனைக் கொன்றுவிடுகிறான்…..

அவனைக் கொல்ல வேண்டும் போலிருந்தது
கொன்றுவிடுகிறான்
பின்னர்;
பின்னர் எதுவுமில்லை

கொல்லப்பட்டவன் தமிழனாயும்
வெள்ளைக்காரனாயும்
இரண்டு உருவங்களில் அவனுக்குத் தெரிகிறான்

இருவரையும் அழைத்துக் கொண்டு பொலிஸிற்க்குப் போகிறான்
அகதிக்காக விண்ணப்பிக்க.

“ஐயா! எனது காலத்துக்கால இடப் பெயர்வுகளையும் சித்திரவதைகளையும் உயிராபத்துகளையும் மற்றும் கஸ்ர-நஸ்ரங்களையும் எங்கிருந்து எப்படித் தொடங்குவதென்று தெரியவில்லை………”

-சுகன்-