கொலையும் கலையும்

ஷோபாசக்திஆணிவேர் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன்னாக நான் ஆணிவேர் குறித்த பதினைந்து இருபது கட்டுரைகளையும் முப்பது நாற்பது கருத்துரைப்புக்களையும் படித்திருப்பேன். ‘ஈழத்துத் திரைப்படத் துறை இந்தப் படத்தின் மூலம் ஒளிர்விடத் தொடங்கிவிட்டது…ஈழப்போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து தேசியத் தலைமையால் திட்டமிட்டு வளர்க்கப்பட்டு வரும் தமிழீழத் திரைப்படத் துறையின் கைகோர்ப்பும் இப்பட வெற்றிக்கு உறுதுணை புரிந்திருக்கிறது’ என ஈழமுரசு எழுதியது. ‘இது தமிழ்த் திரைப்படத் துறையின் பெரும் பாய்ச்சல்’ என்றார் தேவபுத்திரன். ‘ஹொலிவூட் தரத்துக்கு இணையான தொழில் நுட்பம் இனி எங்கள் […]

Continue Reading

சர்வதேச சமூகமும் புகலிட..

சர்வதேச சமூகமும் புகலிட ஜனநாயகச் சக்திகளும் தமிழரசன் *மேற்குலக நாடுகளும் இந்தியாவும் உலக ஜனநாயகத்தின் தலைமைச் செயலகங்களாகத் தமிழ் மக்களிடம் TBCயால் வலியுறுத்தப்படுகின்றன.இந்தியாவைத் திரும்பத் திரும்பத் தமிழ் மக்களைக் காக்கும் மகாசக்தி என்று கட்டமைப்பதும் இந்தியா மீண்டும் இலங்கையில் தலையிட வேண்டும் என்ற கருத்துக்களை மறு உருவாக்கம் செய்வதும் இலங்கைத் தமிழ் மக்கள் இந்திய இராணுவத்திடம் பட்ட அனுபவத்தை அவமானப்படுத்துவதாகும்…  *ஆனந்தசங்கரி புலிகளை விமர்சிப்பது தகர்ந்துவரும் புலிகளை மேன்மேலும் சிதறடிக்கிறது என்பது உண்மையே. ஆனால் இந்த ஒரு […]

Continue Reading

சதாமுக்கு மரண தண்டணை

மனுஷ்ய புத்திரன் 21 ஆம் நூற்றாண்டில் வரலாற்று ரீதியாக முதன்முதலாக பதிவு செய்யப்படும், மிகப்பெரிய தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. உலகளாவிய அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய தீர்ப்பு இது. அவரது இரு சகாக்களுக்கும் இந்த தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு சட்டவிரோத நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட கேலிக்கூத்தான தீர்ப்பு என்று கூறிய சதாமின் வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். சதாம் இன்னும் ஒரு மாதத்தில் தூக்கிலிடப்படுவார், பத்து நாளைக்குள் மேல் முறையீடு செய்யலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து […]

Continue Reading

காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லிக் —-

காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லிக்  காயிதம் போட்டான் வெள்ளக்காரன் -ஷோபாசக்தி- இலங்கை:அய். நாவின் சிறப்பு விசாரணையாளர் பிலிப் அல்ஸ்டனின் அறிக்கையும் அதன் அரசியலும் 2002 ல் பிறக்கும் போதே சவலைக் குழந்தையாகப் பிறந்த இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான யுத்த நிறுத்த உடன்படிக்கை லஷ்மன் கதிர்காமர் கொலை, பொங்கியெழும் மக்கள் படையின் வலிந்த தாக்குதல்கள், அல்லைப்பிட்டி, வங்காலை, வள்ளிபுனம், ஹெப்பட்டிக்கொலாவப் படுகொலைகள், மாவிலாறு, மூதூர், சம்பூர் மோதல்கள் போன்ற எண்ணற்ற கரங்களால் தூக்கிச் சவப்பெட்டியில் வைக்கப்பட […]

Continue Reading

டிட்டோயிசத்தின் கடைசிப் போராளி

மிலசவிக் – டிட்டோயிசத்தின் கடைசிப் போராளி  தமிழரசன் 32 இனங்களையும் வித்தியாச மக்கள் பிரிவுகளையும் உள்ளடக்கிய மொத்தமாக 22 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நாடாக யூகோஸ்லாவியா இருந்தது. தற்போது 4,60,000 மக்கள்தொகையும் பல்வேறுபட்ட இனங்களையும் கொண்ட மொன்ரநீக்ரோ கடைசியாக யூகோஸ்லாவியாவின் சமஸ்டிக் குடியரசில் இருந்து பிரிந்த பின்பு 10 மில்லியன் மக்கள்தொகையுடன் சேர்பியா மட்டும் மிஞ்சியுள்ளது. அரை நூற்றாண்டுகள் கூடி வாழ்ந்த வித்தியாசமான மதம், இனம், மொழி கொண்ட மக்கள், யூகோஸ்லாவிய தேசத்தின் குடிமக்களாகத் தம்மை அடையாளம் கண்டவர்கள் […]

Continue Reading

கியூபா – செப்டம்பர் 16/17

அழகலிங்கம்   புதிய சக்தியாகப் பரிணமிக்கும் அணிசேரா நாடுகளின் இயக்கம் அணிசேரா நாடுகளின் 14வது மகாநாடு 2006 செப்டம்பர் 16 – 17 இல் கியூபாவின் தலைநகரமான ஹவானாவில் நடைபெற்றது. இதிலே ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகளில் மூன்றில் இரண்டு பகுதி நாடுகள் கலந்துகொண்டன. 118 நாடுகளின் இராஜதந்திரிகள், 55 நாடுகளின் இராஜியத் தலைவர்கள், 90 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இம் மாநாட்டில் பங்குகொண்டனர். சோவியத் யூனியனினதும் கிழக்கு ஐரோப்பிய சோஸலிசத்தினதும் வீழ்ச்சிக்குப் பிறகு அணிசேரா நாடுகள் […]

Continue Reading