மரச் சிற்பம்

கதைகள்

பாரிஸ் நகரத்தில் இந்த வருடம் நிகழவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளைக் குறித்துத் தினப் பத்திரிகையிலிருந்த தலைப்புச் செய்தியை மீறியும் எடுத்த எடுப்பிலேயே இன்னொரு செய்தி எனது கண்களை இழுத்தது. கண்கள் அந்தச் செய்தியை வாசிக்கும்போது, எனக்குக் கிட்டத்தட்டச் சித்தம் கலங்கிவிட்டது என்றே சொல்லலாம். நான் அந்தச் செய்தியை நம்ப முடியாமல் மூன்று தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்தேன். பிரான்ஸில் இப்போது படு வேகமாக முன்னணிக்கு வந்துகொண்டிருக்கும் தேசியவாதக் கட்சியொன்றின் தலைவர்களில் ஒருவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “எமது தந்தையர் நாடு […]

இமிழ் : எழுத்தாளர்கள் தேர்வும் தொகுப்பும்

கட்டுரைகள்

51-வது இலக்கியச் சந்திப்புக் கதைமலரான ‘இமிழ்’ குறித்தும், தொகுப்பில் எழுதியிருக்கும் எழுத்தாளர்களைக் குறித்தும் மார்ச் 21-ம் தேதி, சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து, தொகுப்புக்கான எழுத்தாளர்களைத் தேர்வு செய்த முறைமை குறித்துக் கேள்விகளும் விமர்சனங்களும் முகநூலில் பரவலாக வைக்கப்பட்டன. மலருக்கான கதைகளைக் கோரி ஏன் ‘பொது அறிவித்தல்’ கொடுக்கவில்லை என்பதும் அடிக்கடி எழுப்பப்பட்ட கேள்வியாக இருந்தது. தொகுப்பில் இடம்பெற்ற இருபத்தைந்து எழுத்தாளர்களையும் தேர்வு செய்தவர்கள் என்ற முறையில் தர்மு பிரசாத்தும் நானும், பத்தொன்பது உறுப்பினர்களைக் கொண்ட 51-வது இலக்கியச் […]

இமிழ் – வால்டேயரை நினைவுபடுத்தல்

கட்டுரைகள்

I do not agree with a word that you say, but I will defend to the death your right. -Voltaire ‘இமிழ்’ கதைமலரில் யதார்த்தனின் கதை இடம்பெற்றது, ‘இமிழ்’ விமர்சனக் கூட்டத்தில் எழுத்தாளர் கிரிசாந் கலந்துகொள்வது ஆகியவை குறித்து முகநூலில் மதுரன் ரவீந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கு நான் அளித்தல் பதில் இங்கே: இலக்கியச் சந்திப்பில் என் நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்திருந்தேன். இங்கே இன்னும் சற்று விரிவாக: 1. யதார்த்தன் […]

சித்திரப்பேழை

கதைகள்

‘தமிழீழத்தை ஆதரிக்கும் மாவோயிஸ்டுக்கு மணமகள் தேவை’ என்று அமரேசன் செய்திருந்த விளம்பரத்தைப் பார்த்துத்தான், முப்பது வருடங்களுக்கு முன்னால் அவரை யசோதா பதிவுத் திருமணம் செய்துகொண்டார். அப்போது அமரேசனுக்கு முப்பத்து நான்கு வயது. யசோதாவுக்கு இருபத்தெட்டு வயது. சென்ற வருடத்தின் கொடுங்குளிர் காலத்தில், அமரேசன் புற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது தொண்டையில் துளையிட்டுப் புகுத்தப்பட்டிருந்த மெல்லிய குழாய் காரணமாக அவரால் பேச முடியவில்லை. அவர் பேசுவதற்கு முயற்சிக்கவே கூடாது என்றுதான் மருத்துவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தார்கள். அந்த நிலையிலும் அமரேசனின் […]

ஆறாங்குழி

கதைகள்

இரும்பு மனிதன் எனப் பொருள்படும் ‘யக்கடயா’ என்ற பெயரால் என்னை ஒருகாலத்தில் இராணுவத்தில் அழைத்தார்கள் என்பதைத் தவிர, என்னைக் குறித்த தனிநபர் தகவல்களை நான் உங்களிடம் சொல்லப் போவதில்லை. இலங்கை வரலாற்றிலேயே நெடுங்காலம் தலைமறைவாக வாழும் மனிதன் நான்தான். முப்பத்து மூன்று வருடங்கள் மறைந்து வாழ்கிறேன். இப்போது நான் வசிக்கும் நாடு இலங்கைக்குத் தெற்குத் திசையில் உள்ளது என்பதோடு என்னுடைய அறிமுகத்தை நிறுத்திக்கொள்கிறேன். நான் வசிக்கும் கடற்கரையோர சிறு நகரத்தில் வருடம் முழுவதுமே வெயில் உண்டு. மிகப் […]

காலப்புள்ளி

கட்டுரைகள்

‘கருப்புப் பிரதிகள்’ வெளியிட்டிருக்கும் ‘டானியல் அன்ரனி கதைகள் – அதிர்வுகள் – கவிதைகள்’ தொகுப்பு நூலுக்கு எழுதிய முன்னுரை: நமது கையிலிருக்கும் இந்தச் சிறிய பிரதி டானியல் அன்ரனி அவர்களுடைய மொத்த எழுத்துகளின் ஒரு பகுதியே. கண்டடைய முடியாதவாறு தொலைந்துபோயிருக்கும் கணிசமானளவு சிறுகதைகளையும், எழுதி முடித்தும் அச்சேறாத ‘இரட்டைப்பனை’, ‘செவ்வானம்’ நாவல்களையும் கொண்டது அவரது படைப்புத் தடம். அவர் ‘அமிர்த கங்கை’ இதழில் எழுதத் தொடங்கியிருந்த குறுநாவல் தொடருக்கு ‘தடம்’ எனப் பெயரிட்டிருந்தார். அது முழுமையடையாமல் ஓர் […]

கலா கலகக்காரர்

கட்டுரைகள்

என்னுடைய பதினான்காவது வயதில், நான் முதன்முறையாக மு.நித்தியானந்தன் என்ற பெயரைக் கேள்விப்பட்டேன். இலக்கியவாதியாக அல்லாமல், ஒரு விடுதலைச் செயற்பாட்டாளராகவே அவர் எனக்குப் பத்திரிகைகள் வாயிலாக அறிமுகமானார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான அவரது உறவாலும், புலிகள் இயக்கத்தின் ஆரம்ப காலங்களிலே அவர்களுக்கு உற்ற துணையாகவிருந்ததாலும் நித்தியானந்தன் இலங்கை அரச படையினரால் கைது செய்யப்பட்டு, கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானவர் என்பதை வாரத்திற்கு ஒருதடவையாவது பத்திரிகைகள் எழுதிக்கொண்டேயிருந்தன. வெலிகடைச் சிறையில் நடந்த படுகொலைகளின் போது, ஆயுதமேந்திய கொலையாளிகளை வெற்றுக் கரங்களால் எதிர்த்துத் […]