இச்சா – ஆலா பறவையின் குறிப்பு

தோழமைப் பிரதிகள்

– இரா.சிவ சித்து “உயிர் தப்பிப் பிழைத்திருக்கும் என்னைப் போன்றவர்கள் உண்மையின் சாட்சியங்கள் அல்ல, நாங்கள் ஊமைகளாகவே மீண்டோம். மண்ணில் ஆழப் புதைக்கப்பட்டவர்களே முழுமையான சாட்சியங்கள்” ~ நாவலில் இருந்து ஈழத்தில் இறுதிகட்டப் போர் நடந்து கொண்டிருக்கும்போது எனது வயது பதினேழு. முதிராத வயதில், இணையம் எனக்குக் கைவராத காலத்தில், தென்தமிழகத்தின் ஒரு மூலையில் பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருக்கும் என் வட்டத்திற்கு போர் பற்றிய சித்திரத்தை தந்துகொண்டிருந்தது என்னவோ தொலைக்காட்சிகளில் வந்த துணுக்குச் செய்திகள் மட்டும்தான். அதுவும் சோற்றுத்தட்டுடன் […]

இச்சா – சில கேள்விகள்

நேர்காணல்கள்

‘இச்சா’ நாவலை முன்வைத்து கனலி கலை இலக்கிய இணையத்தளம் சார்ப்பாக க. க.விக்னேஷ்வரன் நிகழ்த்தி, 14.12.2019-ல் வெளியாகிய நேர்காணல்: ‘இச்சா’ நாவலின் கரு எங்கு எப்படிபட்ட மனநிலையில் உருவாகியது? இன்று நாவலை நீங்கள் வாசிக்கும் போது, அந்த கரு அல்லது எண்ணம் சரியாக வந்துள்ளதாக நினைக்கிறீர்களா? ‘Dheepan’ திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட போது, அந்த விழாக்களில் நான் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களதும் பார்வையாளர்களதும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருந்தது. அந்தப் படத்தில் நான் நடிகன் மட்டுமே என்றபோதிலும், […]

பிரபஞ்ச நூல்

கதைகள்

இந்தக் கதையைத் தனது இரகசியக் குரலைக் கலையவிடாது, தகரத்தில் மெல்லிய ஆணி முனையால் கிறுக்குவது போன்ற கூசிய தொனியில் ஏற்ற இறக்கங்களின்றி சித்திரைலிங்கம் என்முன்னே சொல்லத் தொடங்கினான். நடுநடுவே கதையை நிறுத்தி அதே இரகசியக் குரலில் என்னிடம் சந்தேகங்களும் கேட்டான். நான் 2012-ல் சித்திரைலிங்கத்தை சென்னை புத்தகச் சந்தையில் கடைசியாகப் பார்த்தது. மனைவி பிள்ளைகளுடன் ‘க்ரியா புத்தகக் கடை’க்குள் நின்றுகொண்டிருந்தான். கையில் ‘கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ வைத்திருந்தான். என்னைக் கண்டதும் முதல் வார்த்தையாக “மச்சான் நீ […]

ஆத்தாதவன் செயல்

கட்டுரைகள்

‘கூத்தாடுவதும் குண்டி நெளிப்பதுவும் ஆத்தாதவன் செயல்’ என்பது யாழ்ப்பாணத்தில் பிரபலமான பழமொழி. கூத்தாடுபவர்களைக் கீழிறக்கி ஏளனமாக மதிப்பிடும் யாழ் சாதியச் சமூகத்தின் குறைப் பார்வையை இப்பழமொழி அறிவிக்கிறது. யாழில் கூத்துகளும் இசை நாடகங்களும் தழைத்தோங்கியிருந்த காலத்தில் மீனவச் சாதியினரும் தலித்துகளுமே இந்தக் கலைகளைப் பரம்பரை பரம்பரையாகப் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்தார்கள் . நான் பால பருவத்திலேயே கூத்துக்காரனாகி விட்டேன். முதற் கூத்து ‘பண்டாரவன்னியன்’. அண்ணாவியார் நாரந்தனை சின்னப்புவின் இயக்கத்தில் தென்மோடிப் பாணியிலமைந்த அந்தக் கூத்தில் எனக்கு […]

ஆயிரத்தொரு சொற்கள்

கட்டுரைகள்

நான் ஒன்றரை வயதிலேயே நன்றாகப் பேசத் தொடங்கிவிட்டதை, எனது அம்மா சரியாக ஞாபகம் வைத்திருக்கிறார். ஆனால் நான் எத்தனை வயதில் எழுதத் தொடங்கினேன் என்பது அவருக்கோ எனக்கோ சரியாக ஞாபகமில்லை. பள்ளிப் பருவத்திலிருந்தே எழுதிக்கொண்டிருக்கிறேன். பாடசாலையில் நாங்களே நடிக்கும் ஓரங்க நாடகங்களைத்தான் முதலில் எழுதினேன். 1981 இனவன்முறையில், எங்கள் கிராமத்திலிருந்து நான்கு கிலோ மீற்றர்கள் துாரத்திலிருந்த யாழ்ப்பாணப் பொது நுாலகம் இலங்கை அமைச்சர்களின் உத்தரவின்பேரில் போலிஸாரால் முற்றாக எரியூட்டப்பட்டபோது எனக்குப் பதின்மூன்று வயது. 90 000 நுால்களும் […]

புலிகளின் தொடர்ச்சியாக இருப்பதற்கு நீங்கள் புலிகளாக இருக்க வேண்டும்!

கட்டுரைகள்

முள்ளிவாய்க்காலில் புலிகள் இயக்கம் அழிக்கப்படுவதற்குப் பதினைந்து வருடங்கள் முன்னதாகவே புலம் பெயர் நாடுகளில் வலுவாக இருந்த புலிகளின் கிளைகளைச் சிறுகச் சிறுக அழிக்க, மேற்குநாடுகள் நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியிருந்தன. புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாகக் மதிப்பிடப்பட்டு தடைவிதிக்கப்பட்டது. புலிகளின் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு அய்ரோப்பிய – அமெரிக்கச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு குறைந்தபட்சத் தீர்வுக்குப் புலிகள் சம்மதிக்க வேண்டும், புலிகளிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்பதே மேற்கு நாடுகளின் உறுதியான நிலைப்பாடாக இருந்தது. இந்த […]

உடனடித் தேவை தத்துவ ஆசிரியரல்ல, தமிழ் ஆசிரியரே!

கட்டுரைகள்

நேற்று முன்தினம் விகடன் தடம் இதழில் வெளியாகிய என்னுடைய கட்டுரையில் இப்படியொரு பந்தி வரும்: “புலிகள் விட்டுச் சென்ற அரசியல் வெற்றிடத்தை நிரப்ப அல்லது புலிகளின் தொடர்ச்சியாகக் காட்டிக்கொள்ள, புகலிட நாடுகளில் பல முயற்சிகள் நடந்தன. நாடு கடந்த அரசு, பிளவுண்ட புலிகளின் சிறு சிறு குழுக்கள் என்பன ஒரு பக்கமும், அதுவரை இறுக்கமான இடதுசாரித் தத்துவங்களை உதிர்த்துக்கொண்டிருந்த குழுக்கள் ‘சமவுரிமை இயக்கம்’, ‘மே 18 இயக்கம்’, ‘தமிழ் சொலிடாரிட்டி’ என்ற பெயரிலெல்லாம் மறுபக்கத்திலும் குத்துக்கரணங்கள் போட்டுப் […]