மூன்று ஆண்டுகளிற்கு முன்பு வெளியான எனது ‘கண்டிவீரன்’ சிறுகதைத் தொகுப்பை நான் கலைஞர் மு.கருணாநிதிக்கு சமர்ப்பித்திருந்தேன். அந்தச் சமர்ப்பணக் குறிப்பில் அவரை திரைப்பட வசனங்கள் ஊடாக எனக்குத் தமிழைக் கற்றுக்கொடுத்த ஆசான் எனப் பதிவு செய்திருந்தேன். தமிழக அரசியலிலும் தமிழ் சினிமாவிலும் கலைஞரின் வீறுகொண்ட எழுச்சி 1940-களின் இறுதியில் ஆரம்பிக்கிறது. அதே வேளையிலேயே தி.மு.க.வின் தாக்கமும் கலைஞரின் திரைப்படங்களும் அவரது எழுத்துகளும் கடல் கடந்து இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இலங்கைத் தமிழர்களின் வீடுகளிலே அறிஞர் அண்ணாத்துரையின் படமும் […]
காலா : இன்னொரு பராசக்தி
இப்போதெல்லாம் திரையரங்குகளிற்குச் சென்று தமிழ்ப் படம் பார்ப்பதில் ஆர்வம் போய்விட்டது. வயதாக வயதாகச் சகிப்புத்தன்மை குறைந்துவருவது வழமைதானே. ஆனால் இன்று திரையரங்கம் சென்று காலா பார்த்தேன். பாரிஸில் கடந்த மூன்று மாதங்களாகவே தொடருந்து வேலைநிறுத்தம். ‘சனாதிபதி மக்ரோன் அவர்களே பிரான்ஸ் விற்பனைக்கல்ல’ என்பது போராடும் தொழிலாளர்களின் முழக்கமாயிருக்கிறது. இந்த தொடருந்துப் பிரச்சினையாலும் திரையரங்கில் முதற் சில காட்சிகளில் ரஜினி ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரக் கூச்சல்களுக்கு அஞ்சியும் சில நாட்கள் கழித்து படத்தைப் பொறுமையாகப் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் […]
48வது இலக்கியச் சந்திப்பு – ரகறொன்ரோ – TKARONTO
காலம்: ஜூன் 2, 3ம் நாட்களில் இடம்: 440 McLevin Avenue, Scarborough, ON M1B 5J5 சனிக்கிழமை, 2018 ஜூன் 2: நிகழ்ச்சி நிரல் காலை 10:00: நிகழ்ச்சி ஆரம்பம் வரவேற்பும் சிற்றுண்டியும் ஓவியக் கண்காட்சி நூலக நிறுவனத்தின் கண்காட்சி புத்தகக் கண்காட்சி ஆரம்பம் காலை 11:00: ஆரம்ப நிகழ்வு வரவேற்பும் மௌன வணக்கமும் பூர்வீக மக்களின் நில உரிமை பற்றிய அறிவிப்பு இலக்கியச் சந்திப்பின் வரலாறு – அதீதா காலை 11:20 – பி.ப […]
இலங்கையில் இந்துத்துவம் -2
இலங்கையில் ஆர்.எஸ்.எஸ். அபாயம் குறித்து நான் எழுதிய கட்டுரை மேலோட்டமானதென மேலோட்டமாகச் சொல்லப்படுவதால் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. சிவசேனை இலங்கையில் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாகவும் பின்பாகவும் இலங்கை தொடர்பான இந்திய இந்துத்துவ சக்திகளின் நிலைப்பாடுகளையும் கூற்றுகளையும் நான் தொடர்ச்சியாகப் படித்தும் கவனித்தும் பேசியும் வந்திருக்கிறேன். தங்களது கடையை இலங்கையில் விரிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பது மிக வெளிப்படையான உண்மை. ஆகவே அவர்கள் இலங்கையின் சிவசேனைக்கு வாழ்த்தும் ஆதரவும் தெரிவிக்கிறார்கள். இந்தச் செய்திகளை ஆங்கிலத் தினப் பத்திரிகைகளை விடவும் தமிழக […]
இலங்கையில் ஆர். எஸ். எஸ். வரும் ஆனா வராது!
ஒரு கிழமையாகவே, ‘இலங்கையில் ஆர்.எஸ்.எஸ். அபாயம்’ என்ற எச்சரிக்கை மணி முகநுாலில் திரும்பிய பக்கமெல்லாம் அடித்துக்கொண்டிருக்கிறது. எப்படி ஆர். எஸ். எஸ். இலங்கையில் நுழைந்ததென்பதைக் கவனித்தால் அது மிக மிகச் சுலபமான வழியில் இலங்கையில் கால் பதித்திருப்பதை விளங்கிக்கொள்ளலாம். ஒரு அதாவது ஒரேயொரு இலங்கை முகநுால் பதிவர் ”ஆர்.எஸ்.எஸ்ஸின் சேவை இலங்கைக்குத் தேவை” என எழுதிவிட்டார். உடனே இலங்கையில் ஆர். எஸ். எஸ். அபாயம் தோன்றிவிட்டதாக எதிர்ப்பதிவுகள் முகநுாலில் தோன்றின. ஓர் அமைப்பு இலங்கையில் நுழைவதற்கு ஒரேயொரு […]
அம்பேத்கர் தூஷணம் அல்லது கேள்வியின் நாயகி
முட்டாள், விஷமத்தனமானவர், பைத்தியகாரத்தனமானவர், பார்ப்பனர்களிலும் கீழானவர், பெண்களை அவமதிப்பவர், அரைவேக்காடு, உழைப்புச் சுரண்டலிற்கு ஆதரவானவர், பிதற்றலாளர், அடாவடியானவர், சாதி ஒழிப்பிற்கு எதிரானவர், சாதி ஒழிப்பு எக்காலத்திலும் சாத்தியமில்லை என்றவர், சொத்துடமை வர்க்கத்தின் ஆதரவாளர், அறியாமைகொண்டவர், மூடநம்பிக்கையாளர் என்றெல்லாம் அண்ணல் அம்பேத்கரை முழு நீளத்திற்குத் துாஷணை செய்து ரோயல் டெம்மி சைஸில் 416 பக்கங்களில் ஒரு நூல். நூலைச் சுந்தரத் தெலுங்கில் வசைத்திருப்பவர்: ரங்கநாயகம்மா. தமிழில் மொழிபெயர்த்திருப்பவர்: கொற்றவை. நூலின் பெயர் “சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! […]
இலங்கையில் வன்முறைக்குள் வாழ்தல்
அனைவருக்கும் வணக்கம், நாங்கள் இன்னும் சற்று நேரத்திலே பார்க்கயிருக்கும் Demoin in paradise என்ற ஆவணப்படம் 1980-களிலே ஸ்ரீலங்காவில் நிகழ்ந்த வன்முறைகள் பற்றிப் பேச இருக்கிறது. ஆனால் இந்த வன்முறை ஒன்றும் கடந்த கால கசப்பான ஞாபகங்கள் மட்டுமல்ல, இன்றுவரை இந்த வன்முறையும் வன்முறைக்குள் வாழ்வும் இலங்கையில் தொடர்ந்தவண்ணமே உள்ளன. இந்த வன்முறைத் தொடர்போக்கு இனியும் இலங்கையில் நிகழாது என்பதற்கு எந்த உத்தரவாதமான சூழலும் கிடையாது என்பதே வருந்தத்தக்க உண்மை. இந்த மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இலங்கையில் […]