எதிர்வினை: அ.மார்க்ஸ்

கட்டுரைகள்

‘அம்மா’ இதழில் யமுனா ராஜேந்திரன் எழுதிய “பின்நவீனத்துவம், தலித்தியம், மார்க்ஸியம்” என்ற கட்டுரைக்கு எதிர்வினையாகத் தோழர்.அ.மார்க்ஸ் எழுதிய “அவதூறுகளுக்குப் பதிலளிப்பது அலுப்பைத்தான் தருகிறது” என்ற கட்டுரை ‘அம்மா’ இதழ் 10ல் வெளியாகிற்று. யமுனா தத்துவார்த்தப் போர்வைக்குள் பதுங்கிக்கிடந்து எழுதிய அவதூறுகளுக்குப் பதிலளித்திருந்த அ. மார்க்ஸ் யமுனாவின் திடீர் மார்க்ஸிய வேடத்தையும், யமுனாவின் கட்டுரையில் பொதிந்திருந்த ஆதிக்கசாதித் திமிரையும், யமுனாவின் அறிவுஜீவி நாடகத்தையும் தோலுரித்திருந்தார். இன்று ‘தேசம்’ இணையத்தளத்தில் யமுனா தொடக்கிவைத்து ‘சத்தியக் கடதாசி’யில் நடந்து கொண்டிருக்கும் விவாதங்களின் […]

எதிர்ப்பதும் எமது மரபு!

அறிவித்தல்கள்

-ஷோபாசக்தி யமுனா ராஜேந்திரன் தேசம் இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையில் ஒரு பகிரங்க கருத்தாடலுக்கு என்னை அழைத்துள்ளார். நான் மிக்க மகிழ்ச்சியுடன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன். எனக்கும் யமுனாவுக்கும் இனி நடக்கவிருக்கும் கருத்தாடலில் என் தரப்பிலிருந்து வெளியாகும் முதலாவது கட்டுரையிது. பத்து வருடங்களாகத் தன்னை நான் தொடர்ந்து தாக்கிவருவதாகக் குறைப்படும் யமுனா தாக்குதலிற்கான காரணங்களாக என்னில் பொறாமை, தந்திரோபாயம், சதி செய்தல், அவதூறு செய்தல், போன்ற பண்புகள் குவிந்திருப்பதாகவும் இப் பண்புகளுடைய ஒருவரைக் குமிஞ்சானெத் தங்கள் ஊரில் அழைப்பார்கள் […]

பொதுக்கூட்டம்

கட்டுரைகள்

ட்ரொட்ஸ்கிச தலைவர் கீர்த்தி பாலசூரிய மறைவின் இருபதாம் ஆண்டு நிறைவு 16.03.2008 ஞாயிறு, பிற்பகல் 2. 30 மணி AGECA 177 rue de Charonne 75011 Paris Métro: Charonne – ligne 9, Alexandre Dumas – ligne 2, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத்தளமும் பாரிசில் மார்ச்16 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் தலைவரும் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச் […]

எதிர்வினையாற்றுவது நம் மரபு!

கட்டுரைகள்

ஜமுனா ராஜேந்திரன் ‘தேசம்’ இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையின் மீதான எதிர்வினையாய் சில குறிப்புகள்: – சுகன் ‘குமிஞ்சான்’, ‘குள்ளன்’ என்று ஒருவரை எள்ளி நகையாடும் மனோபாவத்திடம் விவாதிப்பது மனித உணர்வுள்ள எவருக்கும் சாத்தியமில்லை. இலக்கியம் அரசியல் இவற்றின் பேரால் இத்தகைய வக்கிரங்களை எதிர்கொள்வது அவற்றிற்கு மரியாதை செய்வதுமாகாது. கவுண்டமணியின் ‘கோமுட்டித் தலையா’, ‘நெல்சன் மண்டலோ மண்டையா’ போன்ற வசவுகளுக்கும் ‘குமிஞ்சான்’ என்று வசைபாடும் மனநிலைக்குமுள்ள அருவருப்பான ஒப்புவமை, ஒற்றுமையைக் கவனிக்கும் ஒருவருக்கு இதுதான் கவுண்டர் கல்ச்சரோ ( […]

‘குழந்தைப் போராளி’ நூல் வெளியீட்டு நிகழ்வு

அறிவித்தல்கள்

குழந்தைப் போராளி’, ‘நான் ஒரு மனு விரோதன்’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு தேசம் சஞ்சிகையினால் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சைனா கெய்ரெற்ஸி என்பவரால் டொச் மொழயில் எழுதப்பட்ட இந்நூல் சுவிஸ் தேவா அவர்களினால் “குழந்தைப் போராளி” என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. ‘நான் ஒரு மனு விரோதன்’ என்ற மற்றைய நூல் ஆதவன் தீட்சன்யா வழங்கிய நேர்காணல்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. “குழந்தைப் போராளி” நூல் வெளியீட்டு அமர்விற்கு ராகவன் தலைமை தாங்ககுகிறார். […]